சென்னையில் ஆண்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வருகிறார் தேவா ( ரஜினி). ஒரு நாள் விசாகப்பட்டினத்தில் இருக்கும் அவரது உயிர் நண்பன் ராஜசேகர் ( சத்யராஜ் ) இறந்து விட்டதாக செய்தி வருகிறது. துக்கம் விசாரிக்க விசாகப்பட்டினம் விரைகிறார். அங்கே சென்றபோது தான் சத்யராஜ் இயற்கையில் மரணமடையவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். விசாகப்பட்டினம் துறைமுகத்தை தன் ஆளுமைக்குள் வைத்துக்கொண்டு கடத்தல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் சைமன் கொலை பாதகத்துக்கு அஞ்சாதவன். தன் நிர்வாகத்தில் யார் தப்பு செய்தாலும் மரணம் நிச்சயம். அதற்கேற்ப ஆரம்பத்திலேயே கூலித் தொழிலாளி காளி வெங்கட்டை தூக்கில் தொங்க விடுகிறார்கள். ( போலீஸ் உளவாளியாம். அதனால் இந்த கொடூர தண்டனை) இந்த மாதிரி கொல்லப்பட்டவர்களின் பாடியை அங்கே…
Read MoreCategory: விமர்சனம்
நாளை நமதே – திரை விமர்சனம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்குள் அடங்கி ஒடுங்கி கிடக்கிறது ஒடுக்கப்பட்ட சமூகம். ஆதிக்க சாதி வைத்தது தான் அந்த ஊரின் எழுதப்படாத சட்டம். அவர்களில் ஒருவரே பஞ்சாயத்து தலைவராகவும் இருப்பார். இந்நிலையில் இந்த தொகுதியை தனித்தொகுதியாக அறிவிக்கிறது அரசு. அக்கிராமத்தைச் சார்ந்த ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்களைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட்டால் நடப்பதே வேறு என மிரட்டி விட்டுச் செல்கிறார்கள். ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகியும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருமான தாத்தாவை தேர்தலில் நிற்கும்படி மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் கேட்டுக் கொள்கிறார்கள். அவரும் அதை ஏற்று வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் வழியில் ஆதிக்க சாதியினரால் கொல்லப்படுகிறார். அவருடன் சென்ற வர்களும் உயிர் இழக்கிறார்கள். அதோடு ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவரையும் கொன்று எரித்து,…
Read Moreகாத்து வாக்குல ஒரு காதல் -திரை விமர்சனம்
காதல் படம். அதை வெட்டு குத்து கத்தி வகையறாக்களுடன் சொல்லி இருக்கிறார்கள். மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உருகி உருகி காதலிக்கிறார்கள். இந்நிலையில், நாயகன் மாஸ் ரவி திடீரென்று காணாமல் போய் விடுகிறார். அவரைத் தேடி அலைகிறார் நாயகி. மாஸ் ரவியை மீண்டும் லட்சுமி பிரியா பார்க்கும்போது அவர் ஒரு மாஸ் ரவுடியாக இருக்கிறார். காதலியைத் தெரியாதவர் போல் கடந்து போகிறார். நாயகனின் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணி என்ன? நாயகியின் காதல் என்னவானது? கேள்விகளுக்கான விடை, எதிர்பாராத கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி, உருகி வழியும் காதலன், அடிதடிக்கு அஞ்சாத காதகன் என இரண்டு மாறுபட்ட நிலைகளிலும் நடிப்பில் தனித்தனி கொடியேற்றி இருக்கிறார். படத்தை இயக்கியவரும் இவர் தான். இயக்கத்தில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. ஆனால் நடிப்பில் தேர்ந்த அனுபவம் தெரிகிறது.…
Read Moreமீஷா – திரை விமர்சனம்
