ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், ‘சில்மிஷம்’ சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன்…
Read MoreMonth: October 2025
ZEE5-ல் ‘கிஸ்’ — வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங்!
நாட்டின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரொமாண்டிக் தமிழ்த் திரைப்படமான ‘கிஸ்’-யை நவம்பர் 7, 2025 முதல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கமாக உருவாக்கியுள்ள இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் VTV கணேஷ், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘கிஸ்’ திரைப்படம் அர்ஜுன் (கவின்) எனும் திறமையான இசைக்கலைஞரின் கதையைச் சொல்கிறது. அவரிடம் ஒரு வினோதமான சக்தி உள்ளது — ஒரு ஜோடி முத்தமிடும் போதெல்லாம், அவர்கள் உறவின் எதிர்காலத்தை முன்கூட்டியே காண முடியும்! காதலும் விதியும் மீது நம்பிக்கையற்ற அர்ஜுனின் வாழ்க்கை, மீரா (ப்ரீத்தி அஸ்ரானி) என்பவளைச் சந்தித்த பிறகு பெரும் மாற்றத்தை எதிர்கொள்கிறது. அவள்…
Read More‘லோகா சாப்டர்1: சந்திரா’ திரைப்படம் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஐந்து மொழிகளில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிறது!
மலையாள சினிமாவில் ரெக்கார்ட் பிரேக்கிங் வெற்றி பெற்ற ‘லோகா சாப்டர்1: சந்திரா’ திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது என்பதை ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்ப்டம் மலையாள சினிமாவின் பிரம்மாண்ட கதை சொல்லல் முறையை மறுவரையறை செய்தது. மேலும், மலையாள சினிமா ஒன்று உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிக வசூல் செய்தது என்ற வரலாற்று சாதனையையும் இந்தத் திரைப்படம் படைத்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி மற்றும் உலகளவில் கவனம் ஈர்த்தது மட்டுமல்லாது 2025 ஆம் ஆண்டில் அதிகம் கொண்டாடப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. டொமினிக் அருண் இயக்கி எழுதிய இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சந்திராவாக மாறுபட்ட நடிப்பைக் கொடுத்துள்ளார். அவருடன் நஸ்லென், அஞ்சு குரியன்,…
Read Moreஅனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !
அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான புரமோசன் பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, சமூக வலைதளத்தில் “140 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது… His Untamed Presence, Is Your…
Read Moreஆரியன் — திரை விமர்சனம்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவ்வளவு எளிதில் செய்தியாளர்களிடம் சிக்காத பிரபல நடிகரின் நேர்காணல் நடக்கிறது. அப்போது பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் செல்வராகவன், திடீரென்று எழுந்து அந்த நடிகரை சகட்டுமேனிக்கு திட்டியவாறு துப்பாக்கியால் அவரது காலில் சுடுகிறார். அதே வேகத்தில் பார்வையாளர்களாக வந்த அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக்கி அதிர்ச்சியளிக்கிறார் காவல்துறை அவரது டிமாண்ட் என்ன என்று கேட்க, அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதோடு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரையும் விடுகிறார். பொதுமக்கள் கண் முன்னே இறந்தவர் எப்படி இந்த கொலைகளை செய்வார்? அந்த ஐவர் யார்? ஐவரும் கொல்லப்பட்டனரா என்ற கேள்விக்கு விடையே ஆரியன். தொடர் கொலைகளை தடுத்து நிறுத்த நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியாக விஷ்ணு…
Read Moreமெஸஞ்ஜர் –திரை விமர்சனம்
காதலித்த பெண் மனிஷா ஜஸ்னானி ஏமாற்றியதால் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை முடிவுக்கு வருகிறார். அதற்காக தூக்கில் தொங்க முயலும் நேரத்தில் அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசேஜ் வருகிறது.தற்கொலை முடிவை தள்ளி வைத்து விட்டு மெசேஜை பார்க்கிறார். அதில், “தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருக்கிறார்கள்” என்ற செய்தி இருக்கிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், அந்த செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார் என்பது தான். இறந்தவர் எப்படி மெசெஜ் அனுப்ப முடியும்? அவர் உண்மையில் இறந்து விட்டாரா ? என்பதை விசாரிக்கும் ஸ்ரீராம் கார்த்திக்குக்கு அவர் இறந்தது உண்மை தான் என்பது தெரிய வருவதோடு, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களும் தெரிய வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது ?…
