மதுரைத் தொகுதியில் 30 ஆயிரம் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த எனது தொகுதி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிவித்துள்ளார். இதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம்.பி.எழுதியுள்ளகடிதம் வருமாறு முதலில் நாடு முழுமையும் உச்சபட்ச அர்ப்பணிப்போடும், கடும் உழைப்போடும் கோவிட்டை எதிர்த்து களத்தில்போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக் கள். அவர்களின் முயற்சிகள், அமைதியையும் நிம்மதியையும் மக்களின் வாழ்வில் விரைவில் கொண்டு வருமென்று நம்புகிறேன். கோவிட் பேரிடர் இரண்டாம் அலை 18-45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை அதிகமாகப் பாதிக்கும் என பலரும் எச்சரித்து வருகின்றனர். இதை மனதில் கொண்டு ஒன்றிய அரசாங்கம் இந்த வயது அடைப்பிற்குள் வரக்…
Read MoreMonth: May 2021
நடிகர் சென்ராயனுக்குகொரோனா
மூடர்கூடம், மெட்ரோ, அல்டி, பஞ்சுமிட்டாய், லொடுக்கு பாண்டி, தண்ணில கண்டம், கொளஞ்சி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் சென்ராயன் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்இந்நிலையில் சமீபத்தில் தான் விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் என்ற புது ஷோவில் பங்கேற்றார் அவர். அதில் அவர் ஜூலி உடன்சேர்ந்துநடனம்ஆடிஇருந்தார். நேற்றைய (12.05.2021) தினம்தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுஅறிவித்து உள்ளார் நடிகர்சென்ட்ராயன் அதில் அவர் மக்களே.. வணக்கம் மக்களே.. உண்மையிலேயே நடிக்கல ஆவி புடிச்சிட்டு இருக்கிறேன்.வாழ்க்கையில் நான் அனைத்தையுமே பாசிட்டிவ் ஆக தான் எடுத்துக்கொள்வேன். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், சினிமாவில் ஜெயிக்க வேண்டும், உடலஆரோக்கியமாகவைத்துக் கொள்ள வேண்டும் என நான் பாசிட்டிவ் ஆக தான் பார்ப்பேன். இப்போ எனக்கே கொரோனா பாசிட்டிவ் ஆகி போச்சு. ஆரம்பத்தில்…
Read Moreசிவக்குமார் – அனுஷ்கா கூறும் தற்காப்பு நடவடிக்கை
கொரோனா தொற்றின் மீது. மக்களுக்கு இருக்கும் பயத்தை காட்டிலும் அது பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வருவது மக்களின் மனநிலையை பாதிக்கிறது என சமூக பொதுவெளியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது இவற்றில் இருந்து நேர்மறையான, மனோநிலை, சிந்தனைகளுக்கு மக்களை மாற்ற வேண்டும் என்கிறார் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா கொரோனா பயத்தை போக்கும் விதமாக சில வழிமுறைகளை சொல்லி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா மீதுள்ள பயத்தை போக்கி தைரியப்படுத்துவது அவசியம்.இங்கு 10 பேர் செத்தனர். அங்கு 50 பேர் செத்தனர் என்றெல்லாம் பயமுறுத்தி இருக்கிற தைரியத்தை போக்குவதை விடுத்துகொரோனாவை எதிர்கொள்ள நாம் எப்படி இருக்க வேண்டும். நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டும்.இந்த…
Read Moreஅமைச்சரிடம் உதவி கேட்ட நடிகர் சங்கமும் முதல்வர்நிவாரண நிதி வழங்கிய நடிகர்களும்
தமிழ் சினிமா பிரமுகர்களால் நேற்றைய(12.05.2021) இருவேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், இயக்குனர்கள் உறுப்பினர்களாக இருக்ககூடிய தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினரான பூச்சி எஸ்.முருகன் செய்தி விளம்பர துறை அமைச்சரிடம் நடிகர் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரம் அழிந்துவருகிறது இதில் இருந்து அவர்களை காப்பற்ற அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் தமிழ் சினிமாவில் வியாபார முக்கியத்துவமுள்ள நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோருடன் நடிகர் சிவக்குமார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து முதல்வர் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கினார் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், புதிய படுக்கைகள் அமைக்க முதல்வர் தாராள நிதி வழங்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினரான பூச்சி…
