நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

மர்மம் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி ஜானர் கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சஸ்பென்ஸ், பரபரப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இந்த கதைக்களங்கள் கவர்கின்றன. இந்த வரிசையில், மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லரான ‘மாறுவேஷம்’ திரைப்படமும் இணைந்துள்ளது. ஒனிரோமான்சி பிக்சர்ஸ் பேனரின் கீழ், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூலை 14, 2026) வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பான திருப்பங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் பரபரப்பான தருணங்கள் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய துப்பறியும் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சவால் நிறைந்த வழக்குகளை தீர்ப்பதில் ஆர்வம் கொண்ட காவல்துறை அதிகாரியான திலக் என்ற கதாபாத்திரத்தில் வைபவ்…

Read More

டோவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி’ – ஜூலை 24 முதல் Sony LIV-ல்!

திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற டோவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi) திரைப்படம், வரும் ஜூலை 24 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் உருவான இந்த ஆக்ஷன்-டிராமா திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் கதைக்களம்: 1958-ஆம் ஆண்டு கேரளாவின் பின்னணியில் இக்கதை நகர்கிறது. ‘காணியார்’ என்ற மலைக்கிராமத்தில் அரசியல், மதம் மற்றும் அதிகாரம் எப்படி மோதிக்கொள்கிறது என்பதைப் படம் காட்டுகிறது. இதில் டோவினோ தாமஸ், ‘கிருஷ்ணா பிள்ளை’ என்ற ஊர்சுற்றும் ரௌடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் எப்படி அந்த ஊரின் தேவாலயத்தைக் காக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’யாக மாறுகிறார்? அங்கு நடக்கும் கொள்கை மோதல்களில் எப்படி மாட்டிக்கொள்கிறார்? என்பதே கதை. நட்சத்திரப் பட்டாளம்: முன்னணி கதாபாத்திரங்கள்: டோவினோ தாமஸ், காயாடு லோஹர். முக்கிய வேடங்களில்: விஜயராகவன்,…

Read More

” காமராஜ் ” திரைப்படத்தின் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கோரிக்கை.

அன்புடையீர் வணக்கம். இந்நாட்டிற்கு தங்களின் தொண்டு சிறக்க வாழ்த்துகள். பெருந்தலைவர் காமராஜர் வாழ்வை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். பலரது பாராட்டையும் பெற்றது அத்திரைப்படம். பெருந்தலைவருக்கான முதல் திரை ஆவணம் அதுதான். திரைப்படம் தயாரிக்க பல்வேறு தரப்பிடம் உதவியும், வங்கிக்கடனும் பெறப்பட்டது. ‘காமராஜ்’ திரைப்படத்துக்குப் பின் ‘WELCOME BACK GANDHI’ ‘திருக்குறள்’ போன்ற படங்களை தயாரித்தேன். அவைகளும் ‘காமராஜ்’ திரைப்படத்துக்கான கடனை திரும்பச்செலுத்த உதவவில்லை. அதனால் மிகுந்த மனச்சுமையுடன், கடன் வழங்கியவர்களை எதிர்கொள்ளும் துணிவின்றி, வாழ்வில் பயணிக்கிறேன். ‘காந்தி’ திரைப்படத்துக்கு மத்திய அரசு உதவியது. ‘அம்பேத்கர்’ திரைப்படத்துக்கு மத்திய அரசும், மகாராஷ்டிரா அரசும் சுமார் 18 கோடி ரூபாய் உதவின. தமிழக அரசு ‘பெரியார்’ படத்துக்கு உதவியது பெருந்தலைவர் காமராஜரை தாங்கள் ஒரு வழிகாட்டியாக கொண்டுள்ள நிலையில், தங்கள் அரசு எனக்கு உதவும் என்ற…

Read More

பாசக்கார அமைச்சர் – இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி…!

விஜயகாந்த் நடித்த ‘பெரியண்ணா’ மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., நடித்த ‘நாகா’ படங்களை இயக்கியவர் இயக்குநர் சுரேஷ். இவர் எஸ்.ஏ., சந்திரசேகரின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். அவர் கூறுகையில்., ” இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் முதலமைச்சர் விஜய்யை வைத்து இயக்கிய ‘ரசிகன்’, ‘மாண்புமிகு மாணவன்’ மற்றும் ‘ஹரிதாஸ்’, ‘வட்டக்கானல்’ போன்ற பல படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆர்.கே, வரதராஜ். நாங்கள் இருவரும் எஸ்.ஏ.சி., சார் பயிற்சிப் பட்டறையில் பயின்றவர்கள். சமீபத்தில் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளரும் தமிழக அமைச்சருமான வெங்கட்ரமணனைச் சந்தித்தோம். ஆரம்ப காலத்தில் இருந்து எங்களது இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் மற்றும் தமிழக முதல்வர் விஜய்யுடன் பயணித்து வருபவர் என்பதால் அவருடன் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.அதுமட்டுமல்ல எங்களுக்குள் நல்ல புரிதலும் இருந்தது. தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும் கூட, எங்களைப் பார்த்தவுடன்…

Read More

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது; ரோஹித் சராஃப் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார் ! பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ தற்போது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. RKD Studios சார்பில் RK துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில், பிரசாந்த் வர்மா கிரியேட்டராகவும், பூஜா அபர்ணா  கொல்லுரு இயக்குநராகவும் செயல்படுகின்றனர். மிகப்பெரிய புராண காவியமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில், IMAX வடிவத்திற்காக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கண்கவர் காட்சியமைப்புகளும், முழுமையான பெரிய திரை அனுபவமும் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன. படப்பிடிப்பில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, நடிகர்…

