காயல் என்பது கடல் சார்ந்த இடம். கடலையும் ஒரு கதாபாத்திரமாக்கி ஒரு காதல் கதைக்கு வடிவம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் தமயந்தி. கடல் சார்ந்த ஆராய்ச்சியில் இருக்கும் நாயகன் லிங்கேஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவருக்கும் உயர்சாதி நாயகி காயத்ரிக்கும் காதல். காதலன் பெற்றோரை இழந்தவன் என்பதால் அவன் பக்கம் ரூட் கிளியர். ஆனால் காதலி தரப்பிலோ தந்தை சம்மதம் தர, தாய் மட்டும் பிடிவாதம் காட்டுகிறார். தாயை கன்வின்ஸ் பண்ண மகள் எவ்வளவோ முயன்றும் பலன் இல்லாமல் போக, வேறு வழியின்றி மகள் தற்கொலை முடிவை எடுத்து விடுகிறாள். இதன்பின்பு எதிர்ப்பு தெரிவித்த அந்தத் தாயின் நிலை என்ன? போலீஸ் உயர் அதிகாரியான தந்தையின் நிலை என்ன? அந்தக் காதலன், தனது காதலியின் மரணத்தை எப்படி எடுத்துக் கொண்டான் என்பதை உளவியல் ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும்…
Read MoreCategory: விமர்சனம்
பாம் – திரை விமர்சனம்
மலையோரத்தில் இயற்கையின் கொடையாய் காளக்கம்மாய்ப்பட்டி கிராமம். ஒரு காலத்தில் அங்கே மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். மலை யுச்சியில் மயில் அகவும் ஓசையும் அதைத்தொடர்ந்து வானில் தெரியும் ஜோதியும் அவர்கள் தெய்வ நம்பிக்கையாக இருந்தது. இந்த அடையாளங்களுக்கு பிறகு தான் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு திருவிழா நடத்துவார்கள். ஆனால் சோதனையாக இந்த அறிகுறிகள் ஒரு காலத்தில் வராமல் போகவே, தங்களின் யார் தெய்வ குற்றம் செய்திருப்பார்கள் என்று அவர்களுக்குள் இரு பிரிவாக பிரிந்து அடித்துக் கொள்கிறார்கள். இதற்கிடையே இயற்கைச் சீரழிவால் மலையில் இருந்து உருண்டு விழுந்த பெரிய கல் இரண்டாக உடைந்து கிடக்க… பெரிய கல்லை ஒரு கூட்டமும் சிறிய கல்லை இன்னொரு கூட்டமும் எடுத்துக் கொண்டு தெய்வமாக வழிபடத் தொடங்குகிறது.இதன் பிறகு காளக்கம்மாய்ப்பட்டி என்ற அந்த ஊர் காளப்பட்டியாகவும் கம்மாய்ப் பட்டியாகவும் இரண்டாக பிரிகிறது. ஒரு பிரிவினரிடம்…
Read More-அர்ஜுன் தாசின் மாறுபட்ட நடிப்பில் ,’பாம்’ -எப்படி இருக்கிறது?,
கைதி படத்தில் வில்லனாக அறிமுகமான அர்ஜுன் தாஸ் அது முதல் தமிழ் திரையலகின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார். தொடர்ந்து அநீதி உள்ளிட்ட படங்களில் நாயகன் ஆனாலும், கதை என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்ப தன்னை நடிப்பில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் இப்போது அவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் பாம் படத்தில் கிராமத்து நாயகனாக முற்றிலும் புதுவித நடிப்பை தந்து இருக்கிறார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப் புகழ் விஷால் வெங்கட் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். வேற்றுமையால் இரண்டாக பிரிந்த ஊரை ஒன்றாக்க விரும்பும் நண்பனுக்கு தோள் கொடுக்கிறார். எதிர்பாராத விதமாய் நண்பன் இறந்து போக, நண்பனின் பிணத்தை வைத்தே ஊரை ஒன்று சேர்க்கிறார். அது எப்படி என்பது சுவாரசிய கதைக்களம். கதையின் நாயகன் மணி முத்துவாக அர்ஜுன் தாஸ். கிராமத்து கதைக் கேற்ப மண் மணம்…
Read Moreபேட் கேர்ள் – திரை விமர்சனம்
