மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி,நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகை பூனம் பாஜ்வா, நடிகை இனியா,நடிகை நந்திதா ஸ்வேதா, மற்றும் அஷ்மிதா சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டனர். வெளியான முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
விமல் – ஸ்ரேயா இடையே சிக்கித் தவிக்கும் சத்யன்… திரையில் வெடிக்கப் போகும் காமெடி கலாட்டா!
‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது. காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார். அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும்…
Read Moreகோகுலம் கோபாலன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ஆபரேஷன் கங்கா’
மோகன்லால் நடிப்பில், விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் L367 படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷ்ணு மோகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். பைஜு கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் இணை தயாரிப்பாளர்களாகவும், கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பை ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது ‘ஆபரேஷன் கங்கா’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு மோகன் இயக்கும் மூன்றாவது படம் இது. இவர் இயக்குநராக அறிமுகமான ‘மேப்படியான்’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்று கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா – உக்ரைன் போரின் பின்னணியில், உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க…
Read More“விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்” எனது முதல் மற்றும் மிகவும் தனிப்பட்ட ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சி!
தமிழ் நடுத்தர வர்க்க குடும்பத்தில் வளர்ந்த என் சொந்த வாழ்க்கையிலிருந்து கதைகளை எடுத்து — கல்லூரி, காதல், உறவுகள், திருமணம், இன்னும் இவற்றுடன் வந்த அனைத்தையும் — நகைச்சுவையாக மாற்றியிருக்கிறேன். காதல், குடும்பம், உறவுகள் மற்றும் சமூகம் பற்றி நாம் வளரும்போது நம்பிக்கொள்ளும் சில விஷயங்களை இந்த நிகழ்ச்சி பார்க்கிறது, மேலும் அவற்றை நாம் கேள்வி கேட்கத் தொடங்கும்போது என்ன நடக்கிறது என்பதையும் பார்க்கிறது. தனியாக பேசும்போது வசதியாக நகைச்சுவையாக பேசும், ஆனால் வெளிப்படையாக பேச சற்று சங்கடமாக இருக்கும் விஷயங்களை பற்றி நான் பேசுகிறேன். குடும்ப எதிர்பார்ப்புகள், சினிமா, பாலியல் கல்வி, திருமணம், சாதி, பெண்ணியம் மற்றும் நாம் வளரும் அற்புதமான, சிக்கலான உலகம் பற்றிய கதைகள் இதில் உள்ளன. ஆனால் நான் யாருக்கும் போதனை செய்யவோ, எது சரி எது தவறு என்று சொல்லவோ…
Read Moreவெளிநாடுகளில் ‘ஹனுமான் அன்ஷ்’ படத்தை வெளியிடும் ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம்
இந்தியாவில் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தி பக்தி திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபா என அழைக்கப்படும் மகாராஜ்-ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், தற்போது வெளிநாடுகளிலும் வெளியாக உள்ளது. விஷால் சதுர்வேதி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் பணியை ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. இதையடுத்து, செப்டம்பர் 11-ந் தேதி இப்படம் சர்வதேச திரையரங்குகளில் வெளியாகிறது. மகாராஜ்-ஜி என்று பக்தர்களால் அழைக்கப்படும் நீம் கரோலி பாபா, அன்பு, பக்தி, சேவை ஆகியவற்றை தனது போதனைகளின் முக்கிய அம்சங்களாக கொண்ட ஆன்மிகத் தலைவராக போற்றப்படுகிறார். அவரது ஆன்மிக தாக்கம் இந்தியாவைத் தாண்டியும் பலரிடம் சென்றடைந்துள்ளது. குறிப்பாக, 1960 மற்றும் 1970-களில் ஆன்மிகத் தேடலுடன் இந்தியாவுக்கு வந்த மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரிடமும் அவரது போதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே…
Read Moreஏழு வயதே ஆகும் ரூஹி மொஹஸ்ஸாப் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்தார்!
