இடம்பெறுபவர்கள்: வாஹீசன் ராசையா (குரல்)8, அஜய் எஸ். காஷ்யப் (குரல்) மற்றும் இசையமைப்பாளர் தரண் குமார். வழங்குபவர்: டாக்டர் ஜே பி லீலாராம், நி“காக்கும் வடிவேல்” ஒரு புதிய இசை மைல்கல்லைப் பதிவு செய்கிறது.றுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மென்ட்(Brand Blitz Entertainment) & இயக்குநர்: கிருபாகர்ஜெய் ஜே. 22 அக்டோபர் 2025 – புதிதாக வெளியான தமிழ்த் தனிப்பாடலான ‘காக்கும் வடிவேல்’ ஏற்கனவே சுயாதீன இசை ஆல்பங்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மென்ட் வெளியிட்ட இந்தப் பாடல், வெறும் நான்கு நாட்களில் அரை மில்லியன் பார்வைகளை நெருங்குகிறது. இது அதன் விரைவான, உலகளாவிய ஈர்ப்பு மற்றும் ஏராளமான கேட்போர் வரவேற்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு வலிமையான கூட்டணி இந்த #MuruganVibeSong வாஹீசன் ராசையா மற்றும் அஜய் எஸ். காஷ்யப்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
இயக்குனர் பா. ரஞ்சித் வழங்கும் “மயிலா”, 2026 ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக திரையிடப்படுகிறது.
நடிகை -எழுத்தாளர்-இயக்குனர் செம்மலர் அன்னம் அவர்களின் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான “மயிலா” திரைப்படத்தை, நியூட்டன் சினிமா கம்பெனி தயாரிப்பில் பிரபல திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் வழங்குகிறார். நியூட்டன் சினிமா தயாரித்த இப்படம், 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR)-வில் நடைபெறும் “பிரைட் ஃப்யூச்சர்” (Bright Future) பிரிவில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8, 2026 வரை திரையிடப்படும் அனைத்து மொழித் திரைப்படங்களில் ஒன்றாக மயிலா படமும் திரையிடப்பட உள்ளது. தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை பின்னணியாகக் கொண்ட “மயிலா” திரைப்படம், தனது சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் பெண்ணான பூங்கொடியின் கதையைச் சொல்கிறது. அவளது மகளான சுடர் என்பவளின் பார்வையில், தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அன்பும் வேதனையும் தாங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேசப்படாத தைரியத்தை இப்படம் மூலம் பிரதிபலிக்கிறது. “…
Read Moreகவிஞர் வாலி பிறந்தநாள் விழா
இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்பட பாடல் ஆசிரியர் பத்மஸ்ரீ வாலி அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எம்ஜி ஆர் என்ற இரு பெரும் தலைவர்களாலும் நேசிக்கப்பட்டவர் வாலி பதிப்பகம் சார்பில்காவிய க் கவிஞர் வாலியின் 94 வது பிறந்தநாள் விழா 1.11.2025 சனிக்கிழமை மாலை இறைச்செல்வர் சிவாலயம் மோகன் அவர்கள் தலைமையில் பண்பாளர் நெல்லை பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் சென்னை தியாகராயநகர் கவியரசு கண்ணதாசன் சிலை அருகில் உள்ள பிடி தியாகராயர் அரங்கில் நடைபெற உள்ளது. வருடம் தோறும் 50,000 பொற்கிழியுடன் வழங்கப்படும் வாலி விருது இந்த ஆண்டு எழுத்தாளர் மாலன் அவர்களுக்கும் கவிஞர் கங்கை அமரன் அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது விருதுகளை திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ்…
Read Moreகவின்–ஆண்ட்ரியா ஜெரெமையா இணைந்து நடித்திருக்கும் மாஸ்க் – நவம்பர் 21 வெளியீடு
அதிக எதிர்பார்ப்பில் இருக்கும், கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் டார்க் காமெடி த்ரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’, வரும் நவம்பர் 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மத்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, படக்குழு வண்ணமயமான புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், படத்தின் OTT உரிமையை Zee5 பெற்றுள்ளதாகவும், ஆடியோ உரிமையை T-Series பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனது முந்தைய படங்களில் சிறப்பாக நடித்த கவின், இம்முறை தனது பல்திறனை வெளிப்படுத்தி, பல்துறை திறமையாளர் ஆண்ட்ரியா ஜெரெமையாவுடன் திரையை பகிர்ந்து கொள்ள உள்ளார். முதன்முறையாக, ருஹானி ஷர்மா கவினின் ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் சார்லி, ரமேஷ்…
Read Moreதுருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இருவருக்கும் மன்சூர் அலிகான் பெரும் பாராட்டு!