Read More

இலக்கியத்துக்கு பல்கலைக்கழகம் வேண்டும் ஏற்புரையில் கோரிக்கை

ஜூலை 13 டெல்லியில் நடந்த விழாவில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண் சிங் விருதை வழங்கினார். ஞானபீட அமைப்பைச் சேர்ந்த சாகு அகிலேஷ் ஜெயின், ஸ்ரீ முதத் ஜெயின், பிரதீபா ராய், ஆர்.என்.திவாரி ஆகியோர் மேடையில் இருந்தனர். விருதைப் பெற்றுக்கொண்டு கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றினார்: “தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில், இந்தியாவின் வரைபடத்திற்குச் சிக்காத ஒரு கடைக் கோடியில், 60 வீடுகளே கொண்ட மெட்டூர் என்ற சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நான் பிறந்தேன். 1950களில் வைகை நதியின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டது; அதன் நீர்தேங்கும் பரப்புக்காக 14 கிராமங்கள் காலிசெய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் நான் பிறந்த ஊர். இடுப்புவரை மூழ்கிய ஊர் கழுத்துவரை மூழ்கத் தலைப்படும்போது, அந்த கிராமத்தின் தாயொருத்தி உலர்ந்த கண்ணீரோடும் நனைந்த சேலையோடும் கதறிக்கொண்டே கரையேறுகிறாள். அவள் இடுப்பில் ஒரு…

Read More

மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட’

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை வழங்கி வரும் மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம், சிறுவர்களுக்கான திரைப்படமாக உருவாகி பாராட்டுகளைப் பெற்றது. இத்திரைப்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளை வலியுறுத்திய திரைப்படம் என்ற விருது வழங்கப்பட்டது. மேலும், அதில் நடித்த குழந்தை நட்சத்திரம் லக்ஷ்மி, அந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தமிழக அரசு விருதைப் பெற்றார். இதன்மூலம் ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம் இரண்டு தமிழக அரசு விருதுகளைப் பெற்ற பெருமையைச் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர்–இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ‘குரங்கு பெடல்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் தனது அடுத்த படைப்பாக ‘ஆண்ட’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு ஆகிய…

Read More

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்குகிறது – EVIL DEAD BURN

Curtain Raiser – இந்த புகழ்பெற்ற திகில் த்ரில்லர் தொடரை உருவாக்கியவர் சாம் ரெய்மி! தீய சக்திகளால் அவிழ்க்கப்பட்ட பேய் சக்திகளுக்கு எதிராக முக்கிய கதாபாத்திரங்கள் நடத்திய போராட்டமே இதன் முக்கிய கதைக்களம்! தொடரை வெற்றிகரமாக நிலைநிறுத்திய மூன்று படங்கள் ஈவிள் டெட் (1981), ஈவிள் டெட் 2 (1987) & ஆர்மி ஆஃப் டார்க்னெஸ் (1992) ஆகும். ஈவிள் டெட் (2013) என்பது ஈவிள் டெட் தொடரின் புதிய தொடர்ச்சியாக வெளியான ரீபூட் படமாகும்! அதன் வெற்றியின் அடிப்படையில், தொடரைத் தொடர முடிவு செய்யப்பட்டது! ஈவிள் டெட் ரைஸ் (2023) வெளியானது! ஈவிள் டெட் பர்ன் (2026) என்பது ஈவிள் டெட் (2023) படத்தின் ஸ்டேண்டலோன் தொடர்ச்சி மற்றும் ஈவிள் டெட் தொடரின் 6வது பாகமாகும்! 2028ல் வெளிவரவிருக்கும் 7வது பாகத்தை எதிர்நோக்குங்கள்! Synopsis இதுவரை…

Read More

ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புதிய படம் – எழுதி, இயக்கி, தயாரிக்கும் ஷிவானி செந்தில்

கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் கதை, தற்போதைய காலகட்டத்தில் கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சனைகள், அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. நகைச்சுவை, காதல் மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் எம்.…

Read More

துயரம், அதிகாரப் போட்டிகள் மற்றும் மறைந்த உண்மைகள்: ஜியோஹாட்ஸ்டாரின் House of the Dragon சீசன் 3, எபிசோட் 4 வாரிசுரிமைப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது

ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் *House of the Dragon* சீசன் 3-இன் எபிசோட் 4, போர்க்களக் காட்சிகளில் இருந்து விலகி, கிரீன்ஸ் மற்றும் பிளாக்ஸ் அணிகளை ஆட்கொண்டுள்ள தனிப்பட்ட மற்றும் அரசியல் விளைவுகளை ஆழமாக ஆராய்கிறது. துயரம், குற்றவுணர்ச்சி மற்றும் பேராசை மோதிக்கொள்ளும் இந்த எபிசோட், வெஸ்டெரோஸ் முழுவதும் தனது கதையை விரிவுபடுத்தி, சீசனின் இரண்டாம் பாதிக்கான மேடையை அமைக்கிறது. இழப்பும் தலைமையும் இடையே போராடும் ரேனிரா தனிப்பட்ட பேரிழப்பின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத ரேனிரா டார்கேரியன், தனது துயரத்தையும் அரசாட்சிப் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். டம்பிள்டனின் ஆக்கிரமிப்பு முதல் புதிய Master of Coin-ஐ நியமிப்பது வரை, ஒவ்வொரு முடிவும் ராணியாக அவரது உறுதியை சோதிக்கிறது. இதற்கிடையில், அவருக்கு நெருக்கமானவர்கள் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் அவரது ஆட்சியையே குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு…

Read More