இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் அவரது இருப்பு ‘ஹீரோ’வின் சாராம்சத்தை உயர்த்துவதில் மிகச்சிறந்த பெருக்கியாக இருக்கும். எனது முதல் படமான ‘இரும்புத்திரை’ அர்ஜுன் சார் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. உண்மையில் இந்த படம் கடுமையான குணாதிசயங்களுடன் கூடிய ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தை உருவாக்க கூடுதல் பொறுப்பை கொண்டிருந்தது. அவர் கணிக்க முடியாத மற்றும் கட்டுப்பாடற்ற ஒருவர். அவரது முழுமையான எதிர்வினைகள் குறைந்தபட்ச புன்னகையாக இருக்கும், ஆனால் அதற்கு கீழே அதிக பயங்கரவாதம் உள்ளது. யார் இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துவார்கள் என நான் என் கற்பனையில் என் எண்ண ஓட்டத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அபய் தியோல் தான் மிகவும் பரிபூரணமாக இருந்தார். அவர் இந்த கதை மற்றும் அவரது கதாபாத்திரத்திலும் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. இப்போது இது மகிழ்ச்சியுடன் சேர்த்து, அதிகப்படியான பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறது. சிவகார்த்திகேயன், அர்ஜூன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற சக்தி வாய்ந்த நட்சத்திர நடிகர்களை கொண்டிருப்பது, படத்தை மிகச்சிறந்ததாக கொடுக்க என்னை உந்துகிறது” என்றார்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்குகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, ‘நாச்சியார்’ புகழ் இவானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா (இசை), ஜார்ஜ் சி வில்லியம்ஸ் (ஒளிப்பதிவு) மற்றும் ரூபன் (படத்தொகுப்பு) என “இரும்புத்திரை”யின் அதே தூண்கள் பி.எஸ். மித்ரன் உடன் இரண்டாவது முறையாக இந்த படத்திலும் இணைந்திருக்கிறார்கள்.