சாதிய பாகுபாடு மூலம் மக்களை பிளவுபடுத்தி அரசியல் கட்சிகள் எப்படி ஆதாயம் தேடிக் கொள்கிறது என்பதை இரண்டு நண்பர்களை மையமாக கொண்டு சொல்லி இருக்கிறார்கள். வெவ்வேறு சாதியை சேர்ந்த கதிர் மற்றும் ஹக்கிம் ஷா பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். கல்லூரி பருவத்தில் அரசியல் கட்சி ஒன்றில் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த கட்சியோ மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளை தடுத்து, அதன் மூலம் ஆதாயம் தேடுவதை அறிந்து கொள்ளும் கதிர், கட்சியை எதிர்த்து மக்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். இது கட்சிக்கு பொறுக்குமா? கதிரை வீழ்த்த கட்சி விரிக்கும் சதி வலையில், அவனது இரண்டு நண்பர்கள் சிக்கிக்கொள்ள, அதன் மூலம் நண்பர்கள் வாழ்க்கை என்னவானது? கதிர் என்னவாகிறான்? என்பதை இதயம் தடதடக்கும் வகையில் சொல்லி இருக்கிறார்கள். கதிருக்கு மலையாள சினிமாவில் இது…
Read Moreசென்னை பைல்ஸ் முதல் பக்கம் – திரை விமர்சனம்
நகரத்தில் ஒரே ஸ்டைலில் நடக்கும் தொடர் கொலைகள் பொதுமக்களை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது. இந்த கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவுக்கு வந்து சேர்கிறது. இது விஷயத்தில் அவருக்கு துப்பறிய உதவுகிறார் வெற்றி. இவர் யாரென்றால் காலஞ்சென்ற பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ஒருவரின் மகன். இவரது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை பிரசுரிக்க விரும்பிய ஒரு பத்திரிகை, இவரை சென்னையில் உள்ள தனது பத்திரிகை அலுவலகத்திற்கு அழைக்க… வந்த வேலை முடிந்து கிளம்பும்போது, இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த தொடர் கொலை விஷயத்தில் தம்பி ராமையாவுக்கு வெற்றி சில ஆலோசனைகளை சொல்லப் போக… அத்தனையும் சரியாக இருப்ப தோடு கொலைகாரனை நெருங்கவும் உதவுகிறது. கொலையாளியை கண்டு பிடித்தார்களா? தொடர் கொலைகளுக்கான நோக்கம் என்ன? என்பது மீதிக் கதை. நாயகனாக…
Read Moreஅக்யூஸ்ட் – திரை விமர்சனம்
சென்னை புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்கு கொலை வழக்கில் கைதான கணக்கு (உதயா) என்கிற கைதியை போலீஸ் வேனில் அழைத்துப் போகிறார்கள். அவனை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போலீசாரில் வேந்தனும் ஒருவன். இந்த பயணத்தில் கணக்கை கொல்ல ஒரு ரவுடி கூட்டம் துரத்துகிறது. இன்னொரு பக்கம் உயர் போலீஸ் அதிகாரி தரப்பிலும் சேலம் போவதற்குள் கணக்கின் கணக்கை முடிக்க உத்தரவிடுகிறார். இருதரப்பு கொலை முயற்சியில் இருந்தும் கணக்கு தப்பினானா…யார் இந்த கணக்கு? என்ற கேள்விக்கு பரபரப்பும் விறுவிறுப்பும் இணைந்த திரைக்கதை பதில் தருகிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட விசாரணைக் கைதியின் கடந்த காலத்தை, அவ்வப்போது பிளாஷ்பேக் மூலம் சொல்லும் திரைக்கதை உத்தியே அடுத்தடுத்த காட்சிகளை சுவாரசியமாக்கி விடுகிறது. கணக்கு என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் உதயா, கலகலப்பும் துறுதுறுப்புமாக படம் முழுக்க வருகிறார். காதல் காட்சிகளில் ஒரு வெள்ளந்தியான…
Read Moreபோகி – திரை விமர்சனம்
