புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை தொகுதியில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து அதிமுகவில் இருந்தே ஒருவர் சுயேச்சை வேட்பாளராக நேற்று (மார்ச் 18) வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதிமுகவில் புதுக்கோட்டை மாவட்டம் என்றாலே அமைச்சர் விஜயபாஸ்கர்தான் என்று ஆகிவிட்ட நிலையில்… இன்று அதிமுகவின் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் விராலி மலை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “இன்று விராலி மலையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த நான் விராலிமலையில் வேட்பாளராக போட்டியிடக் காரணம், அமைச்சர் விஜயபாஸ்கரின் சாதிய சர்வாதிகார அடக்கு முறைப் போக்குதான். அவர் தொடர்ந்து இந்த மாவட்டத்தில் தன்னைத் தவிர வேறு எவரும் இந்த இயக்கத்தில் வளர்ந்துவிடக் கூடாது, வேறு எவரும் அதிகாரத்தில்…
Read MoreDay: March 19, 2021
தேர்தல்களத்தில் குஷ்பூ காணாமல்போன கௌதமி
ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ கலாச்சாரம் நிறைந்த பா.ஜ.க தமிழகத்தில் இந்த சட்டசபைத் தேர்தலில் முத்திரை பதிக்க முடிவுசெய்து நடிகைகளைக் களத்தில் இறக்க முயன்றது. பா.ஜ.க சார்பில் போட்டியிட நடிகை குஷ்புவிற்கு சீட் கொடுக்கப்பட்டது. கவுதமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ராஜபாளையத்தில் கவுதமியும், சேப்பாக்கத்தில் குஷ்புவும் களமிறங்க விரும்பினர். பா.ஜ.க தலைமையும் அவர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்து, அந்தந்த ஊர்களுக்குச் சிலமாதங்களுக்கு முன்பே அனுப்பியது. இருவரும் தொகுதிக்குள் நகர்வலம் துவங்கியதால், பா.ஜ.க வட்டாரமே களைகட்டியது. திடீர் திருப்பமாக, சேப்பாக்கம் தொகுதி, பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. ‘சிவகாசி வேண்டாம்’ என, ராஜபாளையம் வந்து விட்டார், ராஜேந்திர பாலாஜி. இதனால் ‘அப்செட்’ ஆனாலும், இரு நடிகைகளும் காட்டிக் கொள்ளவில்லை. ‘கட்சி முடிவை ஏற்கிறேன்’ என்றார் குஷ்பு. ‘ராஜபாளையம் மக்கள் காட்டிய அன்புக்குத் தலைவணங்குகிறேன். அவர்களுடன் உறவு நிலைத்திருக்கும்’ என்றார் கவுதமி. இதற்கிடையில், குஷ்புக்கு ஆயிரம் விளக்கு தொகுதி…
Read More