பிளஸ்- 1 படிக்கும் பள்ளி மாணவி அஞ்சலிக்கு உடன்படிக்கும் சக மாணவன் மீது ஈர்ப்பு, கண்மூடித்தனமான காதல் என்றும் சொல்லலாம். ஒரு கட்டத்தில் இது பள்ளி மூலமாக பெற்றோருக்கு தெரிய வர, கண்டிக்கிறார்கள். மகளோ பெற்றோரின் கண்டிப்புக்கு அடங்குவதாக இல்லை. நிலைமை கைமீறிப் போவது தெரிந்தவுடன் வேறு பள்ளிக்கு மாற்றுகிறார்கள். இதனால் பெற்றோர் மீது கோபமடையும் அஞ்சலி, வேண்டுமென்றே அத்துமீறுகிறார். அதுவும் எப்படி? ”நீங்கள் சொல்வதை எல்லாம் இந்த பள்ளி வரை தான் கேட்பேன், அதன் பிறகு , என் இஷ்டப்படி தான் வாழ்வேன் ” என்கிறார். அவர் சொன்னது போலவே கல்லூரிக் காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்கிப் படிக்கிறார். அங்கே சீனியர் மாணவருடன் காதல், உறவு என்று போகிறார்.அதன் மூலம் இந்த சமூகத்தைப் பழிவாங்குவதாகவும் நினைக்கிறார். ஒருகட்டத்தில் இந்த வாழ்க்கை போலி. காதல்…
Read Moreகாந்தி கண்ணாடி – திரை விமர்சனம்
பணம் மட்டுமே வாழ்க்கையை மேம்படுத்தும் என நம்புபவன் கதிர். அதனாலேயே சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைத் தவற விடக் கூடாது என்பதில் கவனமாக, அதாவது கறாராக இருக்கிறான். காதல் திருமணம் புரிந்து ஊரை விட்டு வந்த காந்தி- கண்ணம்மா தம்பதிகளுக்கு இப்போது வயது அறுபதை தாண்டுகிறது. இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் கிடையாது. அதனால் தான் என்னவோ தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பில் பொங்கி வழிகிறார்கள். மனைவி தான் தனக்கு எல்லாமே என காந்தியும், கணவரே தன் உலகம் என வாழும் கண்ணம்மாவும் ஆதர்ச தம்பதிகளாக ஊராரின் கண்களுக்கு ஆச்சரியம் தருகிறார்கள். இவர்களில் கண்ணம்மாவுக்கு தங்கள் அறுபதாம் கல்யாணத்தை சிறப்புற நடத்தி பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதற்கு காந்தியும் உடன்படுகிறார். தன்னுடைய அறுபதாம் கல்யாணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தித் தரும்படி இவென்ட் மேனேஜ்மென்ட் செய்யும் கதிரிடம் கேட்கிறார். கதிரும் ரூ 52…
Read Moreமதராஸி – திரை விமர்சனம்
அமைதியே வடிவான தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரத்தை ஏற்படுத்தி அமைதியை குலை க்க திட்டமிடுகிறது, ஒரு தீவிரவாத கும்பல். அதற்காக துப்பாக்கிகளைப் புழக்கத்தில் விட்டு, அதை வணிகமாக்க அந்த சட்ட விரோதக் கும்பல் முயற்சி செய்கிறது. அதன் முதல் கட்டமாக துப்பாக்கிகளை கன்டெய்னர்களில் கடத்திக் கொண்டு ஆந்திர எல்லை கடந்து தமிழகத்தில் நுழைய முயல்கிறது. இதே நேரத்தில் சிறிய அளவில் தமிழகப் பகுதிகளில் துப்பாக்கிகளை ரகசியமாக புழக்கத்தில் விடுபவர்கள் மூலம் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்த கும்பலை பிடிப்பதற்கு காவல்துறை வியூகம் அமைக்கிறது.ஆனால் குற்றவாளிகளின் நெட்வொர்க் அந்த வியூகத்தை தவிடு பொடியாக்குகிறது. நாசக்கார கும்பலை கூண்டோடு பிடிக்க சிறப்பு காவல் படை தயாராகிறது. இப்போது நாயகன் அறிமுகம். நாயகன் சிவகார்த்திகேயன் உயரமான இடத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். தன் காதலி தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கூறிக்கொண்டு மேலிருந்து…
Read Moreலோகா அத்தியாயம் 1 சந்திரா – திரை விமர்சனம்
சூப்பர்மேன் டைப் திரைப்படங்கள் எப்போதாவது வந்து திரையை பரபரப்பாக்கும்.அப்படி ஒரு சூப்பர் மேன் கதை இது. சின்ன திருத்தம் சூப்பர் உமன் கதை. நாயகி சந்திராவின் சிறுவயது பாதிப்பு, அதன் மூலம் அவர் அதீத சக்தி படைத்த பெண்ணாக உருவெடுப்பது என தொடக்கம் முதலே வேகமெடுத்து விடுகிறது கதைக்களம். பெங்களூர் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தங்கி இருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருப்பவர் தான் நாயகன் நஸ்லென். அடுத்தடுத்த தொடர் சந்திப்புகள் கல்யாணி மீது நஸ்லெனுக்குள் காதலை கொண்டு வருகிறது. கல்யாணியோ நஸ்லெனின் காதலை ஏற்கவும் இல்லை. மறுக் க்கவுமில்லை. கண்டும் காணாதது போல் இருக்கிறார். இப்படி அவர் பின் தொடரும் ஒரு நாளில் ஒரு சட்ட விரோத கும்பலால் கல்யாணி கடத்தப்படுகிறார். நஸ்லென் அவரை காப்பாற்ற விரைகிறார். ஆனால்…
