ஒரு விளையாட்டுத் தொடர்பான திரைப்படத்தில் என்னெல்லாம் இருக்க வேண்டும். ஒரு தோல்வி, அந்த தோல்வியால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தேடும் தேடல், விளையாட்டிற்குள் அரசியல், பாகுபாடு, வீரர்களுக்குள் முரண்பாடு, சிறிய சறுக்கல், ஒரு பெரிய போட்டி, அந்தப் போட்டியில் வெற்றி, இவைகளுக்கு நடுவே தேவைப்பட்டால் சிற்சில காமெடிகள், காதல் காட்சிகள் இவைகளெல்லாம் இருக்கும் தானே. “வெண்ணிலா கபடிக் குழு” துவங்கி ‘பிகில்’ வரை விளையாட்டு தொடர்பான எல்லாப் படங்களும் இந்த டெம்ப்ளெட்டில் தான் அமைக்கப்படும். அதில் இருந்து சற்றும் சறுக்காமல் அமைக்கப்பட்டு இருக்கிறது “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தின் திரைக்கதை. எக்ஸ்டிரா-வாக வர்க்கம் அரசியலுடன் சற்று சாதிய அரசியலையும் ஆங்காங்கே தொட்டுச் செல்கிறது திரைக்கதை. அரக்கோணத்தில் நடக்கும் கதை. அவ்வூரின் காலனிப் பையன்களுக்கும், ஊர்க்காரப் பையன்களுக்கும் கிரிக்கெட் விளையாட்டில் நெடுநாளைய பகை இருக்கிறது. ஒரு சின்ன சீண்டலில் தங்களுக்குள்…
Read MoreMonth: January 2024
சிங்கப்பூர் சலூன் விமர்சனம்
தன் சிறுவயதிலேயே தான் ஒரு ஹேர் ஸ்டைலிஷ்ட் ஆக வேண்டும் என்கின்ற ஆசையை தனக்குள் வைத்துக் கொண்டு வளரும் ஒரு சிறுவன், தன் லட்சியத்தை அடைய எவ்வளவு தடைகளையும் சிக்கல்களையும் கடக்கிறான் என்பதே “சிங்கப்பூர் சலூன்” சிறுவயதில் ஒரு மனிதனின் ஒட்டு மொத்த தோற்றத்தையும் ஒரு சிகை அலங்கார நிபுணர் நினைத்தால் மாற்றி அந்த மனிதனுக்கான அந்தஸ்தத்தை சமூகத்தில் உயர்த்திவிட முடியும் என்பதை கண்கூடாக காணும் சிறுவன், அந்த சிகை அலங்கார நிபுணர் “சாச்சா”வாக வரும் லால் மீதும் அவர் செய்யும் தொழில் மீதும் மிகுந்த நேசம் கொண்டு, அந்தத் தொழிலை கற்றுக் கொள்ள முனைகிறான். அதைக் கற்றுக் கொள்ளும் புள்ளியில் அந்த தொழில் மீது காதல் கொண்டு, படித்த வேலைக்குப் போவதை விட பிடித்த வேலையை செய்வதே மேல் என்று முடிவு செய்கிறான். சிறுபிராயத்தில்…
Read Moreதூக்குதுரை விமர்சனம்
கற்காலத்தின் காதல் கதையையும், கலியுகத்தில் டேமேஜ் ஆகிக் கிடக்கும் பேய் கதையையும் ஒன்றாக சேர்த்து பேக் செய்து டெலிவரி செய்தால் அதுதான் தூக்குதுரையின் கதை. பணக்கார நாயகி, ஏழை நாயகன் காதல், கெளரவக் கொலை, பேயாக வந்து பழி வாங்குவது. இறுதியில் சுபமான முடிவு. இவ்வளவுதான்… இவ்வளவே தான் இந்த தூக்குதுரை. யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், செண்ட்ராயன் , இனியா, மாரிமுத்து, மகேஷ், நமோ நாராயணன், அஸ்வின், சத்யா, சீனியம்மா, வினோத், தங்கராஜு, சிந்தலப்பட்டி சுகி, ராஜா வெற்றிபிரபு என்று பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் நடிகர் நடிகைகள் பட்டாளத்தில் காமெடி நடிகர்களே அரை டஜன் கணக்கில் இருந்தாலும், படத்தில் காமெடி கிலோ என்ன விலை என்று நம்மை கேட்கிறார்கள். யோகிபாபு படத்தில் இருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வதற்கில்லை. இனியா அப்படியே. எப்பேர்ப்பட்ட நடிகை. இந்தப்…
Read More”என் இசைக்கு 35 மதிப்பெண்கள் கொடுக்கலாம்” – டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின்
ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான “டெவில்” பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஹெச் பிக்சர்ஸ் ஹரி பேசும்போது, ”மிஷ்கின் என்னுடைய குருநாதர் போன்றவர். நான் சினிமாவில் பார்த்து வியக்கும் ஆளுமைகளில் அவர் ஒருவர். அவருக்கு முதல் நன்றிகள். இந்த படத்தின் சப்ஜெக்ட் வித்தியாசமாக இருந்தது. இயக்குநர் ஆதித்யா படத்தின் பட்ஜெட்டை எவ்வளவு கம்மி…
Read Moreமார்ச் 22ல் ‘ரெபல்” திரைப்படத்தில் ஆக்ஷன் அவதாரத்தில் ஜீ.வி.பிரகாஷ்
இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன்…
Read Moreபாலிவுட்டில் தயாரிப்பாளரான அட்லீ
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் ‘VD18 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘VD18’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள்…
Read Moreமும்பையில் நடந்த டங்கி படச் சிறப்புத் திரையிடல்! பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் கலந்துகொண்டன !!