Read Moreபெண்கள் உரிமையை பேசும் காயல்
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் காயல். இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாதி மாற்று திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படமாக உருவாகி இருக்கும் காயல் திரைப்படம் காதலும் பயணமும் கலந்த ஒரு திரைவடிவம். ஒரு பெண்ணுடைய தேர்வை அங்கீகரிக்காத சமூகத்தை நோக்கி கேட்கப்படும் கேள்வியே இத்திரைப்படத்தின் ஆணிவேராக உருவாக்கி இருப்பதாக கூறுகிறார்இயக்குனர் தமயந்தி. முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில், ஜஸ்டின் கெனன்யாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த…
Read Moreசினிமாவில் என்னை அரங்கேற்றம் செய்தவர் இப்ராஹிம் – T.ராஜேந்தர் உருக்கம்
இயக்குனர் டி.ராஜேந்தரை, இயக்குனராக ‘ஒருதலை ராகம்’ படத்தில் அறிமுகம் செய்த, தயாரிப்பாளர் இப்ராஹிம் வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு டி.ராஜேந்தர் அறிக்கை மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இயக்குனர் டி.ராஜேந்தர் ‘ஒருதலை ராகம்’ படத்தின் கதையை கையில் வைத்து கொண்டு, தயாரிப்பாளரை தேடி அலையாத இடங்கள் இல்லை. ஏறி இறங்காத தயாரிப்பு கம்பெனிகள் இல்லை. இவரை நம்பி பணம் போட தயாரிப்பாளர்கள் முன்வராத நிலையில், மயிலாடுதுறை அருகே உள்ள வடகரையில் உள்ள முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த வசதி படைத்தவரான இப்ராஹிம் டி.ராஜேந்தருக்கு அறிமுகமானார். டி.ராஜேந்தர் கூறிய கதை பிடித்து போனதால், ‘ஒருதலை ராகம்’ படத்தை தயாரிக்கவும் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் சில நிபந்தனைகளும் டி.ராஜேந்தருக்கு விதிக்கப்பட்டது. கதை, திரைக்கதை, வசனம், இசை போன்ற பணிகளை டி.ராஜேந்தர், செய்தாலும் படத்தை நான்தான் இயக்குவேன் என்றார் இம்ராஹிம்.…
Read Moreகுணச்சித்திர நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று காலை சென்னையில் காலமானார் இடிச்சபுளி செல்வராஜின் சகோதரரான இவர் 1989ம் ஆண்டு பிரதாப்போத்தன், ஸ்ரீப்ரியா ஜோடி நடித்து G.N.ரங்கராஜன் இயக்கத்தில் வெளியானகரையெல்லாம் செண்பகப் பூபடத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சுமார் 180க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணசித்திரபாத்திரங்களில் நடித்திருக்கிறார்ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், மோகன்,அஜீத், விஜய், சரத்குமார் மற்றும் இன்றைய இளம் நடிகர்கள் நடித்த படங்களில் நகைச்சுவை, குணசித்திரபாத்திரங்களில் தனது நடிப்பு ஆளுமையை அழுத்தமாக பதிவு செய்தவர் நடிகர் பாண்டு சின்னத் தம்பி,திருமதி பழனிசாமி, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை,ஏழையின் சிரிப்பில், பணக்காரன், பாட்டுக்கு நான் அடிமை, இதயவாசல், நாளைய தீர்ப்பு, வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, பம்மல் கே.சம்பந்தம், வரலாறு, வில்லு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பாண்டு வயது முதுமையின் காரணமாக நடிப்பதை குறைத்துக்கொண்டு ஓய்வில்…
Read Moreநடிகை நமீதாவின் புதிய தொழில்