போகி பண்டிகையின் போது தேவையில்லாத வற்றை கொளுத்துவார்கள். இந்த போகி எதை கொளுத்துகிறது என்று பார்க்கலாமா… இந்தியாவை உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மறைத்து வைக்கப்படும் கேமராவின் மூலமாக பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து ஆபாச தளங்களில் வெளியிட்டு கோடிகளில் சம்பாதிக்கிறது மலேஷியாவை சேர்ந்த ஒரு கூட்டம். இன்னும் சிலர் மர்மான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்த இரண்டு வழக்குகளையும் தீவிரமாகக் கண்காணிக்கிறது காவல்துறை. இந்தப் பிரச்சனையில் நாயகன் நபி நந்தி எப்படி உள்ளே வருகிறார் என்பது சுவாரசியத்துக்கு குறைவில்லாத திரைக் களம். படத்தின் நாயகி லப்பர் பந்து ஸ்வாசிகா இரண்டாம் பாதியில் தான் வருகிறார். ப்ளஸ்-2 வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றவர் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் அக்கிரமத்தை தட்டிக் கேட்கும் வரை ‘நாங்கல்லாம் அப்பவே இப்படித்தான்’ என்று சொல்லும்…
Read Moreசரண்டர் – திரை விமர்சனம்
தேர்தல் போன்ற முக்கியமான காலகட்டங்களில் துப்பாக்கி வைத்திருப்போர் தங்கள் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் சரண்டர் செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் ஒரு காவல் நிலையத்தில் தனது துப்பாக்கியை சரண்டர் செய்கிறார். அந்த துப்பாக்கி காணாமல் போகிறது. தேர்தல் முடிந்ததும் அந்த துப்பாக்கியை மன்சூர் அலிகானிடம் ஒப்படைக்க வேண்டும். அதனால் அதற்குப் பொறுப்பாக இருந்த தலைமைக் காவலர் லால் சிக்கலில் மாட்டுகிறார். அதேநேரம், தேர்தல் பட்டு வாடாவிற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அரசியல்வாதியின் பத்து கோடி ரூபாய் காணாமல் போகிறது. அதிலும் காவல்துறை சம்பந்தப்பட்டிருக்கிறது. துப்பாக்கியைத் தொலைத்த லால் நிலை என்ன? தொலைந்த 10 கோடி ரூபாய் பணத்தின் நிலை என்ன? இரண்டு கேள்விகளுக்கும் பரபரப்பான திரைக்கதை விடை தருகிறது. நாயகனாக பயிற்சி உதவி ஆய்வாளர் வேடத்தில்…
Read Moreஉசுரே – திரை விமர்சனம்
உசுரே -திரை விமர்சனம் காதலை புதிய கோணத்தில் சொல்லி இருக்கும் படம். எதிர் வீட்டில் புதிதாக குடி வரும் ஜனனி மீது காதலாகிறார் டிஜே அருணாசலம். ஜனனியோ இந்த காதலை கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் டிஜேவின் இந்த ஒரு தலைக் காதல் ஜனனி அம்மாவிடமிருந்து செருப்படியும் வாங்கித் தருகிறது. உண்மைக் காதலுக்கு செருப்படி கூட வெகுமானம் தான் என்று எண்ணும் வரிசையில் நமது காதலனும் இருக்க… தொடர்ந்து தனது காதல் முயற்சியை தொடர்கிறார். ஒரு கட்டத்தில் நாயகனின் இந்த விடாப்பிடியான காதலுக்கு ஓகே சொல்கிறார் ஜனனி. ஆனால் நாயகனை சந்திக்கும் போது , நான் சிறுவயதாக இருக்கும் போது அப்பா எங்களை விட்டு போய்விட்டார். அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தார். அம்மாவுக்கு பணம் தான் எல்லாமே.ஒரு பத்து லட்ச ரூபாய் ரெடி பண்ணி அம்மா…
Read Moreஹவுஸ் மேட்ஸ் – திரை விமர்சனம்
இது ஆவி கதை இல்லை. ஆவி கதை மாதிரியான அறிவியல் கதை. தர்ஷன் – அர்ஷா பைஜூ காதல் தம்பதிகள்.அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறார்கள். அதே வீட்டில், காளி வெங்கட் அவரது மனைவி வினோதினி மற்றும் அவர்களது மகன் ஏற்கனவே வாழ்ந்து வருகிறார்கள். தன்னாலே திறக்கும் கதவு, தாமாக மூடும் பீரோ, சுவிட்ச் போடாமலே இயங்கும் டிவி என ஒரு ஆவி செய்யும் அத்தனை சேட்டைகளும் அந்த வீட்டில் நடந்தேற, நடு நடுங்கி போகிறார்கள் காதல் தம்பதிகள். அதே நேரம் ஒரு குடும்பம் வாழ்வது மற்றொரு குடும்பத்திற்கு தெரியாது. இதனால், இரு தரப்பினரும் இது அமானுஷ்ய வேலை என்று நினைக்க, பிறகு இது அமானுஷ்யம் இல்லை..அறிவியல், என்பதை புரிந்து கொள்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம், காளி வெங்கட் தம்பதிகள் 2012 ஆம் ஆண்டிலும் தர்ஷன் தம்பதிகள்…
Read More