Month: April 2019
தயாரிப்பாளர் சங்கத்தைக் அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து விஷால் முறையீடு..!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவினை கலைத்துவிட்டு அதன் நிர்வாகியாக பதிவாளர் ஆர்.சேகரை நியமித்ததை எதிர்த்து, நீக்கப்பட்ட தலைவர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நடிகர் விஷால் தலைமையிலான குழுவினர் கடந்த முறை நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தனர். இவர்கள் பொறுப்புக்கு வந்தததில் இருந்தே விஷால் குழுவினர் மீது பல்வேறு புகார்கள் பகிரங்கமாச் சொல்லப்பட்டு வந்தன. சங்கத்திற்குத் தேவையில்லாமல் வேறொரு அலுவலகம் அமைத்தது. சங்கத்தின் அறக்கட்டளையில் இருந்து 7 கோடி ரூபாயை பொதுக் குழுவின் அனுமதியில்லாமல் எடுத்தது.. சங்க உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே ஓய்வூதியத்தையும், தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுகளை வழங்கியது.. சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.. சங்கத்தில் கொடுக்கும் புகார்களுக்கு பதிலே அளிக்காமல் இருந்தது.…
Read Moreஹரீஷ் கல்யாண் ஜோடியான ரெபா மோனிகா ஜான்!
நவநாகரீக தோற்றமும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றமும் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அம்சம். ரெபா மோனிகா ஜான் இந்த இரு அம்சங்களிலும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நேர்த்தியாக நடிக்கிறார். நிவின் பாலியின் ஜாக்கோபிண்டே ஸ்வர்க்கராஜ்ஜியம் படத்திற்கு பிறகு அவரது புகழ் கேரளா தாண்டியும் பரவலாகி இருக்கிறது. தென்னிந்திய மொழிகளில் கணிசமான படங்களில் நடித்து வரும் ரெபா, தற்போது ஹரீஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் இன்னொரு நாயகியாக ரியா சக்ரவர்த்தியை சமீபத்தில் அறிவித்தது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ரெபா மோனிகா ஜான் கூறும்போது, “இந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை பரிசீலித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் சஞ்சய் பாரதிக்கும் நன்றி. தயாரிப்பாளர் மலையாளத்தில் நான் நடித்த படங்களை பற்றி அறிந்திருக்கிறார். அதனால் இந்த…
Read Moreவிவசாயத்தையும் விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சொல்ல வரும் ‘ஐ.ஆர்.8’ படம்|!
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஜே.கே. இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐ.ஆர்.8’.இந்தப் படத்தில் அனீபா, விஷ்வா இருவரும் கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா, பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஓளிப்பதிவு – கே.வி.மணி, பாடல்கள், இசை – கோண்ஸ், படத் தொகுப்பு – B.S.வாசு, சண்டை இயக்கம் – ‘நாக் அவுட்’ நந்தா, தயாரிப்பு : ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என்.பி. இஸ்மாயில். ‘சிங்க முகம்’, ‘சொல்ல மாட்டேன்’, ‘வாங்க வாங்க’ போன்ற படங்களை தொடர்ந்து இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியுள்ள நான்காவது படம் இது. இத்திரைப்படம் விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. எந்த வறுமை வந்தாலும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காமல் படித்த இளைஞர்களிடத்தில்…
Read Moreகார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம்!
‘வயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஆன்சன் பால் (ரெமோ, மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ்) மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். கோவிந்த் வசந்த் (96 புகழ்) இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கியது. 2019 அக்டோபரில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Read More“ வகிபா “ வண்ணக்கிளி பாரதி ஜாதி ஒரு தனி மனிதனின் வாழ்கையை எப்படி மாற்றுகிறது என்பதை சொல்லும் படம்!
பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “ வகிபா “ இது வண்ணக்கிளி பாரதி எனும் பெயரின் சுருக்கமாகும். இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன், கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – S.சக்திவேல் இசை – முஜிப்ரஹ்மான் வசனம் – ரா,கண்ணன் பாடல்கள் – மோகன்ராஜ், குகை மா.புகழேந்தி எடிட்டிங் – G.சந்திரகுமார் கலை – சாய்மணி நடனம் – ரமேஷ் சண்டை – நைப் நரேன் தயாரிப்பு மேற்பார்வை – சங்கர் நிர்வாக தயாரிப்பு – ராமு கதை, தயாரிப்பு – ஸ்சொப்பன் பிரதான் திரைக்கதை, இயக்கம் – இகோர் . இவர்…
Read Moreகொலைகாரன் -டிரைலர்!
அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் கலந்து கொள்ளும் தெருக்கூத்து நிகழ்ச்சி..!
சென்னையில் நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சர் பிட்டி தியாகராயர் அரங்கில் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழர்களின் பாரம்பரிய கலையான தெருக்கூத்துக் கலை நலிவுற்று இருக்கும் நிலையில், அதனை தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்கும் ரசிக்கின்ற வகையில் நவீனப்படுத்தி, கால அளவை குறைத்து, சுவாரஸ்யமான நடையில் மக்களிடம் கொண்டு செல்ல சில முன்னெடுப்புகளைச் செய்து வருபவர் ‘வெங்காயம் ‘ திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். திருக்குறளை கிராமப்புற மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து குறளையும் தெருக்கூத்து வடிவில் தயாரித்து வருகிறார். மேலும் தமிழ் மன்னர்களின் வரலாற்றையும் சமகால அரசியலையும் பேசக்கூடிய கலையாகவும் மேம்படுத்தி தெருக்கூத்து வடிவில் மக்களிடம் சேர்த்து வருகிறார்.. அவ்வகையில் தமிழுக்காக முதல் முதலில் தன்னுயிர் நீத்த நந்திவர்மனின் வரலாற்றை கடந்த ஆண்டு கம்போடியா அங்கோர்வாட் கோவில் அருகே தெருக்கூத்து வடிவில் நடத்தி இருந்தார்.…
Read Moreமோடி எம்.ஏ. படித்துள்ளார்!
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி எம்.ஏ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இளங்கலைப் படிப்பை 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் முடித்ததாகவும், முதுகலை படிப்பை 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகத்தில் முடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளவர் தனக்கு 2.51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புடைசூழ வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 26) தனது வேட்புமனுவை சமர்பித்தார். இந்த நிலையில் மோடி வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மொத்தம் ரூ.2.51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1.41 கோடியாகவும், அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.1.1 கோடியாகவும் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளைப் பொறுத்தவரை…
Read Moreதேவராட்டம் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!
கொம்பன் , மருது உள்ளிட்ட படங்களின் இயக்குனர் முத்தையா இயக்கியத் திரைப்படம் தேவராட்டம். கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க மஞ்சிமா மோகன் ஜோடியாக நடிக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்ர். பிரவீன் கே.எல் -வீரமணி ஆகிய இருவரும் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாலும் முத்தையா இயக்குவதாலும் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள இந்தப் படம் வரும் மே 1ல் ரிலீஸாகிறது. இதையொட்டி தேவராட்டம் டீம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. அந்நிகழ்வில் இயக்குநர் முத்தையா பேசும்போது, “நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம்…
Read More