தோனி, கபாலி தமிழ்படங்களில் நடித்த இந்தி நடிகை ராதிகா ஆப்தே கதாபாத்திரத்திற்காக நிர்வாணமாகவும் நடிக்க கூடிய நடிகை என்பதுடன் எதிர்மறையான விமர்சனங்கள்பற்றிகவலைப்படாதவர் இப்போதுநடிகை ராதிகா ஆப்தேவுக்கு எதிராக டிவிட்டரில் திடீரென்று போராட்டம் வெடித்துள்ளது. #BoycottRadhikaApte என்ற ஹேஸ்டேக் மூலமாக ராதிகா ஆப்தேவைக் கண்டித்து டிவீட்டரில் திடீர் எதிர்ப்புப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. காரணம், சமீபத்தில் ஆபாசப் படங்களைத் தயாரித்து, வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். அது குறித்து இதுவரையிலும் எந்தவொரு பாலிவுட் நடிகரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. நாட்டு நடப்பு சம்பந்தமாகவும், பெட்ரோல் விலை சம்பந்தமாகவும், குடியுரிமைச் சட்டம் சம்பந்தமாகவும் பல்வேறு நடிகர், நடிகைகள் தங்களது கருத்துக்களை கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர் ஆனால், இப்போது தேசத்திற்கு ஒரு அசிங்கமாகத் தெரியும் இந்த ஆபாசப் பட வழக்கில் ஒரு…
Read MoreCategory: நடிகைகள்
கங்கணா ரணாவத் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்
ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணவத். அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவிட்டு செய்திகளில் பரபரப்பாக அடிபடுபவரும் கூட. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கங்கனா. அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், இதுவரையில் இல்லாத அளவிற்கு இரண்டு கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மெல்லிய மேலாடை அணிந்து அவர் பதிவிட்டுள்ள போட்டோக்கள் எட்டு லட்சம் லைக்குகளைக் கடந்து கொண்டிருக்கின்றன. அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, “வாழ்வதற்கும் இறப்பதற்கும் இடையில் காதலில் எந்த வித்தியாசமும் இல்லை, நம்பிக்கையில்லாமல் இறக்கும் ஒருவரை மட்டுமே பார்த்து நாம் வாழ்கிறோம் – காலிப்,” என்றும் பதிவிட்டுள்ளார்.
Read Moreநம்பிக்கைக்கு நயன்தாரா தந்த கௌரவம்
தமிழ் சினிமா நடிகைகளில் நடிகர்களை நம்பி மனதையும், பணத்தையும் அதிகமாக இழந்த நடிகை நயன்தாரா என்பார்கள் அதனால் ஏற்பட்ட ஏமாற்றம், வலிகளை கடந்து தன்னை தேடி வரும் நாயகியாக தன்னைமறுசீரமைப்புசெய்துகொண்டவர் நடிகை நயன்தாரா ஐயா படத்தில் நாயகியாக அறிமுகமான நயன்தாராவின் மேக்கப்மேன் மட்டுமே இன்றுவரை அவருடன் பயணிக்க முடிந்திருக்கிறது காதலர்களாக அவர் நேசித்த சிலம்பரசன், பிரபுதேவா ஆகிய இருவரையும் தூக்கி எறிந்திருக்கிறார் அதன் பின் இயக்குநர்விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே அவ்வப்போது வெளியிட்டு விவாதங்களை ஏற்படுத்துவது உண்டு வழக்கம்போல சிலம்பரசன், பிரபுதேவா போன்று விக்னேஷ் சிவன் கழட்டிவிடப்படுவார் என்று ஆருடங்கள் கூறப்பட்டு வந்தன ஆனால் தன்னை ஏமாற்றாமல், தன்னை நேசிக்ககூடியவர்களை எந்த நிலையிலும் நயன்தாரா விலகி போகமாட்டார் என்பார்கள்…
Read Moreநடிகைக்கு எதிராக தேச துரோக வழக்கு ரத்து செய்ய மறுப்பு
கேரளா மாநிலம் அருகே அரபிக்கடலில் உள்ளது லட்சத் தீவுகள். இதன் தற்காலிக நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவை சேர்ந்தபிரபுல் கோடா பட்டேல் கொண்டு வரும் சில நிர்வாக மாற்றங்களுக்கு அத்தீவு மக்களும், அரசியல் கட்சிகளும்எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் லட்சத்தீவை சேர்ந்த நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா தனியார்தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கொரோனாவை உயிரி ஆயுதமாக அரசும், லட்சத்தீவு நிர்வாக அதிகாரியும் பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார். இதற்காக, அவர் மீது லட்சத்தீவு போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யும்படி கேரள உயர் நீதிமன்றத்தில் சுல்தானா தாக்கல் செய்த மனு (02.07.2021)விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே வழக்கை ரத்து செய்யக்…