Read Moreஹனு மேன் உலகிலிருந்து… அடுத்த சக்தி எழுகிறது — மஹாகாளி! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
ஹனு மேன் திரைப்படத்தின் மூலம், இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படங்களை மறுபரிமாணம் செய்த தொலைநோக்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா (Prasanth Varma)மற்றும் ஆர்கேடி ஸ்டூடியோஸ் (RKD Studios) இணைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ‘மஹாகாளி’ படத்தின் நாயகியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘மஹாகாளி’ படத்தின் நாயகியாக பூமி ஷெட்டி (Bhoomi Shetty) நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காட்சிப் பிரமாண்டத்திற்கான மேடையை அமைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 50% முடிவடைந்துள்ளதுடன், தற்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது. நட்சத்திர நடிகர்கள் இல்லாத இப்படத்தில், மிகப்பெரிய தயாரிப்பு செலவினை மேற்கொள்வதில் தயாரிப்பாளர்கள் எந்த தயக்கமும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகைகள் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டாலும், கதையின் உண்மைத்தன்மை மற்றும்…
Read Moreபுகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’!
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து, ‘அங்கம்மாள்’ படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்தை எஸ். கார்த்திகேயன், பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சோய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர். புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையின் தழுவலே ‘அங்கம்மாள்’ திரைப்படம். இதுபற்றி பெருமாள் முருகன் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படத்தின் கதை என்னுடையது என்றாலும் இதற்கான தழுவல் உரிமையை கொடுத்ததோடு என் பங்கு முடிந்துவிட்டது. இதன் பிறகு, இந்தக் கதையை முழுமையாகப் புரிந்து கொண்டு படமாகக் கொண்டு வந்ததில்தான் இயக்குநரின் திறமை உள்ளது. சிறுகதை சினிமாவாக மாறும்போது அதில் பல விஷயங்கள் மாறலாம். குறிப்பாக இந்தக் கதையில் கிளைமாக்ஸ் மற்றும் பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துவதை சொல்லலாம். 25 நிமிடங்கள் நீளம் கொண்டு குறும்படத்திற்கான கதையை முழுநீள…
Read Moreமர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழுவைத் தொடர்ந்து உருவாகிறது. அவர்கள் தெரியாமலே ஒரு நின்றுபோன ஆவியை எழுப்பிவிடுகிறார்கள். ஆர்வத்துடன் தொடங்கிய பயணம், விரைவில் ஒரு திரில்லிங்கான அனுபவமாக மாறுகிறது. குழுவினர் அங்கு…
Read Moreகபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும், கண்ணகிநகர் கபடிகுழுவிற்கும் 10 லட்சம் காசோலை வழங்கிய இயக்குநர் மாரிசெல்வராஜின் பைசன் படக்குழு
கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவினரின் சாதனைகளையும், கபடி விளையாட்டின் உணர்வையும் கொண்டாடும் வகையில், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் பைசன் படக்குழுவின் சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக ₹10 லட்சத்திற்கான காசோலையை இயக்குநர் திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் இன்று கார்த்திகாவின் கண்ணகி நகர் வீட்டுக்கு சென்று வழங்கினார். 2025 ஆம் ஆண்டு பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக கார்த்திகா சமீபத்தில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். இறுதிப் போட்டியில் ஈரானு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்தார், பல முக்கியமான புள்ளிகளைப் பெற்றார். கார்த்திகா மற்றும் அவரது குழுவினரின் கபடியும்,…
Read More