தமிழ் சினிமாவில் 2004ல் விஜய்காந்த் நடித்து வெளியான எங்கள் அண்ணா படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நமிதாகதாநாயகி, குணசித்திர, பாத்திரங்கள்என 34 படங்களில் மட்டுமே நடித்துள்ள நமீதா தமிழகத்தின் ஷகீலாவாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபின் அதிமுகவில் இணைந்தார் சிலகலம் கழித்து பாஜகவில் சேர்ந்தார் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தார் நமீதா கொரானா ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் புதிய திரைப்படங்களை வியாபாரம் செய்யவும், வெளியிடவும்OTT தளங்கள் பிரபலமானது நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தனிதனி OTT தளங்களை தொடங்கி புதிய படம்,பழைய படங்கள், குறும்படங்கள் என வெளியிட்டு வருகின்றனர் தமிழகத்தில் மட்டும் 100 க்கும் மேற்பட்டOTT தளங்கள் இயங்கிவருகின்றன. இந்த குடிசை தொழிலில் நடிகை நமீதாவும் இணைந்திருக்கிறார் தரமான OTT தளங்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது “நமீதா தியேட்டர்ஸ்”…
Read Moreசன் தொலைக்காட்சியும் – துக்ளக் தர்பார் படமும்
விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் துக்ளக் தர்பார்.டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள இந்தபடத்தைதமிழ் சினிமாவில் முன்ணனி தயாரிப்பாளரான லலித்குமார்தயாரித்துள்ளார். இந்த வருட தொடக்கத்தில் தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி தந்த மாஸ்டர் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் இவர் என்பதும், தற்போது விக்ரம், துருவ் விக்ரம் நடித்து வரும்படங்களை தயாரித்து வருகிறார் துக்ளக் தர்பார்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது என நீண்டகாலமாகதகவல்கள்கசிந்து வருகிறதுஅப்பேதெல்லாம்இத்தகவலைதயாரிப்புத்தரப்பில்உடனடியாக மறுத்துவிடுவார்கள் கொரானாஇரண்டாம் பரவல் காரணமாகதிரையரங்குகளை மீண்டும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை அதனால் தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களைOTT நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகளை தயாரிப்பாளர்கள்மேற்கொள்ள தொடங்கியுள்ளனர் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தமிழ்சினிமாவுக்கு எந்தளவுக்கு நன்மைகளை வழங்கபோகிறது என்கிற எதிர்பார்ப்பு திரை துறையினர் மத்தியில்ஏற்பட்டுள்ளதுஅதேவேளையில்தயாராகிவெளியீட்டுக்குகாத்திருக்கும் சிலபடங்களுக்குநெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளதுஅவற்றில் விஜய்சேதுபதி நடித்துள்ள…
Read Moreஇயக்குனர் முருகதாஸ் கனவு நிறைவேறுமா?
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர், இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கதை திருட்டு குற்றசாட்டுக்கு உள்ளாகும், தமிழ்சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என மறைந்த இயக்குனர் பாலசந்தரால் பாராட்டப்பட்டவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் நட்சத்திர நடிகர்கள் கால்ஷீட்டுக்காக காத்துகொண்டிருக்கிறார் இல்லை இனி அப்படி ஒரு வாய்ப்பு A.R.முருகதாஷ்க்கு கிடைப்பது அரிதுஎன்கின்றனர் தமிழ் சினிமா வட்டாரத்தில்.ரஜினி நடித்த தர்பார் படம்தான்A.R.முருகதாஸ் கடைசியாக (2020 ஜனவரி) இயக்கிய படம் அதன்பின்,விஜய்யின் 65 ஆவது படத்தைஇயக்கஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து விலகினார்.அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.பல நாட்கள் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு அனிமேஷன் படமொன்றை இயக்குவதுஎன்றுமுடிவெடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் என்கின்றனர் அவரது வட்டாரத்தில் இந்தப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்கவிருப்பது…
Read More