மகாபலிபுரத்தில் பிரதமர் – சீன அதிபர் சந்திப்பு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நம் இந்தியப் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று துவங்கி பிரதமர் சீன அதிபர் வந்து செல்லும் வரை மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து பாரம்பரிய சிற்ப வளாகங் களையும் மூட மாவட்ட கலெக்டர் பொன்னையா தொல்லியல் துறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்துள்ளார். இந்தியா – சீனா இடையேயான முறைசாரா உச்சி மாநாடு வரும் 11,12 தேதிகளில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. அதில், பிரதமர் மோடி – சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் கலந்துகொண்டு இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரு நாட்டுத் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள், குப்பைகள் அகற்றப்பட்டு, சுவர்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. மாமல்லபுரமே புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு…

Read More

தமிழுக்கு புது டைப்பான படம் ‘கைதி’ – தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ஹேப்பி!

கார்த்தி நடிப்பில் Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “கைதி”. மாநாகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார். பிலோமின்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். N சதீஷ்குமார் கலைஇயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். இப்படத்தில் கார்த்தியுடன் நடிகர்கள் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாகும் “கைதி” திரைபடத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சினிமா உலகத்தையே கலக்கியது. இந்த நிலையில் இன்று அனைவரையும் பேரானந்தத்தில் ஆழ்த்திய “கைதி” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியீட்டு விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள…

Read More