தமிழ்நாடு அரசின் ஏழு இலக்குகள்

தமிழக அரசின் 7 இலக்குகளை எட்ட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கொரோனா பரவல் தமிழகத்தில் 13 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 15) ஆலோசனை நடத்தினார். இதில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டனர். அப்போது , கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், கல்வியில் – வேலைவாய்ப்பில் – சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகாரத்தை, பதவியைப் பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும். வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு! மகசூல் பெருக்கம்,…

Read More

பன்னீர்செல்வம்தான் என் சாய்ஸ் – சசிகலா

சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசிய ஆடியோ சில வாரங்களாகவே வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில்… அவர்களில் 15 பேரை திடீரென அதிமுகவில் இருந்து நீக்கி நேற்று (ஜூன் 14) அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று (ஜூன் 15) சசிகலாவின் இன்னொரு ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியைச் சேர்ந்த சிவனேசன் என்ற அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசும் ஆடியோவில், ‘இனி என் முதுகில் குத்த இடமே இல்லை’என்று குறிப்பிட்டுள்ளார், ஓபிஎஸ்சைதான் நான் முதல்வராக தொடர வைக்க நினைத்திருந்ததாகவும் ஆனால் அவராகவேதான் ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும் தேனி சிவனேசனிடம் சொல்லியிருக்கிறார் சசிகலா. “அந்த சமயத்துல அவருதானப்பா போனாரு… இல்லேன்னா அவரைத்தானே நான்…’என்று சிவனேசனுக்கு பதில் சொன்ன சசிகலா தன்னுடன் பேசிய தொண்டர்களை கட்சியை விட்டு நீக்கியதையும் கண்டித்துள்ளார். “என்னோட பேசுறாங்க, நீங்க வாங்கம்மானு கூப்பிடுறாங்கன்றதுக்காக கட்சிக்காரவுங்களை…

Read More

மறைக்க சொல்லும் மத்திய அரசு மறுக்கும் தமிழ்நாடு அரசு

தடுப்பூசிகள் இருப்பு விவரத்தை வெளியிடக் கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால், தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையைத் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகா் பிரதீப் ஹல்தார், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் வெப்பநிலை போன்ற தகவல்களை இ-வின் என்ற தளத்தில் மத்திய அரசு சேமித்து வைத்துள்ளது. இந்த மின்னணு அமைப்பில், கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களை மாநில அரசுகள் தினசரி பதிவேற்றம் செய்கின்றன. இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த மட்டுமே அந்த தகவல்களை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும். அந்த மின்னணு அமைப்பில்…

Read More

உயிர் பாதுகாப்பு கேட்கும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

அரசியலிலிருந்து விலகுவதாகத் தேர்தலுக்கு முன்பு சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், கடந்த மாதம் இறுதியிலிருந்து தொண்டர்களிடமும், கட்சி பிரமுகர்களிடமும் பேசும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்றும் கூட சசிகலா பேசும் மற்றொரு ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம், சசிகலா பேசும் அந்த ஆடியோவில், சசிகலா: ஹலோ…ஆனந்தன் நல்லா இருக்கீங்களா… ஆனந்தன்.. ஆனந்தன்: நல்லா இருக்கேன்மா… நான் உளுந்தூர்பேட்டை ஆனந்தன்மா… சசிகலா: என்ன இப்படி சொல்றீங்க… உங்களை நல்லா தெரியும்… எப்படி மறக்க முடியும் ஆனந்தன்: தாயில்லா பிள்ளையாக தவிச்சுகிட்டு இருக்கிறோமா நாங்க, மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு… எங்களுக்காக வாங்க… சசிகலா: ஒண்ணும் கவலைப்படாதீங்க.. சீக்கிரமே நல்லது நடக்கும். ஆனந்தன்: அரசியலிலிருந்து விலகி போறேனு நீங்க சொன்னதுல இருந்து, நானும் அரசியலுக்கு முழுக்குபோட்டுட்டேன். அம்மாவுக்காகவும், இந்த…

Read More

அதிமுகவில் கொரடாவும் கொங்கு மண்டலத்துக்கா?

அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர், அதாவது எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க கடந்த மே 10ஆம் தேதி, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடியது. அதில் பன்னீர்செல்வத்துக்கும் பழனிசாமிக்கும் இடையேயான கடுமையான வாக்குவாதத்துக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ஓபிஎஸ்ஸுக்கு வேண்டுகோள் வைக்கப்பட, அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அப்போது ஏற்பட்ட சலசலப்பால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட பதவிகளுக்கு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாமல் போனது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரைச் சந்தித்து அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடர்பாக ஆலோனை நடத்துகிறார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில், திடீரென அதிமுக தலைவர்களுக்கு சட்டமன்றக் கட்சி துணைத் தலைவர், கொறடா பற்றிய கவலை ஏற்பட்டிருக்கிறது.…

Read More

தமிழ்நாடு முதல்சட்ட பேரவைக் கூட்டம் அறிவிப்பு

வரும் ஜூன் 21ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு நேற்று (ஜூன் 9) மாலை அறிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார். அப்போது, ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து வரும் ஜூன் 21ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்பின் சட்டப்பேரவை அலுவல் கூட்டம் நடைபெறும். சட்டமன்றம் எத்தனை நாட்கள் நடைபெறும், என்னென்ன பணிகள் என்பதை அதில் முடிவு எடுப்போம். ஜனநாயக முறையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும்.…

Read More

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை

மதுரைத் தொகுதியில் 30 ஆயிரம் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த எனது தொகுதி நிதியில் இருந்து ஒரு  கோடி ரூபாய் தருகிறேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிவித்துள்ளார். இதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து  மத்திய சுகாதார செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம்.பி.எழுதியுள்ளகடிதம் வருமாறு முதலில் நாடு முழுமையும் உச்சபட்ச அர்ப்பணிப்போடும், கடும் உழைப்போடும் கோவிட்டை எதிர்த்து களத்தில்போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக் கள். அவர்களின் முயற்சிகள், அமைதியையும் நிம்மதியையும் மக்களின் வாழ்வில் விரைவில் கொண்டு வருமென்று நம்புகிறேன். கோவிட் பேரிடர் இரண்டாம் அலை 18-45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை அதிகமாகப் பாதிக்கும் என பலரும் எச்சரித்து வருகின்றனர். இதை மனதில் கொண்டு ஒன்றிய அரசாங்கம் இந்த வயது அடைப்பிற்குள் வரக்…

Read More

ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த தயாராகும் தமிழ் திரையுலகம்

இந்திய அரசியலில் தமிழக அரசியலும், சினிமாவும் வேறுபட்டது பிற மாநிலங்களில் சினிமாவும் அரசியலும் நீரும் எண்ணையுமாகவே இருந்து வருகிறது தமிழகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆண்ட கட்சிகளின் தலைவர்கள் சினிமாவில் பிரபலமாகி அரசியல் தலைவர்களாக வளர்ந்தவர்கள் அதனால் சினிமா அவர்களின் தாய் வீடாக மாறிப்போனது இதன் காரணமாக எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாக திரையுலகினர் சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது வாடிக்கையாகி போனது அப்படி நடத்தாத சூழ்நிலையில் ஆளுங்கட்சியே விழாவை நடத்துமாறு அறிவுறுத்துவதும் உண்டு கடந்த ஒரு வருடகாலமாக கொரானா காரணமாக சினிமா தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது. பிற தொழில்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் போன்று சினிமா தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை இந்தியா முழுவதும் திரையரங்குகளில் விற்கப்படும் டிக்கட்டுகளுக்கு GST மட்டுமே செலுத்தும் நடைமுறை உள்ளது தமிழகத்தில் உள்ளாட்சி வரி 8% விதிக்கப்படுகிறது.…

Read More

கமலஹாசனை இறுதி சுற்றில் வீழ்த்திய பாஜக வானதி சீனிவாசன்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எல்லா கட்சியினராலும் கவனிக்கப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகோவை தெற்கு தொகுதிநடிகர் கமலஹாசன் சென்னை அல்லது அவரது பூர்வீக பூமியான சிவகங்கை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்த்து வந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தபோது தமிழக அரசியல் களம் ஆச்சர்யத்துடன் பார்த்தது பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் இங்கு போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கோவை தெற்குதொகுதிகமல்வருகையால்கூடுதல் அந்தஸ்து பெற்றது  நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே குறைவான வாக்குகள் என்றாலும் கமல் முன்ணனியில் இருந்தார் ஆனால் கடைசி இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது கமலஹாசன் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம்  கமல்ஹாசன் தோல்வியடைந்தார். மொத்தம் நடந்த 26 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், வானதி சீனிவாசன் 1,728…

Read More

அதிக கொரானபாதிப்புகளில் தமிழ்நாடு மத்திய அரசு எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் மத்திய அரசு மீதுகடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில்… இன்று (ஏப்ரல் 21) காலை வரை 13 கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன்று (ஏப்ரல் 21) பகலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. “ கொரோனா தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணி வரை, 19,01,413 முகாம்களில்‌ 13,01,19,310 பயனாளிகளுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 29 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 95-வது நாளான நேற்று (ஏப்ரல் 20, 2021), நாடு முழுவதும் 29,90,197 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24…

Read More