தனது காதலை அங்கீகரிக்காத அம்மாவுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் தோழியின் ஊருக்கு பயணமாகிறார். ரயிலில் அவரை சந்திக்கும் டிக்கெட் பரிசோதகர் யோகி பாபு, லவ்லினிடம் நடந்ததை கேட்டு அறிந்து கொள்கிறார். அப்போது அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் சொல்கிறார். நான்குமே தாயின் பெருமைக்கானது. முதல் கதையில் அம்மா பாசத்திற்காக ஏங்கும் மும்பை தாதாவாக நட்டி வருகிறார். அவரைப் போட்டுத்தள்ள துடிக்கும் கேரக்டரில் வரும் சுரேஷ் மேனன் தமிழ்நாட்டில் இருந்து ஓடிவந்த கிராமத்து காதல் ஜோடிகளை இதற்கென பயன்படுத்திக் கொள்கிறார். காதலன் கத்தி நட்டியை பதம் பார்த்ததா? காதல் ஜோடிகள் அங்கிருந்து உயிருடன் தப்ப முடிந்ததா? பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் அம்மா, அப்பா கதை இரண்டாவது. (நான்கு…
Read MoreDay: March 9, 2025
கிங்ஸ்டன் – திரை விமர்சனம்
தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலில் மீன் பிடிக்க தடைவிதிக்கப் பட்டிருக்கிறது. இந்த தடையை மீறி மீன் பிடிக்க சென்றவர்கள்பிணமாக கரை ஒதுங்குவார்கள். இதற்கு இடையே அந்த ஊரின் கன்னிப்பெண்களும் அவ்வப்போது காணாமல் போகிறார்கள். உள்ளூர் தாதா தாமஸிடம் (ஷிபுமோன்) மீனவராக பணியாற்றும் நாயகன் கிங் (ஜி.வி.பிரகாஷ்) இந்த மர்மத்தை கண்டறிய நண்பர்களோடு துணிச்சலாக கடலுக்குள் படகில் பயணப்படுகிறார். அவர் கடல் மர்மத்தை கண்டு பிடித்தாரா? உயிரோடு கரைக்கு திரும்பினாரா? என்பது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை. படத்தின் தொடக்கக் காட்சிகள் வழக்கமான படமாகச் சென்றாலும் தடையை மீறி கடலுக்கு நாயகன் செல்லும்போது படம் வேகம் பிடித்து விடுகிறது. கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யங்கள், சாகசங்கள் அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்களுக்குபடபடப்பையும் பயத்தையும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் அக்காட்சிகள் ஏற்படுத்தி விடுகின்றன. மேற்கொண்டு நகரும்…
Read More