சினிமா-அரசியல் என் இரு கண்கள் போன்றது – நடிகர் சுரேஷ்கோபி

அரசியலையும் , சினிமாவையும் கைவிட மாட்டேன் என நடிகரும் திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். கேரளாவில் வருகிற 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்தலில் பாஜக வேட்பாளராக மலையாள நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லி மேல்சபை எம்.பி.யாக இருக்கும் நடிகர் சுரேஷ் கோபியின் பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு உள்ளது. அதற்குள் கட்சி மேலிடம் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுமாறு அவரை கேட்டுக்கொண்டது. இதையடுத்து அவரும் திருச்சூர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இவர் போட்டியிட்டார். அதில் திருச்சூர் தொகுதியில் கணிசமான வாக்குகளை வாங்கி இருந்தார். எனவே இந்த தேர்தலில் அவர் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெறுவார் என பாஜகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…

Read More