வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் சாகசப் படமான ‘ஜூடோபியா 2’-ன் புதிய டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் நவம்பர் 28 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜூடோபியாவின் வரலாற்றில் மிகப்பெரிய வழக்கை முறியடித்த பிறகு, புதுமுக போலீஸ்காரர்களான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிஃபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர், சீஃப் போகோ (இட்ரிஸ் எல்பாவின் குரல்) நெருக்கடி காரணமாக ஒன்று சேர்கின்றனர். ஆனால், அவர்களின் பார்ட்னர்ஷிப் அவர்கள் நினைத்த அளவுக்கு உறுதியானதாக இல்லை என்பதைக் கண்டறிந்தனர். விஷப் பாம்பின் வருகையுடன் இணைக்கப்பட்ட ஒரு மர்ம பாதையில் அவர்கள் தங்களைக் கண்டுபிடிக்கும்போது, அவர்களின் பார்ட்னர்ஷிப் சோதனைக்குட்படுத்தப்படுகிறது. ‘ஜூடோபியா 2’ கேரி டி’ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்), நிப்பிள்ஸ்…
Read MoreMonth: July 2025
விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் ‘தலைவன் தலைவி’ படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்
வீனஸ் பிக்சர்ஸ் திரு டி. கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜனின் வழிகாட்டுதலோடு நான்காவது தலைமுறையாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜனும் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்து வருகின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கலகலப்பான குடும்ப திரைப்படம் ‘தலைவன் தலைவி’ உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில், முன்னணி நட்சத்திரங்களுடன் சத்யஜோதி குடும்பம் இணைந்தாலே பிளாக்பஸ்டர் வெற்றியில் தான் முடியும் என்பது தசாப்தங்கள் மற்றும் தலைமுறைகள் தாண்டி மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது. மக்கள் திலகம்’ எம்ஜிஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’…
Read Moreகிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது… மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!
விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கிங்டம்” திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்”, அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த ஒரு வலிமையான டிரெய்லர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரனின் சக்திவாய்ந்த இசையுடன் ஏற்கனவே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியுள்ளது. விழாவில் விஜய் தேவராகொண்டா கூறியது: “என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி…
Read Moreரசிகர்களே தயாராகுங்கள் ‘மாமன்’ ஆகஸ்ட் 8 ஆம் தேதி, உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது.
*~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. ~* இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் தமிழ் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கும். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம், மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி மற்றும்…
Read More‘அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து ஹரிசரண்- சச்சின் சுந்தரின் மனதை வருடும் மெல்லிசை பாடல் ‘ரதியே ரதியே…’ வெளியாகியுள்ளது!
புல்லாங்குழல் இசையில் Male Solo பாடல்கள் எப்போதும் நம் ஆன்மாவில் ஊடுருவி காலத்திற்கும் மறக்க முடியாத பாடலாக அமையும். அந்த வரிசையில் ஹரிசரண்- சச்சின் சுந்தரின் ரொமாண்டிக் சிங்கிள் ‘ரதியே ரதியே…’ பாடல் விரைவில் வெளியாகவுள்ள ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து வெளியாகி இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ளது. சச்சின் சுந்தர் திரைத்துறைக்கு புதியவராக இருந்தாலும் இசைக்கு மெருகூட்டியுள்ளார். ‘ரதியே ரதியே…’ பாடல் மெல்லிசையாக மட்டுமல்லாது ஆழமான உணர்வையும் கொடுத்துள்ளார். ஹரிசரண் குரல் மனதை வருடும் விதமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் கதை ஆழமானது. இன்றைய சமூகத்தில் அந்நியப்பட்ட மனதுடன் இருப்பவர் தான் கதாநாயகன். அவருக்கு இணையான, தர்க்கரீதியான வழக்கறிஞர் உண்மைகள் மற்றும் பகுத்தறிவு மூலம் உலகைப் பார்க்கிறார். ‘ரதியே ரதியே…’ பாடல் இந்த மாறுபட்ட உலகங்களுக்கு இடையே ஒலி பாலமாக மாறி, அவர்களின்…
Read Moreஇயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதன் மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்தியா முழுவதும் டிசம்பர் 19 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமாட்டிக் உலகின் கிளிம்ப்ஸை இந்த டிரெய்லரில் கண்டு ரசிக்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடான இதன் மூன்றாவது அத்தியாயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். ‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ படத்தில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் புதிய சாகசங்களுக்காக மீண்டும் பண்டோரா உலகிற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறார். மரைன் நாவி தலைவராக மாறிய ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நாவி…
Read More1 மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர் !!
இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. நம் இந்திய சமூகத்தையே உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பரபரப்பான க்ரைம் திரில்லர் பாணியில் அழுத்தமான சமூக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நபி நந்தி, ஷரத், “லப்பர் பந்து” ஸ்வாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, கவிஞர் சினேகன் சங்கிலி முருகன், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், முருஸ்டார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. PGP. ENTERPRISES சார்பில் P.G.பிச்சைமணி தென்னிந்தியா முழுவதும் வெளியிடுகிறார். இயக்கம்:…
Read Moreஅமீர் கான் தனது புதிய வெற்றி திரைப்படமான ‘சித்தாரே ஜமீன் பர்’திரைப்படத்தை YouTube-இல் வெளியிடுகிறார் !!
திரைப்படங்களை அனைவரும் எளிதாக பார்க்கக்கூடிய வகையில், அதிரடியான புதிய முயற்சியாக, அமீர் கான் அவரது நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை, YouTube-இல் Movies-on-Demand முறையில் வெளியிடுகிறார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மிகக் குறைந்த விலையில், திரைப்படத்தை பார்த்து மகிழ முடியும். இந்த புதிய அதிரடி முயற்சி, உலகளாவிய அளவில் திரைப்பட விநியோகத்தில் ஒரு புதிய வழிகாட்டியாகும். “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை YouTube-இல் மட்டுமே பார்க்க முடியும், வேறெந்த டிஜிட்டல் பிளாட்ஃபாரங்களிலும் இப்படத்தை காண முடியாது. அமீர் கான் இன்று தனது சூப்பர்ஹிட் திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் வெளியீட்டை, ஆகஸ்ட் 1, 2025 முதல் YouTube-இல் பிரத்தியேகமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த புதிய அதிரடி நடவடிக்கை, 2025 இன்…
Read Moreஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் ஆன்மீக திரைப்படம் “ ராகு கேது “ !!
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழின் புகழ்மிகு இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்களுக்கு பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராண படங்களும் வரவில்ல எனும் ஏக்கத்தை போக்கும் வகையில் இப்படம் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கு அருமைமிகு படைப்பாக உருவாகியுள்ளது. ராகுகேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி மேடம் துர்கையாகவும், விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடித்துள்ளனர். மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தினை அனைத்து…
Read Moreவிவசாயத்தின் பின்னணி கொண்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ‘உழவர் மகன்’.
இப்படத்தை ப. ஐயப்பன் எழுதி இயக்கியிருக்கிறார். இது இவரது மூன்றாவது படம்.ஏற்கெனவே இவர் ‘தோனி கபடி குழு’ ‘கட்சிக்காரன் ‘ ஆகிய படங்களை இயக்கியவர் .அந்த படங்களைப் போலவே இதிலும் ஒரு சமூகக் கருத்தை மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். இந்த ‘உழவர் மகன்’ படத்தை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே. முருகன் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பு நா. ராசா. இப்படத்தில் இன்று அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டு இந்த அமைப்பின் மூலம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது விவசாயம்.தொழில் உத்திரவாதம் இல்லாத விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயிகள் நாளும் துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறத இந்தப் படம். நாள்தோறும் இந்தத் தொழில் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாய நிலங்கள் களவாடப்படுகின்றன. வெவ்வேறு தொழில்களுக்கு இரையாக்கப்படுகின்றன. உயிர்த்தொழிலான பயிர்த் தொழிலை மீட்க செய்ய என்ன செய்ய வேண்டும்? அது…
Read More