Read Moreடாப்ஸியுடன் மோதும் கங்கணா ரணாவத்
இன்றைக்கு இந்தியாவிலேயே மிகவும் பரபரப்பான நடிகையென்றால் அது கங்கனா ரணாவத்துதான். சாதாரணமானகருத்துவேறுபாட்டைக்கூடகலவரமானசண்டையாக மாற்றிவிடுவார். அவரும், அவரது சகோதரியும்தான் இன்றைக்கு இந்திதிரையுலக நடிகர் நடிகைகளுக்கு பயத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக மாறி இருக்கிறார்கள் அக்கா ஒன்று சொல்வதும், தங்கை அதற்கு ஒத்து ஊதுவதும், தங்கை குற்றம்சாட்டினால் அக்கா அதை எடு்த்துக் கொடுப்பதுமாக சில வருடங்களாக இந்த சகோதரிகளால் இந்தி திரையுலகம் பரபரப்பாகவே இருந்து வருகிறது இப்போது இவர்களின் தாக்குதல்நடிகை டாப்ஸி மீது. டாப்ஸிக்கும் இந்த சகோதரிகளுக்கும் இடையில் நல்லுறவே கிடையாது. கங்கனாவின் நடிப்பு ஸ்டைல், டிரெஸ்ஸிங் சென்ஸ், பேச்சு.. இதையெல்லாம் அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடித்து செய்கிறார் டாப்ஸிஎன்று கங்கனாவின் சகோதரி ஒரு முறை குற்றம்சாட்டி எழுதியிருந்தார். அப்போது டாப்ஸிக்கு இந்த இரண்டு சகோதரிகளும் சேர்ந்து ‘சீப்பான காப்பி’ என்று பட்டப் பெயர் சூட்டி அழைக்க ஆரம்பித்தார்கள். அன்றில் இருந்து…
Read Moreநடிகர் சங்க தேர்தலை அரசியலாக்கிய நடிகை விஜயசாந்தி
சென்னை மகாணம் என்று இருந்தபோதுதென்னிந்திய நடிகர் சங்கம் என்கிற அமைப்புசென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கியது தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட மொழி படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் சென்னையிலேயே நடைபெற்று வந்தது மொழி அடிப்படையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது தமிழ் சினிமாவை தவிர்த்து மற்ற மொழிகளுக்கான சினிமா சங்கங்கள், படப்பிடிப்புகள் அந்தந்த மாநிலங்களில் செயல்பட தொடங்கியதுஆனால், தமிழில் மட்டும்தான் இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் என இருக்கிறது. இந்த சங்கத்தில் போட்டியிட மொழி, இனம் எப்போதும் தடையாக இருந்தது கிடையாது அரசியல்வாதிகள் ஆதிக்கமும் இருந்தது இல்லை அதேபோன்றுதான் பிற மாநிலங்களில் நடிகர் சங்க அமைப்புகள் இயங்கின ஆனால் பிறமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட்டு வெற்றிபெற முடியாத சூழ்நிலை இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது தாங்கள் நடிக்கும் படங்களில் சாதி,மொழி, இன வேறுபாட்டுக்கு எதிராக…
Read Moreட்விட்டரில்அங்கீகாரம் பெற்ற அஞ்சலி
சமூக வலைதளங்களில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இரண்டையும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர் திரைப்பட நடிகைகள் இதன்மூலம் தங்களது புதிய புகைப்படங்களை வெளியிடுவதை பிரதான வேலையாக கொண்டுள்ளனர்பெரும்பான்மையான நடிகைகள் குஷ்பூ, கஸ்தூரி, காயத்திரி ரகுராம், நடிகை ராதிகா போன்ற தமிழ் நடிகைகள் அரசியல் ரீதியாகவும் ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர் நடிகைகளை அவர்கள் வெளியிடும் புது கிளாமர் புகைப்படங்களுக்காகபின்தொடரும்ரசிகர்கூட்டமே அதிகமாக இருந்து வருகிறது அந்த வகையில் தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அஞ்சலி. தமிழில் சில முக்கியமான படங்களில் கதாநாயகி என்கிற இமேஜை புறந்தள்ளி கதைக்குள் தன்னை வைத்து தனது யதார்த்த நடிப்பின் மூலம் தனி முத்திரையைப் பதித்தவர் நடிகை அஞ்சலி இவர்அறிமுமானகற்றது தமிழ் படத்திலேயே தனது நடிப்பால் யார் இவர் எனக் கேட்க வைத்தவர். அதனை தொடர்ந்து அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, இறைவி,…
