இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது ஊடகங்களில் – பத்திரிகைகளில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளும் திமுக. தலைமையிலான கூட்டணியின் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறுகின்றன. இவையெல்லாம் நமக்கு, நமது உழைப்புக்கு, நாம் கொண்டிருக்கும் கோட்பாடுகளுக்கு, ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் அதே வேளையில், முன்பைவிட நாம் அதிகமான கவனத்துடன் உழைக்க வேண்டும்!. என்ற எச்சரிக்கை உணர்வையும் இணைத்தே ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தாலும், எதிராக இருந்தாலும், அதனை மட்டுமே நம்பி சார்ந்திருக்காமல், முன்னெப்போதும் போல களப்பணியாற்றுவதே நம் கடமை என்பதை தலைவர் கருணாநிதி அடிக்கடி நினைவூட்டுவார். மக்கள்தான் வெற்றியைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்களே என்ற அதீத எண்ணம் மனதில் கடுகளவு குடியேறினாலும், அது களத்தில் மலையளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும். தேர்தல் என்பது ஒவ்வொரு வாக்குக்கும் உள்ள ஜனநாயக…
Read MoreTag: #mkstalin
தேசிய குடியுரிமை சட்டத்தை திமுக அனுமதிக்காது – மு.க.ஸ்டாலின்
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று காலை தூத்துக்குடி, பிறகு ராமநாதபுரம் மற்றும் இரவில் ராயபுரம் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.ராயபுரம், பெரம்பூர், மாதவரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர் தொகுதிகளில் மக்கள் மத்தியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியபோது திமுக சார்பில் ஆதரவு கொடுத்தோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதுபோன்று, கேரளா, மேற்கு வங்காளத்தில் இந்த சட்டத்தை அனுமதிக்காதது போல் திமுக ஆட்சியில் இந்த சட்டத்தை அனுமதிக்கப்பட்டோம். வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடந்த போது மக்களை வந்து சந்தித்திருப்பாரா ராயபுரம் தொகுதி வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார். நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தற்போது தேர்தலுக்காக இங்கு வந்து பாட்டுப் பாடி…
Read Moreதூத்துக்குடி துப்பாக்கிசூடு விசாரணை என்ன ஆனது – மு.க.ஸ்டாலின்
‘ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் எனக்குத் தெரியாது. டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என கூறிய எடப்பாடி பழனிசாமி பதவியில் நீடிக்கலாமா?’ என திமுக தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இன்னும் மாறா வடுவாக மக்கள் மனதில் இருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று (மார்ச் 22) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின், “துப்பாக்கி சூடு சம்பவம் எனக்குத் தெரியாது என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி பதவியில் தொடரலாமா” என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பேசிய அவர், 13 பேர காக்கை குருவிகள்…
Read Moreவாசிங் மெஷின் இருக்கட்டும் செல்போன் என்னாச்சு – மு.க.ஸ்டாலின்
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு வீட்டுக்கும் வாஷிங் மெஷின் தருகிறோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் அமர்ந்த 2011, 2016 தேர்தல்களில் அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை பற்றி குறிப்பிட்டுப் பேசினார். அவர் பேசுகையில், “இப்போது அ.தி.மு.க.வின் சார்பில் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அது அப்படியே தி.மு.க.வின் நகல். நாம் என்ன சொன்னமோ அதை அப்படியே கொஞ்சம் உயர்த்தி வெளியிட்டிருக்கிறார்கள். நான் கேட்கின்ற கேள்வி. இதே போல 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா? நான் சில உதாரணங்களை மட்டும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் செல்போன் கொடுப்பேன்…
Read More