அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா- 2 படத்தில் நடிகை ஸ்ரீலீலாவின் அசத்தல் நடனம்

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். பிளாக்பஸ்டர் படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ஸின் தொடர்ச்சியான ‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பராஜாகவும் மற்றும் அவரது மனைவியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதில் நடிகை ஸ்ரீலீலா சிறப்புப் பாடலுக்கு நடனமாட இருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகமாக்கியுள்ளது. இந்த செய்தியை படக்குழு அற்புதமான போஸ்டருடன் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது. ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ அண்டாவா’ பாடல் உலகளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக மாறியுள்ளது. இப்போது, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தென்னிந்தியாவின் நடன ராணியான ஸ்ரீலீலாவுடன் இணைந்து மீண்டும் ஒரு ஹிட் பாடலைக் கொடுக்க…

Read More

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எளிய மாணவர்களுக்கு பறக்கும் பயணம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சமூக செயல்பாடு மற்றும் உள்ளடக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ரெயின்ட் ராப்ஸ் சமூக அமைப்பு தனது வருடாந்திர “வானமே எல்லை” நிகழ்வை ஆனந்தம் மற்றும் விஜிபி உலக தமிழ் சங்கத்துடன் இணைந்து நடத்த உள்ளது. சேவாலயா, ஆனந்தம் கல்வி நிலையம், ஆனந்தம் சிறப்பு பள்ளி, செஸ் ஆனந்த இல்லம் ஆகியவற்றில் இருந்து வரும் குழந்தைகள் மற்றும் தோழி அமைப்பில் இருந்து வரும் திருநங்கைகள், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்காக சிறப்பு விமானப் பயண அனுபவம் வழங்கும் நிகழ்வாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பயணம் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று சென்னை விமான நிலையத்திலிருந்து தொடங்குகிறது. சேலத்தில் அவர்கள் தரையிறங்கும் போது சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி ஐ.ஏ.எஸ். அவர்களின் அன்பான வரவேற்பும் வாழ்த்துகளும் கிடைக்கவிருக்கின்றன. உள்ளடக்கத்தையும், கனவுகளையும், எட்டக்கூடிய எல்லைகளை கொண்டாடும் இவ்விழாவில்…

Read More

‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் புரோமோ – வைரல்

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், லக்னோவில் சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.  ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடி  என்டர்டெய்னரில் டீசர் கலக்குகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான  ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவல் மற்றும் கலக்கலான ஸ்டைலில்  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த டீசரில் ராம் சரண் சக்திவாய்ந்த ஐஏஎஸ் அதிகாரி, மற்றும் சமூகத்திற்காக ஏதாவது செய்ய விரும்பும் உற்சாகமான இளைஞன் என இரட்டை வேடத்தில் கலக்குகிறார். ஒரு நிமிடம் 30 வினாடிகள் கொண்ட டீசர்,  படத்தின் அரசியல் பின்னணி, கதைக்களத்தின் மையத்தை அறிமுகப்படுத்துவதுடன், படம் பற்றிய ஆவலை அதிகரிக்கிறது. பிரம்மாண்ட ப்ளாக்பஸ்டர் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர்…

Read More

70 வருட தமிழ் சினிமா கண்டிராத புதிய கதைக்களத்தில் ‘மறைமுகம்.

ABICKA ARTS சார்பில் மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்ஷன் திரில்லர் கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா தனுஜா கதாநாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள் காமெடி நடிகர் பாவா லஷ்மணன், நந்தா சரவணன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிரியதர்ஷினி, தேவி கண்ணன் முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள். அறிமுகம் ஜீவகன் உமேரா பேகம். குழந்தை நட்சத்திரம் ஜானவ் எதிர்பார்ப்புக்குரிய இன்னொரு அறிமுகம். மற்றும் முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள்ளார் A P ஷர்வின். இவர் ஏற்கனவே துள்ளும் காலம் சோக்காலி என்ற இரு படங்களை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை விஜய் திருமூலம் கையாள, இசையமைதிருக்கிறார் வசந்த். வி…

Read More

முரளி ராம. நாராயணன் பதவி விலக வற்புறுத்தி முன்னாள் தலைவர் கே.ஆர். பரபரப்பு அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. படம் எடுப்பதில் தொடங்கி வியாபாரம், ரிலீஸ், கலெக்ஷன் என்று அத்தனையுமே இன்று சவாலாக மாறிப் போயிருக்கிறது. பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் நான்கு வருடங்களாக முடங்கிப் போய் கிடக்கிறது. நட்சத்திர நடிகர்கள் படங்களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கிடைப்பதில்லை. சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆடியோ ரைட்ஸ் கியூப் கட்டணம் டிக்கெட் புக்கிங் கட்டணம் உள்ளிட்ட எதையுமே முறைப்படுத்த முடியாவிட்டால் எதற்கு சங்கத் தலைவர் பதவி? இத்தனை வருடங்களாக பொறுத்து பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த உறுப்பினர்கள், தலைமைக்கு எதிராக நம்பிக்கையில்லா…

