மத்திய அரசின் நல திட்டங்களை விளக்க நம்மவர்மோடி ரதயாத்திரை!

இன்னும் சில தினங்களில் முடிய இருக்கும் 2019ம் வருஷம் பாஜகவிற்கு மிகவும் சவாலான ஆண்டாக அமைந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மத்தியில் ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு விடையாக அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. மேலும் நாட்டில் பல்வேறு சீர்திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்தங்களையும், மக்களிடையே கடும் எதிர்ப்பை சம்பாதிக்கும் மசோதாக்களாக இருந்தாலும் அதனை துணிச்சலோடு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு. உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து,முத்தலாக் தடைச் சட்டம்,போக்ஸோ சட்டதிருத்த மசோதா,மோட்டார் வாகனத் திருத்த மசோதா,குடியுரிமை திருத்தச் சட்டம் உள்பட எவ்வளவோ சொல்லலாம்.

இப்படி மக்கள் மீதான நலன்களை கவனத்தில் கொண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கு தெரிவிக்க நம்மவர் மோடி ரத யாத்திரை ஜனவரியில் தமிழகம் முழுதும் நடை பெற உள்ளது.

பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு முழுதும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், பெண்களுக்கு சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி, சிறு தொழிலுக்கான முத்ரா கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழகம் & பாண்டிச்சேரி பகுதிக்கு ஒருங்கிணைந்த நிர்வாகிகள் நியமிக்கப் பட்டு உள்ளார்கள். இவர்களின் அறிமுக விழா சென்னையில் நடை பெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். மாநில கவுரவ தலைவர்களாக ஓய்வு பெற்ற நீதியரசர்கள் கிருஷ்ணன், வள்ளிநாயகம் ஆகியோரும், பெண்கள் பிரிவு மாநில செயலாளராக சசிகலா, பிரசார பிரிவு மாநில செயலாளராக சூரிய நாராயணன், இளைஞர் பிரிவு மாநில செயலாளராக கணேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆக ராம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

இவர்கள் ஒருங்கிணைப்பில் மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நம்மவர் மோடி ரத யாத்திரை ஜனவரியில் நடை பெற உள்ளது.

இதற்காக மாநில ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து நியமிக்க உள்ளார். கல்வியாளர்கள், பிரபல சமூக ஆர்வலர்கள், மக்கள் சேவையில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள் ஓய்வு பெற்ற நீதியரசர்கள், காவல்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் என மாவட்டம் தோறும் பல்வேறு தரப்பிலும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். இவர்களை கண்டுபிடித்த்து நியமிக்க தான் ஜனவரியில் நம்மவர் மோடி ரத யாத்திரை நடைபெற உள்ளது. சுமார் 250 இரு சக்கர வாகன பேரணியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment