விவேக்கின் வெற்றியும்… தமிழக மக்களின் விழிப்புணர்வும்…

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும் பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான வி.சி.குகநாதன் மறைந்த நடிகர் விவேக் இறுதி ஊர்வலம், அதில் கூடிய கூட்டம், மக்களின் உணர்வுகள் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் வெறும்கூட்டத்திற்கும், விவரமான ஊர்வலத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.சின்னக் கலைவாணர் என விவேக் அழைக்கப்பட்டதற்கு காரணம் அவர் கலையுலகின் மூலமாகவும், சொந்த வாழ்விலும் ஆற்றி வந்த பகுத்தறிவு பிரச்சாரம், தமிழருக்கான சமுதாய வளர்ச்சிப் பணிகள்.குத்தாட்ட நடிகைக்கு கூடுகின்ற கூட்டம் வேறு… விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் கண் நிறைந்த கண்ணீரோடு, மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஜாதி, மத, கட்சி பேதங்கள் இன்றி இளைஞர் கூட்டம், கலைஞர்கள் கூட்டம், பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்… பிரதமரின், முதல்வரின், எதிர்க்கட்சி தலைவர்களின் அர்த்தமுள்ள இரங்கல் செய்திகள் அனைத்துமே உண்மையானவை. உணர்வுப்பூர்வமானவை. சென்ற தலைமுறையின் ஒரு மாபெரும் திரைப்பட கலைஞன் ரயில் நிலையங்களில்…

Read More

விவேக் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது- தமிழக முதல்வர் அஞ்சலி

மறைந்த நடிகர் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள நீண்ட இரங்கல் செய்தியில், “விவேக், தலைமைச் செயலகத்தில் பணியாற்றி பின்னர் திரைத்துறையில் நாட்டம் கொண்டு ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தின் மூலம் நடிகராகத் தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகராகத் தனது ஆளுமையைக் கோலோச்சியவர். விவேக் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தசமூகஆர்வலர்.இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர். அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் ‘க்ரீன் கலாம்’ என்ற அமைப்பின் மூலம் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக்…

Read More