ஒரண்ட’ படக்குழுவினருடன் பிரியாணி சமைத்து பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் சுசி கணேசன்

தனது அடுத்த படைப்பின் பெயர் ‘ஒரண்ட’ என்று சமீபத்தில் அறிவித்த இயக்குநர் சுசி கணேசன், அவர் பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 25) படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், “சினிமா பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சில சமயங்களில் வித்தியாசமாக அமைந்து விடும். அந்த வகையில், இத்தனை படங்களில் ‘ஒரண்ட’ மட்டுமே என் பிறந்தநாளில் முடிந்திருக்கிறது. அதுவும் இரட்டை கொண்டாட்டமாக பிறந்தநாளோடு சேர்த்து படப்பிடிப்பின் நிறைவு நாளையும் படக்குழுவினரோடு பிரியாணி விருந்து சமைத்து கொண்டாடியது நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும்,” என்றார். மிகுந்த பொருட்செலவில் உருவாகியிருக்கும் ‘ஒரண்ட’ படத்தின் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இன்னும் ரகசியமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர், நடிகைகள் யார்… தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்… முதல் பார்வை எப்போது… டீசர் எப்போது… என எந்த விவரத்தையும் வெளியிடாமல்,…

Read More

”நடிகர் கமல்ஹாசனை போல இருப்பது எனக்கு பலம்”- நடிகர் கார்த்திகேயன்!

‘டீ கே’ (Dee Kay) எனப் பிரபலமாக அறியப்படும் நடிகர் கார்த்திகேயன் டிகே பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்கி, தற்போது திரையுலகிலும் குறிப்பிடத்தக்க பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘கனா காணும் காலங்கள்’, ‘ஹார்ட் பீட்’ போன்ற தொடர்களின் மூலமும் ஓடிடி தளங்களிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் கார்த்திகேயன். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ தொடரில் நடித்து பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு மேலும் பரிச்சியமானார். கார்த்திகேயனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவனைகள், ஸ்டைல் மற்றும் வசீகரிக்கும் தோற்றம் ஆகியவை இளம் வயது கமல்ஹாசனை நினைவுபடுத்துவதாக பலரும் கூறுகின்றனர். இதை கார்த்திகேயன் பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறார். அதிலும், கமல்ஹாசன் தனது விருப்பமான கதாநாயகன் மட்டுமல்லாமல், தனது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனும் கூட என்கிறார். கமல்ஹாசனின் படங்களில் ‘அன்பே சிவம்’ திரைப்படம் கார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வழக்கமான ஹீரோயிசத்தைத்…

Read More

200 கோடி வசூலை தாண்டிய “விஸ்வநாத் & சன்ஸ்” – சூர்யாவின் தொடரும் வெற்றிப் பயணம்!!

மீண்டும் 200 கோடி கிளப்பில் சூர்யா – “விஸ்வநாத் & சன்ஸ்” புதிய வசூல் சாதனை சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது. குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக வெளிவந்த “விஸ்வநாத் & சன்ஸ்”, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ஒவ்வொரு புரமோஷனல் அப்டேட்டும் கவனம் பெற்ற நிலையில், தற்போது ரூ.200 கோடி வசூலை கடந்துள்ள செய்தி படக்குழுவினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும்…

Read More

ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

*மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’.* அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது.., “ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என்…

Read More

”நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வர்ஷினி கார்மேகம், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் படித்தவர். குறும்படங்கள் மற்றும் மேடை அனுபவங்கள் மூலம் நடிப்புத்துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவரது கலைப் பயணத்தில் பரதநாட்டியத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. உணர்வுகளை வெளிப்படுத்துவது, ஒழுக்கம் மற்றும் உடல் மொழி ஆகியவற்றில் அவருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது பரதநாட்டியம். தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்த அவர், கேமரா முன் தனது தன்னம்பிக்கையையும் படிப்படியாக வளர்த்துக் கொண்டார். வர்ஷினிக்கு இந்தி சினிமா மீது தனி ஈர்ப்பு உண்டு. கேமராவுக்காக வெறுமனே நடிப்பதைத் தாண்டி, கதாபாத்திரங்களை தங்கள் திறமையான நடிப்பு மூலம் உயிர்ப்பிக்கும் தபு, ரேகா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷோபனா போன்ற நடிகைகள் தனக்கு முன்மாதிரியானவர்கள் என்கிறார். இந்தி மொழியை நன்றாகப் படிக்கவும், சரியாக உச்சரிக்கவும்…

Read More

முருக பக்தர்களுக்கு சமர்ப்பணமாக வரக்கூடிய ‘முருகர் யுகம் பிறந்தாச்சி ‘ பக்திப்பாடல்!

முதல் முதலாக உலகில் உள்ள இசை ரசிகர்கள், முருக பக்தர்கள் காப்புரிமையின்றிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒரு பாடல் உருவாகி உள்ளது. அதுதான் ‘முருகர் யுகம் பிறந்தாச்சி ‘ பக்திப் பாடல். இந்தப் பாடலை புண்ணியம் பவுண்டேஷன் தயாரித்துள்ளது. புகழ்பெற்ற இசை நிறுவனமான திவோ மியூசிக் (divo Music) நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் பாடலை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் நடிகருமான ஜெயம் எஸ்.கே. கோபி உருவாக்கியுள்ளார்.இவர் அரசியலிலிருந்து விலகி ஆன்மீகத்திற்குள் நுழைந்து முழுக்க முருக பக்தராக மாறி ‘முருகனருட்செல்வர்’ என்ற சிறப்புடன் பக்தி மார்க்கத்தில் செயல்பட்டு வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு முருக பக்தராக ,முருகன் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இப்போது உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்களுக்காக தனது ஆராய்ச்சியின் விளைவாக மலர்ந்த அந்த முருகர் ஆராய்ச்சிப் பாடலை உருவாக்கி உள்ளார். அந்தப்…

Read More

முதல் முறையாக .. சின்னத்திரையில் உங்களோடு பேசப்போகிறேன்..