திருவனந்தபுரம், செப்டம்பர் 4, 2026: கோழிக்கோட்டைச் சேர்ந்த 7 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹஸ்ஸாப், ஐக்கிய நாடுகள் சபையின் உலகிலேயே இளவயது உரையாளர், இளவயது சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் காலநிலை நடவடிக்கை செயற்பாட்டாளர் என்ற சிறப்புகளைப் பெற்றுள்ளார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தார். மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் ரூஹியை அன்புடன் வரவேற்றார். மரங்களைப் பாதுகாத்தல், காகிதத்தைச் சேமித்தல், மறுசுழற்சி, காலநிலை மீதான அக்கறை மற்றும் குழந்தைகளின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் அவரது முயற்சிகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்தார். ரூஹி தனது ’காகிதத்தைச் சேமிப்போம்! மரங்களைப் பாதுகாப்போம்!! பூமியைக் காப்போம்!!! (SAVE PAPER • SAVE TREES • SAVE EARTH)’ என்ற செய்தியை அவரிடம் எடுத்துரைத்ததுடன்,…
Read Moreசென்னையில் டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ பிரம்மாண்ட தொடக்கத்தில் பாரி இளவழகன், அர்ச்சனா ரவிச்சந்திரன், கிஷன் தாஸ், தீப்ஷிகா சந்திரன், பவியாத்ரிகா, ராணவ், இஸ்மத் பானு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு!
சென்னையில் நடைபெற்ற டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ அறிமுக விழாவில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். டெகா இத்தாலி (DEKA Italy) நிறுவனத்தின் மேம்பட்ட Motus AZ+ லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை, டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பிரியன்சியல் செண்டரின் நிறுவனர் மற்றும் சரும நிபுணர் டாக்டர் பைரவி செந்தில் அறிமுகப்படுத்தினார். சருமப் பராமரிப்பில் பயாலஜி அடிப்படையிலான தனது அணுகுமுறையுடன், சர்வதேச அளவிலான லேசர் தொழில்நுட்பத்தை இணைத்து, தனிநபரின் தேவைக்கேற்ற சிகிச்சை முறையை இந்தத் திட்டம் வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், ‘ஜமா’ திரைப்படத்தின் நடிகரும் இயக்குநருமான பாரி இளவழகன் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றியாளர் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும் கிஷன் தாஸ், தீப்ஷிகா சந்திரன்,…
Read More‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம்!
‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம்! • ‘நான்கு ஆண்டுகால உழைப்பில் உருவான ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் பார்க்கும் ஆழ்ந்த அனுபவத்தை வெள்ளித்திரையில் அளிக்கிறது.’ சென்னை, செப்டம்பர் 4, 2026: தமிழ் நாட்டின் காடுகளையும், இங்கு வாழும் உயிரினங்களையும் இதுவரைக்கும் நாம் பார்த்திராத கோணத்தில் கண்டுணர வைக்கும் ‘வைல்ட் தமிழ்நாடு’ (Wild Tamil Nadu) ஆவணப்படம். செப்டம்பர் 7-ஆம் தேதி திங்கட்கிழமை முதல், தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் பிவிஆர் சினிமாஸ் (PVR Cinemas) திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. தமிழ்நாட்டின் விதவிதமான நிலப்பரப்புகளையும், காட்டுயிர்களையும் பார்க்கும் ஒரு ஆழ்ந்த திரையரங்கு அனுபவத்தை இந்த ஆவணப்படம் ரசிகர்களுக்கு அளிக்கும். சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (Sundram Fasteners Ltd.) பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு…
Read Moreஜாபர் சாதிக் மீதான வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் சட்டப் போராட்டத்தில் முக்கிய திருப்பம்!
பிரபல தொழிலதிபரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்தில், தற்போது ஜாபர் சாதிக் தரப்புக்கு முக்கியமான திருப்பமாக நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு கடந்த ஏப்ரல் 21, 2025 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு நடவடிக்கைகளும் சட்டரீதியாக தொடர்ந்து நடைபெற்று வந்தன. குறிப்பாக, அக்டோபர் 7 ஆம் தேதி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், ஜாபர் சாதிக் தொடர்பான இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பு, கடந்த பல மாதங்களாக இந்த விவகாரத்தில் நடைபெற்று வந்த…
Read Moreகமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மீண்டும் ஒருமுறை பெரும் உற்சாக அலையின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார்.
கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ நடைபெற்றது. அதன் காட்சிகள் வெளியான உடனேயே இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளன. கமல்ஹாசனின் இந்த ஈர்க்கக்கூடிய புதிய தோற்றம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது; ரசிகர்கள் இத்திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கமல்ஹாசனும், திரைப்பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமாரும் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தனித்துவமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் பெயர் பெற்ற கமல்ஹாசனின் இந்த புதிய தோற்றம், படத்தின் கதைக்களம் குறித்த ரகசியத்தைக் காக்கும் அதே வேளையில், படத்திற்காக உருவாக்கப்படும் உலகத்தைப் பற்றிய ஒரு சிறு பார்வையை ரசிகர்களுக்கு அளித்து பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தை ராஜ்கமல்…
Read More