Read More

ஹோம்பாலே நிறுவனத்தின் மூன்று படங்களில் தொடர்ந்து நடிக்கும் பிரபாஸ்

திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக பேக்-டு-பேக் படங்களில் இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வு, திரையுலகில் ஒரு நடிகருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையிலான மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இது பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே இருவருக்கும் மிக முக்கியமான மைல்கல் அத்தியாயமாகும். ஹோம்பாலே பிலிம்ஸ், பல முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில், பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இது இந்திய பார்வையாளர்களுக்கு உயர்தர சினிமா அனுபவத்தை வழங்குவதற்கான ஹோம்பாலேவின் இடைவிடாத முயற்சியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பலதரப்பட்ட ஜானர்களில், கலாச்சார ரீதியாக எதிரொலிக்கும் கதைக்கருக்களுடன் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான திரைப்படங்களை தந்து வரும் தொலைநோக்கு…

Read More

நானியின் அடுத்த அதிரடி படம் “தி பாரடைஸ்”!

நேச்சுரல் ஸ்டார் நானி, தனித்துவமான பாத்திரங்களைத் தருவதில் வல்லவர், அடுத்ததாக அவர் நடிக்கும் படத்தில் மீண்டும் தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவுள்ளார். நானியை முரட்டுத்தனமான, கிராமத்துக் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய தசரா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, #NaniOdela2 படத்தில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓதெலா மற்றும் SLV சினிமாஸின் தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி ஆகியோருடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தசராவின் போது வெளியிடப்பட்டது, இன்று, படக்குழு இப்படத்திற்கு “தி பாரடைஸ்” என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தலைப்பு, வெளிப்பார்வைக்கு அமைதியானதாக இருந்தாலும், படத்தின் போஸ்டர் மிகத் தீவிரமான மற்றும் அதிரடி கதைக்களம் இருப்பதை உறுதி செய்கிறது. துப்பாக்கிகள், ரத்தக்களரி மற்றும் சார்மினார் சின்ன சுவரொட்டி, வன்முறை மற்றும் அதிகாரம் முக்கிய பாத்திரங்களை வகிக்கும் ஒரு சக்தி நிறைந்த கதையுடன் இப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நானியின் கதாபாத்திரம்…

Read More

புதிய எழுத்தாளர்களுக்கு ஓர் மேடையாக ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ தளம்: ரிபெல் ஸ்டார் பிரபாஸ் துவக்கி வைத்தார்!

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் பிரபாஸ், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்ற இணையதளத்தை துவங்கி வைத்தார். பல தரப்பட்ட கதைகள் வெளிச்சத்திற்கு வரவும், எழுத்தாளர்கள் தங்கள் கதை சார்ந்த  கருத்துக்களை பரந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், ஒரு  சிறப்பான தளத்தை வழங்குவதற்காக,  இந்த முயற்சியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்கிரிப்ட் கிராஃப்ட்  தளத்தில் எழுத்தாளர்கள் தங்கள் கதைக்கருக்களை 250-சொற்களில் சுருக்கமாக சமர்ப்பிக்கலாம்.  பார்வையாளர்கள் இந்த கதைக்கருக்களை படித்து மதிப்பிடலாம், அதிக ரேட்டிங் பெற்ற கதைகள் மேலே உயரும். இதன் பின்னூட்ட அமைப்பு, கருத்துக்களுக்குப் பதிலாக மதிப்பீடுகளில் கவனம் செலுத்துகிறது, எழுத்தாளர்கள் நம்பிக்கையை வளர்க்கவும் அவர்களின் கருத்துக்களுக்கு நேர்மறையான ஆதரவைப் பெறவும் உதவும் ஒரு ஆக்கபூர்வமான சூழலை  இந்த தளம் உருவாக்குகிறது. “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் ” இணையதளத்தை துவக்கத்தை கொண்டாடும்…

Read More

நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நிவின் பாலி: அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். #நிவின்பாலி

நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார், இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும் அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர். நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தீர்மானம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

Read More

நமித் மல்ஹோத்ரா, இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார்: ராமாயணம் – பாகம் ஒன்று மற்றும் இரண்டு,  2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!

இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணம் – பாகம் ஒன்று மற்றும் இரண்டு 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!* ரசிகர்களே வலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்! புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான நித்தேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், “ராமாயணம்”, இந்திய சினிமா ரசிகர்களை ஆச்சரியர்த்தில் ஆழ்த்தவுள்ளது.! இந்த காவிய திரைப்படம், இந்தியாவின் மிகவும் நேசத்துக்குரிய கதையினை  மிகப்பிரம்மாண்டமாக தொலைநோக்கு கதைசொல்லலுடன் திரையில் உயிர்ப்பிக்கவுள்ளது. பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோவின் தொலைநோக்கு சக்தியாக, நமித் மல்ஹோத்ரா ஹாலிவுட்டின் சில பெரிய திரைப்படங்களில்  பணிபுரிந்துள்ளார், இதில் டுயூன், இன்செப்ஷன் மற்றும் தி கார்பீல்ட் மூவி போன்ற சமீபத்திய வெற்றித் திரைப்படங்களும் அடங்கும். கூடுதலாக, அவர் ஆங்க்ரி ஃபேர்ட்ஸ் 3ஐயும் சமீபத்தில்  அறிவித்துள்ளார். நமித் மல்ஹோத்ராவின் கதைசொல்லல் பற்றிய ஆழமான புரிதல் அவரை…

Read More