மலைவாழ் மக்களின் வலியைச் சொல்லும் ‘கெவி’ திரைப்படம் ஜூலை 18 இல் வெளியாகிறது

ARTUPTRIANGLES FILM KAMPANY ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி  சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் ஜி.பாலசுப்பிரமணியன் சா.ராஜாரவிவர்மா இசையமைத்துள்ளனர். படம் ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் தமிழ் தயாளன் படம் குறித்து பேசும்போது, “நாமெல்லாம் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு சென்றால் அங்குள்ள…

Read More

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ MCU உலகில் சில்வர் சர்ஃபர் மற்றும் கேலக்டஸுடன் மீண்டும் நுழையவிருக்கும் நிலையில், தமிழ்- தெலுங்கு என தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை பார்க்கலாம். *மிஸ்டர் ஃபெண்டாஸ்டி கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா (ரீட் ரிச்சர்ட்ஸ்):* கூர்மையான, பல அடுக்குகளுடன் உணர்வுப்பூர்வமான இந்த வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சூர்யா மிகப்பொருத்தமானவர். இந்த கதாபாத்திரத்திற்கு லோகேஷ் கனகராஜ் இன்னும் ஆழமான மற்றும் கிரே ஷேட்ஸ் கொடுப்பார். *இன்விசிபிள் வுமன் கதாபாத்திரத்தில் நயன்தாரா (சூசன் ஸ்டோர்ம்):* நிதானமான, கட்டளையிடும் மற்றும் வலுவான நயன்தாரா, அமைதியாக உறுதியுடனும் கட்டுப்பாடுடனும் அணியை வழிநடத்த முடியும். *ஹியூமன் டார்ச் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா (ஜானி ஸ்டோர்ம்):* பொறுப்பற்ற, வசீகரமான, வீரம் மிக்க விஜய் -ஜானி ஸ்டோர்ம் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்திப் போவார். *தி திங்…

Read More

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பையும் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியையும் பெற்றுள்ளது, மகிழ்ச்சியான இத்தருணத்தில்  உலகெங்கிலும் “பறந்து போ” திரைப்படத்தை வெளியீடு செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் தனது அலுவலகத்தில் படக்குழுவினருடன் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறார். இக்கொண்டாட்டத்தில் இயக்குநர் ராம், நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோருடன் ஜியோ ஹாட்ஸ்டாரின் பிரதீப் மில்ராய் பீட்டர், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸின் கருப்புச்சாமி மற்றும சங்கர், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பட வெற்றியைக் கொண்டாடும் வகையிலான இந்த நிகழ்வில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

Read More

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

 ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், க்ளீம் புரடக்சன்ஸின் “மஹாவதார் நரசிம்மா” திரைப்படம், உண்மையிலேயே தனித்துவமான சினிமா காட்சி அனுபவத்தைத் தரத் தயாராக உள்ளது. சக்திவாய்ந்த கதை சொல்லல் மற்றும் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகி வரும் மஹாவதர் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து, மஹாவதர் நரசிம்மா படத்தின் அதிரடியான டிரெய்லரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தப்படத்தின் கதை, இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. விஷ்ணுவின் தீவிர சீடரான பிரஹலாதனைச் சுற்றி இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது, அவர் தனது நாத்திக தந்தை இரண்யகசிபுவின் எதிர்ப்பை மீறி விஷ்ணுவை வணங்குகிறார், இறைவன் பிரம்மாவிடமிருந்து அமரத்துவம் பெற்ற இரண்யகசிபுவை அழிக்க, பகவான் விஷ்ணு தனது அரிய அவதாரமான நரசிம்மராக அவதரிக்கிறார். விஷ்ணுவின் அவதாரமான மகாவதார நரசிம்மரின் பிறப்புடன் கூடிய நம்பிக்கையின் கர்ஜனையை, இந்த டிரெய்லர் காட்டுகிறது. பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடனும், அற்புதமான பின்னணி இசையுடனும், இந்த டிரெய்லர்…

Read More

’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் பெட்ரோ பாஸ்கல்!

‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ மூலம் அணியின் தலைவராக மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்/ ரீட் ரிச்சர்ட்ஸாக மார்வெல் உலகில் அறிமுகமாக உள்ளார் நடிகர் பெட்ரோ பாஸ்கல். MCU உலகில் ஆறாவது பாகமாக வெளியாகவுள்ள இந்தப் படம், ஜூலை 25 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கான புரோமோஷனின் போது பெட்ரோ பாஸ்கல் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். வேனிட்டி ஃபேருடன் பேசிய பெட்ரோ, ”1960களில் கதை நடைபெறுகிறது எனும்போது அதற்கேற்றாற் போல எனது உச்சரிப்பும் இருக்க வேண்டும். அதற்காக தனது 100% பங்களிப்பையும் கொடுத்தேன். நான் அதைச் சிறப்பாகச் செய்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. அறுபதுகளின் முற்பகுதியில் அட்லாண்டிக் நடுப்பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து தொடங்க வேண்டும். அந்த பேச்சுவழக்கிற்கு…

Read More

45 நிமிடத்திற்குள் அனிருத்தின் Hukum புதிய சாதனை

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் – பாடகர்- இசை கலைஞரான ‘ராக் ஸ்டார் ‘ அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் – ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசை நிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சர்வதேச அளவிலான இவரது இசைப் பயணம் ரசிகர்களிடத்தில் பிரபலமாக இருக்கும் தருணத்தில் எதிர்வரும் 26 ஆம் தேதி அன்று கிழக்கு கடற்கரை சாலையில் அமையப்பெற்றிருக்கும் திருவிடந்தை எனும் இடத்தில் #Hukum எனும் பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்லாயிர கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும்…

Read More

விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர், இணையும், பான் இந்தியா திரைப்படத்த்தின் படப்பிடிப்பு தொடங்கியது !!

பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, முதன் முறையாக இணையும் பான் இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியது. இந்த மிக பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி கனெக்ட்ஸ் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் JB மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நாராயண ராவ் கொண்ட்ரொல்லா இணைந்து தயாரிக்கின்றனர். சார்மி கௌர் இப்படத்தை வழங்குகிறார். தெலுங்கு திரையுலகின் லக்கி சார்ம் எனக் கொண்டாடப்படும் சம்யுக்தா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகர்கள் தபு மற்றும் விஜய் குமார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். தற்போது ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மாண்டமான செட் ஒன்றில், விஜய் சேதுபதி, சம்யுக்தா மற்றும் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு தொடர்ந்து எந்த இடைவெளி இல்லாமல் நடைபெற உள்ளது. இயக்குநர்…

Read More

ரிஷப் ஷெட்டி பிறந்த நாளையொட்டி, ஹொம்பாலே பிலிம்ஸ் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் அதிரடியான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது – இப்படம் வரும் அக்டோபர் 2, 2025 அன்று திரைக்கு வருகிறது!

2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம், இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொண்டு வந்தது. 2022 ஆண்டின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனைகளைப் படைத்தது. இந்திய அளவில் பெரிய வெற்றிப்படங்களைத் தந்த ஹொம்பாலே பிலிம்ஸ் (கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மெகா ஹிட் படங்களை வழங்கிய நிறுவனம்) அடுத்ததாக தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1 – தற்போது இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தப் ப்ரீக்வலில், ரிஷப் ஷெட்டி இதுவரை பார்த்திராத ஒரு அதிரடி தோற்றத்தில் வெளிவந்திருக்கும் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு, படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதென அறிவித்துள்ளனர் – இது ரிஷபின் பிறந்தநாளுக்கான சிறந்த பரிசாக அமைந்துள்ளது! காந்தாரா: Chapter 1 திரைப்படம், அந்தக் கதையின் தோற்றத்தை சொல்வதோடு,…

Read More

துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு!!

மும்பை, ஜூலை 6, 2025 : ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B 62 ஸ்டுடியோஸ் , ரன்வீர் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி திரில்லர் திரைப்படமான ‘ துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஆதித்யா தர் ( உரி : தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் , சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு நிமிடம் 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் மர்மம் – துணிச்சல் – அதிரடி ஆக்சன் காட்சிகள் – ஆகியவை கலவையாக இடம்பெற்று கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இதற்கு ஷாஷ்வத் ஆற்றல்மிக்க இசையை வழங்கி இருக்கிறார். ஜாஸ்மின் சான்ட்லஸின் குரலும்,…

Read More

பல்டி” படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர் !!

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான “பல்டி” படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் , ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் உருவாகி வருகிறது. மேலும் வரும் திருவோண பண்டிகை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடதக்கது. இதற்காக வெளியான ஒரு பிரத்யேக ப்ரோமோ வீடியோவில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு போன்…

Read More