நம்மிடம் இருக்கும் நல்ல விசயங்கள் பற்றி.. நாம் விவாதிக்கும் முக்கிய தலைப்புகளில், குழப்பங்களில் இருப்பவர்களுக்கு இது தீர்வு.. தீர்வோடு இருப்பவர்களுக்கு இது தெளிவு.. அடுத்த கட்ட பயணம்.. நான் சரி எனில் நீ தவறா… இல்லை.. இரண்டுபேருமே சரியா அதுவும் இல்லை…. பேசாமலே இருந்தா அதுவே மக்களுக்கு புரிஞ்சுடும்னு நினைக்கிறது சரியா.. இல்லை நான் மக்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன்னு அட்வைஸ் வரைக்கும் போறது தவறா?.. எல்லா விவாதங்களுக்கும் இரண்டு பக்கம் இருக்கு.. இல்லை பல பக்கங்கள் இருக்கு.. ஆம் இது உங்களுக்கான மேடை.. உங்களின் பார்வையை பேசுங்கள்.. உங்களுக்கான தெளிவை எடுத்துச்செல்லுங்கள்.. நான் கூப்பிடுவது மக்களை.. அவர்களோடு பேச.. அவர்களை பேச வைக்க.. வாங்க பேசலாம்..

Read More

”இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்”- நடிகை சுமித்ரா தேவி!

தனது பள்ளி காலத்திலேயே நடிப்பின்மீது ஆர்வம் கொண்டர் சுமித்ரா. தீவிரம், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான கண்ணகி கதாபாத்திரம் ஏற்று பள்ளி மேடையில் நடித்தது, அவரது நடிப்புப் பயணத்திற்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள சுமித்ரா பரதநாட்டியத்தில் தேர்ந்தவர். இந்த நடனப் பயிற்சி, முகபாவனைகள் மற்றும் உடல் மொழி ஆகியவை அவருக்கு இயல்பான ஆளுமையையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. ’மொத ராத்திரி’ திரைப்படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்திற்கு தேவையான வசீகரம் மற்றும் அமைதியை தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார் சுமித்ரா, நடிகைகள் நந்திதா தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே சுமித்ராவின் மாநிற அழகும் தனித்திறமையும் திரையில் அவருக்கு கூடுதல் வசீகரத்தை கொடுத்துள்ளது. அதிகப்படியான அலங்காரம் தேவையில்லாமலேயே பார்வையாளர்களைக் கவரக்கூடிய மண் சார்ந்த தோற்றம் அவரிடம் உள்ளது. அதேபோல, சுமித்ராவின்…

Read More

சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற தி டார்க் ஹெவன் திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது!

முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’.தணிக்கைக்குச் சென்ற இத்திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் ஒரு வெட்டுக்குக் கூட வாய்ப்பு இல்லாமல் அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டி இருக்கிறார்கள்.இதனையே இந்தப் படத்திற்கான ஒரு தரச் சான்றிதழாகக் கருதி மகிழ்ந்து கொண்டிருக்கிறது படக்குழு. இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.அந்தப் படமும் பட உருவாக்கத்தின் நேர்த்திக்காகப் பேசப்பட்டது. அவர் இரண்டாவதாக இயக்கியிருக்கும் இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: மணிகண்டன்…

Read More

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்குகிறது – இன்சிடியஸ்: அவுட் ஆஃப் த ஃபர்தர்

திரைக்கு முந்தைய அறிமுகம் லீ வானல் மற்றும் ஜேம்ஸ் வான் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த புகழ்பெற்ற திகில் திரைப்பட வரிசை, இன்சிடியஸ் (2010) படத்துடன் தொடங்கி, இன்சிடியஸ்: சாப்டர் 2 (2013), இன்சிடியஸ்: சாப்டர் 3 (2015) என தொடர்ந்து, பின்னர் இன்சிடியஸ்: த லாஸ்ட் கீ (2018) மற்றும் இன்சிடியஸ்: த ரெட் டோர் (2023) ஆகிய இரண்டு தொடர் படங்களுடன் தொடர்ந்தது. இன்சிடியஸ்: அவுட் ஆஃப் த ஃபர்தர் இந்த வரிசையின் 6வது பாகமாகும், மேலும் இது 2023 படத்தின் நேரடி தொடர்ச்சியாகும். கதைச் சுருக்கம் ‘த ஃபர்தர்’ எனும் ஆவி உலகிற்குள் பயணித்து, தொலைந்து போன ஆன்மாக்களை மீட்டு, அவற்றுடன் தொடர்பு கொண்டு இந்த உலகிற்கு திரும்பக் கொண்டு வரும் ஆற்றலைப் பெறும் ஒரு இளம் பெண்ணைச் சுற்றியே கதை அமைந்துள்ளது! தன்…

Read More