தீபாவளி பண்டிகையையொட்டி 8 சிறப்பு ரெயில்கள் இயக்கம்!

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை என்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

எனவே தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரெயில்கள் இயக்குவது குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இதையடுத்து தீபாவளி பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை, நாகர்கோவில், கோவை, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 8 சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை ரெயில்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இன்னும் கூடுதல் ரெயில்கள் இயக்கவும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரெயில்வே இன்னும் சில நாட்களில் வெளியிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment