அதானி துறைமுகத்திட்டத்தை அதிமுக ஆதாரிக்காது – பன்னீர்செல்வம்

காட்டுப்பள்ளி அதானி துறைமுகத் திட்டத்தை அதிமுக ஆதரிக்காது என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தேரடி பகுதி, பொன்னேரி, அம்பத்தூர் பேருந்து நிலையம், போரூர் சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய துணை முதல்வர், “தாலிக்குத் தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேறு கால நிதியுதவியும் உயர்த்தப்பட்டுள்ளது, இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது” என அதிமுகவின் திட்டங்கள் குறித்துப் பேசினார். “திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தன. ஆனால் தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. இதை மக்கள் எண்ணி பார்க்க…

Read More

சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

அதிமுகவில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிடும் பட்டியலில் முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலமும் சேர்ந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக நேற்று (மார்ச் 18) மனு தாக்கல் செய்திருக்கிறார். பெருந்துறை தொகுதியில் 2011 தேர்தலில் வெற்றிபெற்ற தோப்பு வெங்கடாசலம் அமைச்சர் ஆக்கப்பட்டார். 2016 தேர்தலிலும் அவர் மீண்டும் வெற்றிபெற்றும் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளையும் வெற்றி பெற வைத்தும் தனக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தார் தோப்பு. 2016 ஆட்சி அமைத்ததும் கருப்பணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஜெ.மரணத்துக்குப் பின் அமைச்சரவையில் செங்கோட்டையனும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து சேர்க்கப்பட்டார். அப்போதும் தோப்புவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர்…

Read More