Read Moreஅனுஷ்கா மீண்டு வருவாரா
நாயகன் முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களைப் போலவே, கதாநாயகி முக்கியத்துவமுள்ள படங்கள் இப்பொழுது அதிகமாக வெளியாகிவருகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே அப்படி வெளியாகும். ஆனால் இப்பொழுது அதிகமாக வெளியாக தொடங்கிவிட்டது. ஹீரோக்களுடன் டூயட் பாடவும், லூசு ஹீரோயினாகவும் தோன்றும் கதாபாத்திரங்கள் இல்லாமல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களை நம்ம ஹீரோயின்கள் தேர்ந்தெடுக்க தொடங்கிவிட்டனர். ஆனால் இன்றைய நாயகிகளுக்கு முன்னுதாரணமாக, கதாநாயகி முக்கியத்துவமுள்ளப் படங்களை முதலில் தேர்ந்தெடுத்து, ஹிட்டும் கொடுத்தவர் அனுஷ்கா தான். அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் பெரியளவில் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. இப்படத்துக்குப் பிறகுதான், நடிகைகள் பலரும் ஹீரோயின் முக்கியத்துவம் கொண்டப் படங்களில் நடிக்கத் துவங்கினார்கள். அப்படியான பெருமைக்குரிய அனுஷ்காவுக்கு இப்போது பெரிதளவில் படவாய்ப்பே இல்லை என்பதே சோகமான செய்தி. அனுஷ்கா நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் இஞ்சி இடுப்பழகி.…
Read Moreதேசிய விருதை எதிர்நோக்கும் நடிகை அபர்ணதி
தமிழ் சினிமாவில் விமர்சகர்களால் பாரபட்சம் இன்றி பாராட்டப்படும் படங்கள் எப்போதோ ஒரு முறைதான் வருகின்றன. அந்த விதத்தில் இந்த மாதம் வெளிவந்த ஒரு படம் ‘தேன்’. மலைக்கிராம மக்களின் வாழ்வியலைத் திரைக்கதையாகக் கொண்டு வெளிவந்த இந்தப் படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் அபர்ணதி நடித்திருந்தார். அவருடைய நடிப்பிற்கு விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அப்படம் பற்றிய தனது அனுபவத்தை பத்திரிகையாளர்களிடம் அபர்ணதி பகிர்ந்து கொண்டார். ’ “தேன்” படத்திற்குக் கிடைத்து வரும் நேர்மறையான பாராட்டுக்கள் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அனைத்து பாராட்டுக்களும் இயக்குநர் கணேஷ் விநாயகன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் அவர்களையே சேரும். இந்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய முழுக்காரணமும் அவர்கள் தான்.  மலைப்பகுதியில் வாழும் பெண்ணை தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் பொருட்டு, படப்பிடிப்பு முடியும் வரை ஷாம்பு, மேக்கப் என எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று…
Read MoreNayanthara’s image created by Qube
Nayanthara’s image created by Qube. Tamilnadu Cube Association proudly presents the mosaic of Actress Nayanthara mam of cini industry as a celebration of Women’s Day special. The TNCA TEAM ( Dr. R. Chandrika, R. Bindu Priyanka, R. Bhuvana, V. Sangeetha, R. Priya) has made mosaic of Actress Nayanthara in 950 cubes as a tribute to lady superstar Nayanthara for her dedication and hard work in Carrier. she had hit and misses she was in a tough face for sometime where she kept battling personal problems. She attained the level…
Read More