காக்கி சர்க்கஸ் – வெப் சீரிஸ் விமர்சனம்

கதை… தமிழகம் – கேரளா எல்லைப் பகுதியில் ஒரு ஜெயில் இருக்கிறது… இதில் ஜெயில் அதிகாரி முனீஸ்காந்த்.. சிறைக்கு வரும் கைதிகளை துன்புறுத்தாமல் அவர்களுக்கு தான் கைப்பட எழுதிய புத்தகங்களை கொடுத்து படித்து திருந்தி வாழ சொல்கிறார்.. இவரின் கீழ் வேலை பார்க்கும் மற்றொரு போலீஸ் நாயகன் சுபாஷ் செல்வம்.. இந்த சிறைச்சாலையில் ஒரு கேரளா அம்மன் கோயிலை சார்ந்த உண்டியல் வைக்கப்படுகிறது.. இந்த உண்டியலில் கைதிகளும் பணம் போட்டு வேண்டிக் கொண்டால் விடுதலை ஆகலாம் என்ற நம்பிக்கையை வளர்க்கின்றனர்.. இப்படியான சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் அந்த ஜெயிலில் உள்ள உண்டியல் திருடப்படுகிறது.. சிறைச்சாலைக்குள் புகுந்து ஒரு திருட்டு நடந்தது என்றால் தங்களுக்கு அவமானம் என்று கருதும் போலீசார் அதை வெளியே தெரியாமல் அந்த திருடனை தேடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த விஷயம் வெளியே கசிந்து…

Read More

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – விமர்சனம்

கதை… காதலித்து திருமணம் செய்தவர் எஸ் ஜே சூர்யா.. ஒரு கட்டத்தில் இவரும் தனிமையில் இருக்க 2040 ஆம் ஆண்டு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற LIK செயலியை உருவாக்குகிறார்.. இதன் மூலம் காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்.. தங்களின் காதல் உண்மைதானா என்று தெரிந்து கொள்ள இந்த செயலி உதவுகிறது.. இந்த செயலியின் ஒரு வாடிக்கையாளர் நாயகி கீர்த்தி செட்டி. இது ஒரு புறம் இருக்க தொழில்நுட்ப வசதி இல்லாமல் பசுமை உலகம் என்ற கிராமத்தில் இருக்கிறார் சீமான்.. இவரது மகன் பிரதீப் ரங்கநாதன்.. தன் மகனையும் செல்போன் இல்லாத பசுமை உலகத்தில் வாழவைத்துக் கொண்டிருக்கிறார் சீமான்.. இந்த சூழ்நிலையில் நாயகி கீர்த்தி மீது காதல் கொள்கிறார் பிரதீப்.. ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு தெரியாமல் செல்போனை வாங்கி அந்த LIK செயலியை டவுன்லோட் செய்து…

Read More

BIKER [பைக்கர்] – விமர்சனம்

கதை… ராஜசேகர்.. இவரின் மகன் சர்வானந்த்.. தன்னால் முடியாததை மகன் சாதிக்க வேண்டும் என நினைத்து அவருக்கு பைக் ரேஸில் பல பயிற்சிகளை கொடுக்கிறார்.. சிறு வயது முதலே மகனின் கவனம் எதிலும் சிதறி விடக்கூடாது என்பதற்காக கண்டிப்புடன் வளர்த்து வருகிறார்.. தன்மகன் உலக அளவில் பைக் ரேசர் சாம்பியன் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்காக பல போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கிறார். ஒரு கட்டத்தில் சர்வானந்த் & மாளவிகா இருவரும் காதலிக்கின்றனர். அப்போது அவர்களின் நெருக்கமான உறவால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆகிறார் மாளவிகா.. அந்த சமயத்தில் நடைபெறும் போட்டியில் ஒரு விபத்து ஏற்படவே இனி நீங்கள் பைக் ரேஸ் ஓட்டக்கூடாது என கட்டளை இடுகிறார் மனைவி.. இதன் பிறகு சர்வானந்த் என்ன செய்தார்.? தந்தையின் ஆசையை லட்சியத்தை காப்பாற்றினாரா அல்லது மனைவியின் ஆசைப்படி…

