விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கை

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் சார்பிலும் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 25) அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விழுப்புரத்தில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், “ தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை பாதுகாக்கவும்; மருத்துவப் படிப்பில் தமிழக அரசு, அகில இந்திய ஒதுக்கீடு ((AIQ- All India Quota) மத்திய அரசின் தொகுப்பிற்கு, ((Central Pool) 15% இடங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும். இதன்மூலம் அந்த இடங்களுக்கான பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு நிலைநிறுத்தவும்; பின்தங்கிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் மத்திய அரசின் உதவிபெரும் பாடப்பிரிவுகள்…

Read More

தேசத்தை விற்றுவிடுவார்கள்- நாம் தமிழர்சீமான்

நோட்டுக்கு வாக்கை விற்காதீர்கள், அவர்கள் வாக்கைப் பெற்றுக்கொண்டு நாட்டை விற்றுவிடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருப்போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எல்லா திட்டங்களைக் கொண்டு வந்து, வாழ்வதற்கு வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடினால் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்கின்றனர். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் கழிவுகளைக் கடலில் கொட்டுகிறார்கள். இதனால் மிக பெரிய பாதிப்பைச் சந்திக்கிறோம். கல்பாக்கம் அணு உலையால் சுற்றுவட்டார 14 கிராமங்களில் பத்திரப்பதிவே செய்ய முடியாத நிலை உள்ளது. அணுக்குண்டு மேல் அமர்ந்திருப்பதும் அணு உலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். காற்றாலைகள் கடற்கரை…

Read More