தமிழக ஆக்ஸிசன் தட்டிப்பறிக்கப்பட்டது எப்படி

தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலம் என்ற அவல நிலையை அ.தி.மு.க. அரசு உருவாக்கியிருப்பதும், நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பதும் பேரதிர்ச்சியளிக்கிறது”என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியா முழுதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மருத்துவமனைகளில் கடுமையாக இருக்கிறது. மருத்துவ ரீதியான ஆக்ஸிஜன் இல்லாமையால் கொரோனா நோயாளிகள் பலர் இறப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொள்ளையடித்துச் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்துக்கும் ஆக்ஸிஜன் தேவை இருக்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து தமிழக அரசுக்கே தெரியாமல் ஆக்ஸிஜன் வெளி மாநிலங்களுக்கு மத்திய அரசால் அனுப்பப்பட்டுள்ளதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read More

உருமாறிய கொரோனா – மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் வகைகளை மரபணு வரிசைப்படுத்தி ஆய்வு செய்வதற்காக, 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை (இன்சாகாக்) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் உருவாக்கியது. அந்த ஆய்வுக்கூடங்களில் கொரோனா வகைகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது. மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அனுப்பி வைத்த 10 ஆயிரத்து 787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இதுவரை 771 உருமாறிய கொரோனாவை ‘இன்சாகாக்’ குழுமம் கண்டுபிடித்துள்ளது. இவற்றில், 736 மாதிரிகள், இங்கிலாந்தை சேர்ந்த உருமாறிய கொரோனாவை சேர்ந்தவை. 34 மாதிரிகள் தென்ஆப்பிரிக்க உருமாறிய கொரோனாவையும், ஒரு மாதிரி, பிரேசில் உருமாறிய கொரோனாவையும் சேர்ந்தவை. 18 மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில், சர்வதேச பயணிகள், அவர்களுடன்…

Read More