மிக்ஜம் புயலின் பாதிப்புகளால் மனம் நொந்துபோய் ஆதங்கத்துடன் நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை.

Dear Media Friends Herewith sending the Statement from Director & Actor R.Parthiban Good morning friends, நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன்.ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா குண்டுங்குழி நிறைந்த மும்பாபையிலும்(பணக்கார முதலைகள் சாலையை கடக்கும் மாநிலம்)இதே நிலை. தனி மனிதனாகவும்,தமிழ்நாடாகவும்,வல்லரசு(?) நாடாகவும்,இந்தியா தன்னிறைவடையாத (தண்ணீரும் வடியாத)நாடு! தண்ணீர் இருக்கிறதா?என ஆராய,சந்திரனுக்கு சந்திரயானும்,செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்?ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் lake view apartments-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே? அதிவேக புல்லட் ரயில்,அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம் இப்படிப்பட்ட நாளைய இந்தியப் பெருமையில் எருமை…

Read More

‘செங்களம்’ இணையத்தொடரின் வெற்றியை அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களில் கொண்டாடிய படக்குழு

ZEE5 தளம் வழங்க, Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணிபோஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்து, ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான ‘செங்களம்’ இணையத் தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இத்தொடருக்கு கிடைத்து வரும் மாபெரும் வரவேற்பை படக்குழுவினர் வித்தியாசமான வகையில் கொண்டாடியுள்ளனர். செங்களம் அரசியல் சம்பந்தமான தொடர் என்பதால், தமிழக அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களுக்கு சென்று, மாலையிட்டு மரியாதை செய்ததுடன், துப்புரவு பணியாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி இந்த இணையத்தொடரின் வெற்றியை கொண்டாடியுள்ளது படக்குழு. தமிழின் முதல் அரசியல் சம்பந்தமான முழு நீள இணையத்தொடராக வெளியாகியுள்ள செங்களம், அரசியலின் கோர முகத்தையும், அரசியல்வாதிகளின் மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதுவரையிலான திரை வரலாற்றில் அரசியல் களம்…

Read More