சமீபத்தில் வெளியான டங்கி திரைப்படம் திரையரங்குகளை விழாக்கோலமாக மாற்றி வருகிறது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இதயம் வருடும் இந்தப்படைப்பு, உலகம் முழுதும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் வசித்து வரும் என்ஆர்ஐ இந்தியர்களின் வாழ்வை, நெருக்கமாகப் பிரதிபலிக்கும் படைப்பாக, அவர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்த்துள்ளது டங்கி. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு நாடுகளின் துணைத் தூதரகங்களுக்குச் சிறப்புத் திரையிடல் நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் டங்கி திரைப்படத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தன, இந்த படம் உண்மையில் அதன் அழுத்தமான கதையினால், ஒரு அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் மக்களுக்குத் தேவையான கருத்தையும் சொல்லியுள்ளது. பலரும் இப்படத்தின் கதையைப் பாராட்டி வருகிறார்கள், குறிப்பாக, உலகளாவிய பார்வையாளர்கள் தங்கள் வாழ்வோடு பொருத்திப்பார்த்துக்கொள்ளும்படி அவர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது இப்படம். சட்டத்திற்குப் புறம்பாக நாடு தாண்டுவதைப் பற்றிப் பேசும்…
Read Moreதிறமையான இளம் நடிகராக வலம் வரும் சத்தியமூர்த்தி !
நடிகர் சத்தியமூர்த்தி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர். நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருப்பவர். தப்புத் தண்டா படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடித்த ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. தற்போது முழுக்க முழுக்க யூடியூப் டீம் உருவாக்கியுள்ள புதிய படத்தில் நடித்துள்ளார். யூத் ரசிகர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் இந்த வாரம் வெளியாகிறது. வழக்கமான ஹாரர் பேய் படமாக இது இருக்காது என்கிறார். நடிகராக தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வரும் இவரது நடிப்பில் 2024 ம் ஆண்டில் மேலும் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. அது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இருக்கும் என்றார்.
Read Moreவசூலில் 300 கோடியைத் தாண்டி ஏறுமுகத்தில் “டங்கி”
இந்தியாவில் 150 கோடியைத் தாண்டி, பாக்ஸ் ஆபிஸில் களைகட்டும் ராஜ்குமார் ஹிரானியின் டங்கி! 7 நாட்களில் உலகளவில் 300 கோடியைத் தாண்டி சாதனை !! இதயம் வருடும் ஆழமான கதை மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பால், ராஜ்குமார் ஹிரானியின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் வாழ்வியலைச் சொல்வதில் அவர்களுக்கு நெருக்கமான படைப்பாக அமைந்திருக்கிறது திரையரங்குகளுக்கு குடும்ப பார்வையாளர்கள் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளது டங்கி. இப்படம் இந்தியாவில் மட்டும் 150 கோடியைத் தாண்டியுள்ளது மேலும் உலக பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை வெறும் 7 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளது. ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’…
Read More‘சூர்யாவின் சனிக்கிழமை’ நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய படம்
நேச்சுரல் ஸ்டார்’ நானி – விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் திறன் மிகு இயக்குநர் விவேக் ஆத்ரேயா… இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர். இருவரும் இணைந்து உருவாக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம் ஒரு தனித்துவமான சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும். இந்த திரைப்படம் நானியை முற்றிலும் அதிரடியான அவதாரத்தில் காண்பிக்கிறது. டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து அதிக பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பு நீண்ட நாட்களை…
Read More