சசிகலாவை கட்சியில் இணைக்க எடப்பாடி – பன்னீர் ஆலோசனை

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு வருவதாக அதிமுகவில் சலசலப்புகள் எழுந்து அடங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் நேற்று (மார்ச் 24) தேர்தல் பரப்புரை செய்வதற்காக முதல்வரின் மாவட்டமான சேலத்துக்கு வந்தார் துணை முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம். சேலம் மாநகரில் பிரச்சாரம் செய்த ஓ.பன்னீர்செல்வம் பின் முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடிக்குச் சென்றார். அங்கே முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமிக்காக வாக்கு சேகரித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வெகுவாகப் புகழ்ந்தார் ஓ.பன்னீர் செல்வம். “தற்போது நல்லாட்சி நடத்திவரும் முதல்வர் அண்ணனின் ஆட்சி தொடர வேண்டும். அம்மா வழியில் தமிழகத்தைத் தடம்பிறழாது வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று பேசிய ஓ.பன்னீர் தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக செய்திருக்கும் சாதனைகளையும் பட்டியலிட்டார். குறிப்பாக தொழில்துறையில் சுமார் 26,000…

Read More

அதிமுகவில் நீக்கப்படாத விராலிமலைசுயேச்சை வேட்பாளர்

அதிமுகவில் ஆங்காங்கே சுயேச்சையாக போட்டியிடும் போட்டி வேட்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். பெருந்துறையில் அதிமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், தொடர்ந்து இருமுறை எம்.எல்.ஏ.வாக இருப்பவருமான தோப்பு வெங்கடாசலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சிட்டிங் எம்.எல்.ஏ. சந்திரசேகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து விராலிமலை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் நெவளிநாதன் மீது இன்னும் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே மார்ச் 18 ஆம் தேதி விஜயபாஸ்கரை எதிர்த்து மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் விராலிமலை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து அவர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தனித்தனியே கடிதமும் எழுதியிருந்தார். அதில், “கட்சிக்…

Read More