பாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென் ஸீ தலைமுறையினரின் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருவதால் திறமைசாலியான இசை கலைஞர்கள் புது சிந்தனையுடன் உருவாக்கும் மியூசிக் ஆல்பங்களுக்கான வரவேற்பு உயர்ந்து வருகிறது. இதனை உணர்ந்த பாடகர் – நடிகர் – இசை கலைஞர் ஹர்ஷவர்தன் ‘ மாயம் நீயடி’ எனும் மியூசிக் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். ஹர்ஷவர்தன் இந்த மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கான பாடலுக்கு இசையமைத்து, பாடி, ஆடி நடித்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகி சுப்லாஷினியுடன் இணைந்து ஹர்ஷவர்தன் பாடி இருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலை, “நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்கும் வாய்ப்பை பார்க்கும்போதும் தெரியும். ராதிகா மேம் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து…
Read Moreசமத்துவ இப்தார் விருந்து நிகழ்ச்சியில் இந்த ஆண்டிற்கான ரெயின்ட்ராப்ஸ் ‘சாதனைப் பெண்கள்’ விருதுகள் அறிமுகம்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், தூய்மைப் பணியாளர் பத்மா வெளியிட்டனர். ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு நடத்திய சமத்துவ இப்தார் நிகழ்ச்சியில் 13-ஆம் ஆண்டு சாதனைப் பெண்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளரும் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் தூதருமான ஏ.ஆர்.ரெஹானா, பிரபல தூய்மைப் பணியாளர் பத்மா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து இந்த ஆண்டிற்கான சாதனைப் பெண்கள் விருதினை அறிமுகம் செய்தனர். ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் விருதுகளைப் பெறும் சாதனைப் பெண்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார். ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் சமத்துவ இப்தார் விருந்து நிகழ்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இப்தார் விருந்து நிகழ்வு தி.நகரில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, வி.ஜி.பி. குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ரெயின்ட்ராப்ஸ் நிறுவன…
Read Moreஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேர்ந்த புதிய படம்!படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது!!
Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப்படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறது. Neo Castle Creations-இன் சத்யா கரிகாலன், Million Dollar Studios-ன் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ வெற்றியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக,…
Read Moreவிஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான விஷன் சினிமா ஹவுஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது. திட்டமிட்ட காலத்திற்குள் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது படம் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி, அதிர்ச்சி அருண் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர். ‘ஹைக்கூ’ திரைப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை ’ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்திருப்பது நுணுக்கமான உணர்வுகளும் யதார்த்தமும் நிறைந்த செழுமையான திரைக்கதையை ரசிகர்களுக்கு தரும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழு திருப்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக…
Read Moreதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா மனமார்ந்த நன்றி
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தனக்கு வாக்களித்தவர்களுக்கு நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையிலான அணியினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “நடந்து முடிந்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் எந்த அணியையும் சாராமல் துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக நான் போட்டியிட்டேன். என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்காமல் தயாரிப்பாளராகவும் அங்கீகரித்து 230 வாக்குகளுக்கு மேல் அளித்த சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நான் கடமைப் பட்டுள்ளேன். தயாரிப்பாளர்கள் சங்க வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களின் நலனுக்காகவும் என்றும் நான் துணை நிற்பேன். தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையிலான அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை…
Read Moreபிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!
தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ‘ஹனுமேன்’ திரைப்படத்தின் சீக்வலாக உருவாகும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படம் இன்று பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது. பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த கட்டமாக உருவாகும் இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க, டி- சீரிஸ் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. தேசிய விருது பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தில் கடவுள் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற திறமையாளர்கள் இந்தப் படத்தில் ஒன்றிணைவது, ‘ஜெய் ஹனுமான்’ படம் மீதான எதிர்பார்ப்பை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சமகால நிகழ்வுகளை புராணங்களுடன் இணைத்து துணிச்சலாகவும் புதுமையாகவும் கதை சொல்வதில் தேர்ந்தவர் இயக்குநர் பிரசாந்த் வர்மா. அதுபோலவே,…
Read Moreஏ படம் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தொல் திருமாவளவன்
மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் ஏ படம்.. இப்படம் விவசாய புரட்சியையும், கார்ப்பரேட்டின் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம்தான் இந்த ஏ படம் இப்படத்தில் ராஜகணபதி கதையின் நாயகனாக நடித்துள்ளார் கதாநாயகியாக மேகா ஸ்ரீ இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குனர் கேஷ்லெஸ் ஷிவாகோ, மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மற்றும் ஏற்காடு பகுதியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது… இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் ராஜ கணபதி கூறுகையில் நாங்கள் திரைப்படத்தை அழகாக எடுத்தோம் ஆனால் தணிக்கைச் சான்றிதழ் வாங்கும்போது தான் மிகவும் சிரமத்திற்கான சுமார் 45க்கும் மேற்பட்ட காட்சியில் வெட்டுகொடுத்தார்கள்.. இதனால் நாங்கள்…
Read Moreரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’
இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நாயகர்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே படத்தில் இணைகின்றனர். தற்காலிகமாக “KHxRK” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் சிறப்பான திரை அனுபவமாக அமையும். 1970களின் இறுதியில் கடைசியாக இணைந்து நடித்த இந்த இரு திரை ஜாம்பவான்கள், தற்போது மீண்டும் இணைவது இந்திய திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தலைமுறைகளை தாண்டி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு அபாரமான கலைப் பயணங்கள், இத்திரைப்படத்தின் மூலம் ஒன்றாக சங்கமிக்கின்றன. இந்த மாபெரும் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த வரலாற்றுச் சந்திப்பை சாத்தியமாக்கியதில் பெருமை கொள்கின்ற தயாரிப்பு நிறுவனம், இந்தப்…
Read Moreஎம்.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில், வெற்றி நடிக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!
எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், “தீர்ப்புகள் விற்கப்படும்” மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். “எட்டு தோட்டாக்கள்”, “ஜீவி” படங்களின் நாயகன் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஒரு இளைஞனுக்கும், நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு விசயம், எப்படி உலக அளவிலான வணிகமாக மாறியது என்பதை இதுவரை கண்டிராத புதுமையான கதைக்களத்தில் தயாராகி உள்ளது. அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் நாயகனாக வெற்றி நடிக்க, பிரியாலயா நாயகியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் எம். மூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.…
Read More