அதிமுகவில் கொரடாவும் கொங்கு மண்டலத்துக்கா?

அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர், அதாவது எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க கடந்த மே 10ஆம் தேதி, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடியது. அதில் பன்னீர்செல்வத்துக்கும் பழனிசாமிக்கும் இடையேயான கடுமையான வாக்குவாதத்துக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ஓபிஎஸ்ஸுக்கு வேண்டுகோள் வைக்கப்பட, அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அப்போது ஏற்பட்ட சலசலப்பால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட பதவிகளுக்கு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாமல் போனது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரைச் சந்தித்து அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடர்பாக ஆலோனை நடத்துகிறார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில், திடீரென அதிமுக தலைவர்களுக்கு சட்டமன்றக் கட்சி துணைத் தலைவர், கொறடா பற்றிய கவலை ஏற்பட்டிருக்கிறது.…

Read More

வடபழநி கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்த நபரை அடையாளம் காட்டாதது ஏன்?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையின் இந்த முதல் மாதத்தில் அடிக்கடி செய்திகளில், இடம்பெற்ற அமைச்சர்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் முக்கியமானவர். கடந்த ஜூன் 7 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெளியிட்ட அறிவிப்பும் மிக முக்கியமானது. திமுக ஆட்சி என்றால் இந்து கோயில்களை கவனிக்க மாட்டார்கள் என்ற பொதுவான ஒரு கருத்தை உடைக்கும் வகையில், வடபழனி முருகன்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 250 முதல் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்டுவிட்டதாக ஜூன்7 ஆம் தேதிதான் அறிவித்தார் அமைச்சர் சேகர்பாபு. அன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , “முதல்வரின் உத்தரவுப்படி சிதிலமடைந்திருக்கும் அனைத்து கோயில்களையும் புனரமைக்கும் நோக்கில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான கலைஞர் நகரில் உள்ள 5.5…

Read More