விண்ணுக்கும், மண்ணுக்கும், காற்றுக்கும், புயலுக்கும், விளம்பரம் தேவையில்லை. துருவ் விக்ரம் ஒரு புயல்! அது நின்று, சுழன்று, திரைத்துறையை, உலக சினிமாவை சுழன்றடிக்கும். He Proves his Fathers Blood. தான்பட்ட இன்னல்களை, கழனி, வாய்க்கால், வயல், அருவி, ஓடைகள், நதி, கடலிலிருந்து வெப்பமாய், ஆவியாய், பெரு மேகக் கூட்டமாய், நன்னீராய், கருவுற்று பன்னீராய், பூமிக்கு பொழியும் தாய். விண்ணைப் போல் சாதிய கொடுமை நெருப்பில் வெந்து தப்பித்து, இடியாய்… படைப்புகளை மக்களிடம் சேர்க்கும். வேறுபாடு, சாதித்துவம் ஒழிய பாடுபடும். மாரி செல்வாஜ் இன்னும், படைக்க வேண்டியது நிறைய காலடி தடம்… பதி! பாதை உருவாக்கு…. பின்தொடர்வர்…. கோடி!… பைசன் காளமாடன்… சிறந்து, வெற்றி குவிக்கட்டும்! நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான்
Read Moreரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபுடி, பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் – “ஃபௌசி” டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியானது !
ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இணையும் பான் இந்திய படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) ,எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !! அதிரடியான கான்செப்ட் போஸ்டருடன் துவங்கி, பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீ-லுக் போஸ்டருக்குப் பிறகு, ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான்-இந்தியா படத்தின் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்க, பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. “ஃபௌசி” (Fauzi) எனும் தலைப்பே ஒரு சிப்பாயாக பிராபாஸின் பாத்திரத்தையும், வீரத்தையும் அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது. உறுதியான, அழகிய வடிவமைப்பில் இருக்கும் தலைப்பு டிசைன், வீரத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது. 1940களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தின் போஸ்டரில் எரிந்து, கிழிந்த ஆங்கிலேயர்களின்…
Read Moreபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரpபாஸ்! இந்தியாவின் தடுக்க முடியாத “ரெபெல் ஸ்டார்” பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் !
இந்திய நாடு முழுக்க பரவுயிருக்கும் பெயர் — பிரபாஸ்! பிரபாஸின் திரை ஆளுமையும், திரையை புயல் போல் ஆக்கிரமிக்கும் ஆற்றலும், திரைக்குப் பின்னால் அவரின் எளிமையான பண்பும், இந்தியா முழுக்க அவரை ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் பதிய வைத்திருக்கிறது. தொடர் வெற்றிப் படங்களும், உலகளாவிய ரசிகர் வட்டாரமும் இணைந்து, அவருக்கு “இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார்” என்ற பட்டத்தை தந்துள்ளன. ஒவ்வொரு படமும் ஒரு கொண்டாட்டமாக மாறும் அளவுக்கு, அவரின் ஒவ்வொரு தோற்றமும் ஒரு கொண்டாட்டமாக மாறிவிடுகிறது. இந்த மாதம் அவர் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள். இதோ அந்த அபாரமான ரெபெல் ஸ்டாரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்! இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார் பிரபாஸ் “ரெபெல் ஸ்டார்” எனப் போற்றப்படுவதற்குக் காரணம் வெற்றிப்…
Read Moreபைசன்: தீப்பொறியாக பிறந்து, எரிமலையாக எழுந்த படம்! -நந்தா பெரியசாமி
“எந்த நாடெல்லாம் தோற்றுப் போகிறதோ அவை எல்லாம் என் தாய் நாடு” “எங்கெல்லாம் மானுடம் காயம்படுகிறதோ அவர் எல்லாம் நம் தோழமை” என்கிறார் மகாகவி தாந்தே . காளமாடன் திரைப்படத்தை பார்க்கும் பொழுது நினைவுக்கு வந்தது தாந்தே வரிகள் ஒரு திரைப்படம் எழுதும் போதே வெற்றி அடைய வேண்டும். ஆன்மா மண்டியிட வேண்டும்.பைசன் திரைப்படம் அதை வலியோடு செய்திருக்கிறது சகப் போட்டியாளர்களை வெல்வது அவன் நோக்கம் அல்ல .பல நூற்றாண்டு பகையை அவன் வென்று இருக்கிறான் பைசன் ஒரு தீப்பொறி .ஆனால் பெரும் எரிமலையின் வெப்பம் கொண்டிருக்கிறது. “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் “என பாடிய மகாகவி பாரதியின் வரிகளுக்கு தன்னை ஒப்படைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் போராளியாக தன் படைப்புகளை தந்து கொண்டிருக்கும் அவருக்கு நம் வாழ்த்துக்கள் அன்புடன் நந்தா பெரியசாமி…
Read Moreஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், கும்கி அஸ்வின் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன
‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கானின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை தயாரித்து இயக்குவதோடு சமீர் அலி கான் நாயகனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் கலகலப்பான காதல் கதையான ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதை அறிவிக்கும் விதமாக படத்தின் இரண்டாம் பார்வையை (செகண்ட் லுக் போஸ்டர்) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் கதையை பிரதிபலிக்கும் வகையிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையிலும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ செகண்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு…
Read Moreமர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”, அக்டோபர் 24 முதல் ZEE5-இல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது
இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை அக்டோபர் 24 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியிட உள்ளது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது. இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழுவைத் தொடர்ந்து உருவாகிறது. அவர்கள் தெரியாமலே ஒரு நின்றுபோன ஆவியை எழுப்பிவிடுகிறார்கள். ஆர்வத்துடன் தொடங்கிய பயணம், விரைவில் ஒரு பயங்கரமான அனுபவமாக மாறுகிறது. குழுவினர் அங்கு சிக்கிக்கொண்டு வெளியேற முடியாத…
Read More