அதிமுக கொடுக்கிற கட்சி திமுக எடுக்கிற கட்சி – எடப்பாடி பழனிச்சாமி.

மக்களை நம்பிதான் அதிமுக உள்ளது என்று  திருவண்ணாமலை பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி  தொகுதிகளில், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி மோகனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது, பேசிய முதல்வர் பழனிசாமி,   “மக்கள் பாதிப்படைந்த நேரத்தில் நிவாரணம் வழங்கி மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்ட அரசு அதிமுக அரசு. தைப் பொங்கலை மக்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கினோம். ஒரு வருடத்தில் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,500 வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு.  ஒருநாளாவது குடும்ப அட்டைகளுக்கு திமுக 100 ரூபாய் கொடுத்திருக்குமா?  மக்களுக்குக் கொடுக்கிற கட்சி அதிமுக,…

Read More