உலக கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் ரிவான் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் !!

கார்டிங் ரேஸ் போட்டிகளில் இந்திய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தவரும், பஹ்ரைனில் உள்ள சாகிர் இன்டர்நேஷனல் எஃப்1 சர்க்யூட்டில் நடைபெறும் உலக கார்டிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாட்டின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள விளையாட்டு வீரர், மரியாதை நிமித்தமாக தமிழகவிளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 7 முறை தேசிய சாம்பியனான ப்ரீதம் தேவ் மோசஸின் மகன் ரிவான் தேவ் ப்ரீதம் 2022 ஆம் ஆண்டு FMCSI தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப்பில் ஒரு புதிய வீரராக கார்டிங்கைத் தொடங்கினார். 2023 ஆம் ஆண்டில், பெங்களூர் கார்டோபியா சர்க்யூட்டில் நடைபெற்ற 3 சுற்று சாம்பியன்ஷிப் போட்டியான மெக்கோ மெரிட்டஸ் கோப்பை போட்டியில் 10 வயது சிறுவனான ரிவான் கலந்துகொண்டார். ரிவான் 6 பந்தயங்களில் 3ல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். பிறகு சமீபத்தில் முடிவடைந்த…

Read More

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் 3 கோடி ரூபாய் பரிசு

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்பவருக்கு 3 கோடியும், வெள்ளி பதக்கம் வெல்பவருக்கு 2 கோடியும், வெண்கல பதக்கம் வெல்பவருக்கு 1 கோடியும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை இன்று(ஜூன் 26) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, மெய்யநாதன், எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், பரந்தாமன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் மீதமுள்ளவர்களுக்கு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஏற்கனவே வாள் வீராங்கனை பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மீதமுள்ள 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையை…

Read More