Read More

லீடர் – விமர்சனம்

    கதை… தாய் இல்லாத தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார் லெஜென்ட் சரவணன்.. இவர் ஒரு கார் மெக்கானிக்.. ஹார்பரில் உள்ள கார்களுக்கு இவர்தான் மெயின் மெக்கானிக்.. எனவே இவருக்கு ஹார்பருக்குள் எளிதாக சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.. இந்த சூழ்நிலையில் அங்கு போதை மருந்து கடத்தல் நடைபெறுவதாக போலீஸ் ஷாம் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு தெரிய வருகிறது.. ஆனால் அங்கு போலீஸ் நுழைய முடியாத சூழ்நிலையில் லெஜென்ட் சரவணன் இடம் சில உதவிகளை கேட்கின்றார் ஆண்ட்ரியா.. ஆனால் அது என்னுடைய வேலை இல்லை நான் என்னுடைய கஷ்டமருக்கு துரோகம் செய்ய முடியாது என்று மறுத்து விடுகிறார் லெஜென் சரவணன்.. இந்த சூழ்நிலையில் இவரின் குழந்தை கடத்தப்படுகிறது.. குழந்தை ஹார்பரில் உள்ள ஒரு கண்டெய்னரில் இருப்பதாக தெரிய வருகிறது.. இதன் பின்னர் சரவணன் என்ன…

Read More

கார் மேனி – செல்வம் விமர்சனம்!!

கதை… சமுத்திரக்கனி & லட்சுமி பிரியா தம்பதி.. இவர்களுக்கு ஒரு மகன்.. கௌதம் மேனன் & அபிநயா தம்பதி இவர்களுக்கு ஒரு மகள்.. கௌதம் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கிறார் சமுத்திரக்கனி.. ஒரு குடும்ப உறுப்பினர் போலயே அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மனைவி அபிநயாவின் விருப்பப்படி ஒரு மாதம் வெளிநாடு சுற்றுலா செல்கிறார் கௌதம் மேனன்… அப்போது சமுத்திரக்கனி இடம் அந்த காரை விட்டு செல்கிறார்கள்.. இவருக்கு ஏற்கனவே கடன் தொல்லை இருப்பதால் இந்த சூழ்நிலையில் ஒரு மாதத்திற்கு இந்த காரை எடுத்து வாடகை டாக்ஸி ஓட்டுகிறார் சமுத்திரக்கனி. அதன் பிறகு என்ன நடந்தது? இந்த விஷயம் கௌதமுக்கு தெரிய வந்ததா.? ஒரு குடும்பமாக பார்க்கும் அவர்களிடம் சமுத்திரக்கனி செய்ததா சரியா.? நடிகர்கள்… P. SAMUTHIRAKANI – SELVAM LAKSHMI PRIYA CHANDRMOULI…

Read More

காளிதாஸ் 2 – விமர்சனம்…

கதை… ஒரு அப்பார்ட்மெண்டில் புத்தாண்டு அன்று ஒரு சிறுமி காணாமல் போகிறாள்.. சில மணி நேரங்களில் அவள் கொல்லப்படுகிறாள்.. இதனை அடுத்து அங்குள்ள சிசிடிவி கொண்டு காவல்துறை விசாரிக்கிறது.. போலீஸ் பரத் மற்றும் பவானி ஸ்ரீ இருவரும் விசாரணையில் இறங்குகின்றனர்.. அவர்கள் விசாரிக்க விசாரிக்க எதிர்ப்பாராத திருப்பங்கள்.. இறுதியில் என்ன ஆனது.? நடிகர்கள்… பரத் – காளிதாஸ் சங்கீதா – ரூபா சுந்தரி பவானி ஸ்ரீ – ஏசி வைஷ்ணவி சினிமா போலீஸ் போல அல்லாமல் எதார்த்த போலீசாக தன்னுடைய பொறுப்பு உணர்ந்து பரத் பட்டைய கிளப்பியிருக்கிறார்.. அவருக்கு பக்கபலமாக ஏசி வேடத்தில் பவானி ஸ்ரீ வெளுத்துக்கட்டி இருக்கிறார்.. நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டியிருக்கிறார் பூவே உனக்காக சங்கீதா.. சொல்லாமலே என்ற பாடலுடன் அவருக்கு அறிமுகமும்.. இடைவேளை வரை இவரது கேரக்டர் வெறுமனே…

Read More

நீளிரா – விமர்சனம்!

