தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக 50 சீட்டுகளில் வெற்றி கிடைக்கும்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் மொத்தமாக 50 சீட்டுகளுக்குக் குறைவாகவே பெறும் என்று திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆங்கிலத் தொலைக்காட்சியான தி ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பிரசாந்த் கிஷோர் தமிழகம், மேற்கு வங்காளம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் பாஜக 200 இடங்களைப் பெறும் என்று அமித் ஷா உள்ளிட்டோர் கூறி வருகிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரசாந்த் கிஷோர், “பாஜகவுக்கு பண பலம் இருக்கிறது, மத்திய அரசு என்ற ஆட்சி பலம் இருக்கிறது. டெல்லி தேர்தலில்கூட அவர்கள் பல்வேறு மாநில முதல்வர்களை பிரச்சாரத்துக்கு இறக்கினார்கள். அதேபோல மேற்கு வங்காளத்திலும் இப்போது பல்வேறு பிரச்சாரர்களை களமிறக்கியுள்ளனர். ஆனால், களம் வேறு மாதிரி இருக்கிறது.…

Read More

ஆளுங்கட்சியின் தலையீட்டை நிறுத்த வேண்டும் – திமுக புகார்

தேர்தல் ரத்து என்று செய்தி வெளியான விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீட்டை நிறுத்த வேண்டும் என்றும் கே.என்.நேருவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாகவும் திமுக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் நேற்று (மார்ச் 29) அளித்த புகாரில், “முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திமுகவுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை ஜீரணிக்க முடியாத ஆளும்கட்சியினர் மற்றும் அதிகாரிகள், பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களுக்குப் பணம் கொடுத்து திமுக மற்றும் கட்சித் தலைவர்கள் மீது கெட்ட பெயர்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கே.என்.நேருவின் பெயரைக் களங்கப்படுத்த முயற்சி செய்கின்றனர். கடந்த மார்ச் 27ஆம் தேதி நாளிதழ் ஒன்றில் ‘கரூர், திருவண்ணாமலை, திருச்சி…

Read More