ஓ மை கடவுளே- விமர்சனம்!

கடவுள் கையில் என்ன தந்திருக்கிறார் என்பதை உற்றுப் பார்க்காமலே கடவுளை குறை சொல்வதோடு அல்லாமல் நமக்கான சோகத்தை நாமே தேடிக்கொள்கிறோம் என்பதை கமர்சியலாக சொல்லி இருக்கிறது ஓ மை கடவுளே.. துறுதுறு அஷோக்செல்வனுக்கு ரித்திகா சிங் நல்ல தோழி. ஒருநாள் ரித்திகா சிங் அஷோக் செல்வனிடம் நாம் திருமணம் செய்துகொள்ளலாமா? என்று கேட்க அஷோக்கும் சரி என்கிறார். ஆனால் கல்யாண லைப் எதிர்பார்த்தது போல அமையவில்லை. அஷோக் கடவுளிடம் முறையிட கடவுள் அஷோக்கிற்கு என்ன செய்தார்? இதுதான் கதை. வெகு சாதாரண லைனை வைத்து ஒரு கலகல ட்ரீட்மெண்டால் படத்தை என்கேஜ்டாக வைத்து இருக்கிறார் இயக்குநர் அஸ்வத். சின்னச் சின்ன வசனங்கள் ஒவ்வொரு காட்சிகளுக்குமான தொடர்பு. எதிர்பாராத சிறுசிறு ட்விட்ஸ்கள் என படம் பிசிறடிக்காமல் பயணிக்கிறது. இதுதான் படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட். அடுத்து நடிகர்களின் பங்களிப்பு.…

Read More