கதை… இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களை பற்றி நிறைய திரைப்படங்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் அவையெல்லாம் ஆவண படங்களாக இருக்கும.. ஆனால் இதில் இருந்து சற்று மாறுபட்டு ராணுவத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் உள்ள போராட்டத்தை வித்தியாசமாக கொண்டு சென்றுள்ளனர். முக்கியமாக ஒரு திருமண நடக்கவிருக்கும் வீட்டிற்கு இராணுவத்தினர் திடீரென நுழைந்து போராளிகளை தேடினால் அந்த குடும்பத்தின் மனநிலை எப்படி இருக்கும்.. ராணுவத்தினரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். 1988 காலகட்டங்களில் இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சோமீதரன்.. நடிகர்கள்…. நவீன் சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் இதில் நவீன் சந்திரா அமைதிப்படை கேப்டனாகவும், சனத்…

Read More

சாத்தான் தி டார்க் – விமர்சனம்

தெய்வ சக்திக்கு எதிரான தீய சக்தி… இதன் மூலம் சாகா வரம் பெற்று உலகை ஆள முடியும் என தீய சக்திகள் நம்புகின்றனர்.. இதற்கு சாத்தானை வழிபட்டு அவர்கள் பல வழிபாடுகளை செய்கின்றனர்.. இந்த மையக்கருவை வைத்து ஒரு த்ரில்லர் அனுபவத்தை வித்தியாசமாக கொடுத்துள்ளனர் படக் குழுவினர்.. கதை…. ஒரு கிராமத்தில் பல கொலைகள் நடக்கிறது.. மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள்.. அவர்களை கொலை செய்தது யார் என்ற விசாரணையின் போது தான் அவர்கள் சாத்தானுக்கு நரபலி கொடுக்கப்பட்டவர்கள் என்ற விவரங்கள் தெரிய வருகிறது.. இதனை செய்தவர்கள் யார் அவர்களின் பின்னணி என்ன அவர்களின் நோக்கம் என்ன என்பதுதான் மீதிக்கதை.. நடிகர்கள்… பல படங்களில் சாந்தமான அம்மா அண்ணி அக்கா வேடங்களில் நடித்தவர் மோனா பத்ரே.. இவர் நாயகி ஐராவின் அம்மாவாக நடுத்திருக்கிறார் கிட்டத்தட்ட படத்தின் கதை…

Read More

முத்து என்கிற காட்டான் – விமர்சனம்

கதை… முத்து குமார் – சிங்கம்புலி – வடிவேல் முருகன்.. இவர்கள் மூவரும் ஒரு கிராமத்தில் காவல் நிலையத்தில் பணிபுரிகின்றனர்.. இங்கு ஒரு புகார் கூட வராத நிலையில் காவல் நிலையத்தை மூட பார்க்கின்றனர்.. ஆனால் வெளியே சென்றால் இது போல சுதந்திரமாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் ஏதாவது ஒரு புகார் வராதா ஏதாவது ஒரு விசாரணை வராதா என்று மூவரும் காத்திருக்கின்றனர்.. இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் விஜய் சேதுபதியின் தலை மட்டும் ஒரு இடத்தில் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடைக்கிறது.. அந்தத் தலையை வைத்துக்கொண்டு உடல் எங்கே தேடுகின்றனர்.. மேலும் அது பற்றி விசாரணையில் இறங்குகின்றனர்.. விஜய் சேதுபதி நல்லவரா கெட்டவரா.? அவரை கொன்றது யார் என்ற விசாரணை இறக்கும்போது தான் அவர்களுக்கு பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தெரிய…

Read More

நீ FOR EVER – விமர்சனம்

கதை… சுதர்சன் கோவிந்த் – நாயகன் அர்ச்சனா ரவி – நாயகி அம்மா வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டு பின்னர் கணவன் கைவிட்டதால் வீட்டிற்கு திரும்பி வருகிறார்.. அதன் பிறகு தாத்தா ஒய் ஜி மகேந்திரன் கண்டிப்பில் வளர்கிறார் நாயகன் சுதர்சன்.. இதனால் காதலிப்பதை தவிர்த்து வருகிறார்.. இந்த சூழ்நிலையில் நீ பார் எவர் என்ற ஒரு டேட்டிங் ஆப் டெவலப் செய்கிறார்.. ஆனால் காதல் அனுபவம் இல்லாத காரணத்தினால் இவரது அலுவலகத்தில் இவரது ஆப் டெவலப்புக்கு போதுமான ஆதரவு இல்லை.. எனவே ஒரு காதலை தேடி அலைகிறார்.. இயக்குனராக ஆசைப்படுகிறார் நாயகி அர்ச்சனா.. அப்போது ஒரு காதல் கதையை எடுத்து வர சொல்கிறார்கள்.. காதல் அனுபவம் இருந்தால் இன்னும் எளிதாக கதையை எழுதலாம் என்பதற்காக பொய்யான ஒரு காதலை தேடி செல்கிறார்…

Read More