Read Moreகுற்றம் புதிது – திரை விமர்சனம்
உயர் போலீஸ் அதிகாரியின் மகள் அலுவலகம் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு கிளம்புகிறாள் ஆனால் அவள் வீடு வந்து சேரவில்லை. கடத்தப்பட்டாளா அல்லது கடத்திக் கொல்லப்பட்டாளா என்பதை கண்டுபிடிக்க காவல்துறை சீறிப் பாய்கிறது. அதேநேரம் ஒரு இளம்பெண் உள்பட மூன்று பேரை கொலை செய்ததாகச் சொல்லி உணவு டெலிவரி இளைஞன் ஒருவன் போலீசில் சரணடைகிறான். அதைப் பற்றி விசாரித்தால் அவன் கொலை செய்ததாகச் சொன்ன மூவரில் இருவர் உயிருடன் இருக்கிறார்கள்.அப்படியானால் அந்த இளைஞன் ஏன் பொய் சொல்ல வேண்டும்? அந்தப் பெண் உயிருடன் இருக்கிறாளா, இல்லையா? கேள்விக்கான விடையே குற்றம் புதிது. கதாநாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய், நடிப்புக்காக தன்னை முழுதாக தயார்படுத்தி இருக்கிறார். நீதிபதியையும் போலீஸ் அதிகாரியையும் அங்கிள் என்று சொல்லி கலகலப்பு ஏற்றுகிறார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்பாக நின்று கொண்டு அந்த வழியாக வரும்…
Read Moreசொட்ட சொட்ட நனையுது – திரை விமர்சனம்
காரைக்குடியைச் சேர்ந்த வசதி படைத்த ராஜாவிற்கு ஒரே பிரச்சனை, வழுக்கை. பணக்கார குடும்பம் என்று விரும்பும் பெண் வீட்டார் கூட மாப்பிள்ளையின் சொட்டைத்தலை பார்த்ததும் ரிவர்ஸ் அடித்து விடுகிறார்கள். இதனால் நாயகனின் திருமணம் கிட்டத்தட்ட கேள்விக்குறி நிலையில் இருக்க… ஒரு கட்டத்தில் பெண் பார்க்கப் போகும் படலத்துக்கே முற்றுப்புள்ளி வைக்கிறான். இந்நிலையில் திடீர் திருப்பமாக வெளியூரிலிருந்து பாட்டி வீட்டுக்கு வரும் பிரியா, நாயகனின் வழுக்கை பற்றி கவலைப்படாமல் ராஜாவை மணக்க சம்மதிக்கிறாள். இது போதாதா? ராஜாவின் பெற்றோர் தடபுடலாக திருமண தேதி குறிக்க, விடிந்தால் திருமணம். ஆனால் ராஜா முந்தின இரவு திருமணத்தை நிறுத்தி விடுகிறான். கல்யாணத்தை ராஜா ஏன் நிறுத்தினான்? அதன் பின் வேறு எந்த பெண்ணாவது அவனை மணமகனாக ஏற்றுக் கொண்டாளா என்பது கிளைமாக்ஸ். கோடீஸ்வர ராஜாவாக நிஷாந்த் ரூசோ அந்த மொட்டை கேரக்டரில்…
Read Moreகடுக்கா – திரை விமர்சனம்
கிராமங்களில் ‘கடுக்கா’ கொடுத்து விட்டான் என்ற சொலவடை பிரபலம். சிலர் நம்ப வைத்து ஏமாற்றுவார்கள். அப்போது ஏமாந்தவர் விரக்தியாக, :அட கடுக்கா குடுத்துட்டு போய்ட்டான்பா’ என்பார்கள். நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் என்ற பெயரில் உடலுக்கு நல்லது செய்கிற ஒரு மருந்தும் உண்டு. இந்த படம் ஏமாற்றுகிற கடுக்காயா? அல்லது உடலுக்கு நலம் சேர்க்கும் நாட்டு மருந்துகளில் ஒன்றா? வாருங்கள் பார்க்கலாம். படத்தின் நாயகன் வேலை வெட்டி எதற்கும் போகாமல் ஊர் சுற்றி திரிபவன். ஊரின் பிரதான பஸ் ஸ்டாப்பில் நின்றபடி பஸ்ஸில் பயணிக்கிற இளம் பெண்களை சைட் அடிக்கும் வேலையை செவ்வனே செய்வான். மீதமிருக்கும் நேரங்களில் கிராமச் சாவடிகளில் ஊர் பெரிசுகளோடு தாயக்கட்டை ஆடுவது உண்டு. இதனால் சொந்த ஊரிலேயே உதவாக்கரை என்று பெயர் எடுத்த நமது நாயகன் அது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ‘தானுண்டு…
Read More