மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் இயக்குநர் பாபி கொல்லி, முன்னணி தயாரிப்பு நிறுவனம் KVN Productions  இணையும் – #ChiruBobby2 படம் மெகா கான்செப்ட் போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டது!!

பிளாக்பஸ்டர் கூட்டணியான மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் வெற்றி இயக்குநர் பாபி கொல்லியின் கூட்டணி மீது மிகப்பெரிய  எதிர்பார்ப்பு நிலவுகிறது. மெகாஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு,  இருவரும் இணையும் இந்த மெகா-ப்ராஜெக்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  ‘வால்டர் வீரய்யா’ படத்தில் விண்டேஜ் மெகாஸ்டார் அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்து இந்தக்  கூட்டணி வசூல் சாதனை படைத்தது.  இந்த புதிய திரைப்படத்தினை KVN Productions தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. மெகாஸ்டாரை ஒரு  மாஸான கதாப்பாத்திரத்தில் காட்டும் திறன் கொண்ட இயக்குநரான பாபி, இந்த புதிய படத்துக்கு “The blade that set the bloody benchmark” என்ற டேக்லைன் உடன் ஒரு வலுவான கான்செப்ட் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.  ஒரு சுவரை கோடாரி பிளக்கும் இந்த அறிவிப்பு போஸ்டர்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகர் சிரஞ்சீவியை முன்னெப்போதும்  இல்லாத ஒரு புதுமையான கதாப்பாத்திரத்தில் காட்டவுள்ளதாக இயக்குநர்  பாபி உறுதியளித்துள்ளார். போஸ்டர் மற்றும் டேக்லைன்…

Read More

பிஸ்கான்’25 – சிடிஎம்ஏ தொடக்க விழா தொழில்முனைவோருக்கு புதிய உந்துதல், புதுமை மற்றும் நவீன சிந்தனைகள்

சென்னை, ஆகஸ்ட் 21, 2025 – திரு. வி.சி. பிரவீன் தலைமையில் கான்ஃபெடரேஷன் ஆஃப் மலையாளம் அசோசியேஷன்ஸ் (CTMA) அமைப்பு, பிஸ்கான்’25 எனும் தொழில்முனைவு மாநாட்டை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள Hyatt ரீஜென்ஸி ஹோட்டலில் வெற்றிகரமாக தொடங்கினார்கள். தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்களை ஒருங்கிணைக்கும் தனித்துவமான தளமாக இந்த மாநாடு அமைந்தது. விழா என்எல்சி இந்தியா லிமிடெட் தலைவர் திரு. பிரசன்னா குமார் மோடுபள்ளி மற்றும் ஏ.வி. அனூப் (அவா குழுமத்தின் தலைவர்) ஆகியோரின் கைத்தூவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்கள். அவர்களின் பங்கேற்பு, மற்றும் சிந்தனைகள் தொழில்முனைவு மேம்பாடு, வணிக முன்னேற்றம் மற்றும் புதுமையான யோசனைகளுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும் விதமாக அமைந்தது. பிஸ்கான்’25 மாநாட்டில் முன்னணி தொழில்முனைவோர்கள் மற்றும் தலைசிறந்த நிபுணர்கள் பங்கேற்றனர். அவர்களில் naturals சி.கே. குமாரவேல், byjus அர்ஜுன்…

Read More

‘மார்கோ’வின் வெற்றிக்குப் பின், Cubes Entertainment புதிய பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான ‘கட்டாளன்’  படத்தை கோலாகலமாகத்  தொடங்கியது !!

“மார்கோ” எனும் ஆக்சன், த்ரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது,  தனது Cubes Entertainment தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மிக பிரம்மாண்டமான  அதிரடி ஆக்சன் படமான  “கட்டாளன்”  படத்தினை தயாரிக்கிறார்.  இப்படம் இன்று கொச்சியில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்ட பூஜையுடன், கோலாகலமாக துவங்கியது. இவ்விழாவின் முக்கிய சிறப்பாக, ‘பாகுபலி’ படத்தில் நடித்துப் புகழ்பெற்ற சிறக்கல் காளிதாசன் யானை கலந்து கொண்டது. அதோடு, ஆடம்பர கார்களும், மோட்டார் பைக்குகளும் விழாவுக்கு அழகை கூட்டின. மேலும், படத்தின் கதைக்களத்தை பிரதிபலிக்கும் விதமாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட அரங்கில், பூஜை கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்த மாபெரும் விழாவில், படத்தின் முன்னணி நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்றனர். அந்தோணி வர்கீஸ், கபீர் துகான் சிங்,…

Read More

இந்திரா – திரை விமர்சனம்

  குடித்து விட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக போலீஸ் அதிகாரி இந்திரகுமார் பணியிடை நீக்கம் செய்யப்படு கிறார்.அதனால் மன அழுத்தம் அதிகமாகி மேலும் குடிக்கிறார். இதனால் காதல் மனைவி கயலின் வெறுப்புக்கும் ஆளாகிறார். ஒரு கட்டத்தில் குடியே அவரது கண் பார்வை போகவும் காரணம் ஆகிறது. இதன் பிறகு மனைவியிடம் மன மாற்றம். கண்ணாக இருந்து கணவனை தாங்குகிறார். இந்த நிலையில் மனைவி கயல் ஒரு நாள் பூட்டிய வீட்டுக்குள்ளேயே கொலை செய்யப்படுகிறார். வேலை போய் கண் பார்வையும் போய் தனது காதல் மனைவியும் கொலை செய்யப்பட்ட நிலையில், தாங்க முடியாத மன அழுத்தத்தில் தவிக்கிறார் இந்திரகுமார். தன் மனைவியைக் கொன்றவனை கண்டுபிடித்து பழி வாங்கத் துடிக்கிறார். பூட்டிய வீட்டுக்குள் இந்திர குமாரின் மனைவி கொலை என்றதும் போலீசின் சந்தேகப் பார்வை இந்திரகுமார் மீது திரும்புகிறது.…

Read More

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் – தெஸ்பியன் பிலிம்ஸ் இணையும் ஹைவான் படப்பிடிப்பு தொடக்கம்!!

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹைவான் என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் தொடர்பான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஹைவான் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹைவான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் தங்களது சமூக வலைத்தள பதிவுகளில் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளனர்.…

Read More

பன் பட்டர் ஜாம்’ தயாரிப்பாளரின் புதிய த்ரில்லர் படம்

கடந்த ஜூலை மாதம் ரொமான்டிக் காமெடி படமாக வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் இன்று தெலுங்கில் அந்தப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.. பிக்பாஸ் புகழ் ராஜூ ஜெயமோகன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியிருந்தார். ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக இந்த படத்தை சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த ‘எண்ணித் துணிக’ என்கிற படத்தை தயாரித்தவர். திருச்சியில் பிறந்து தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் சுரேஷ் சுப்பிரமணியன் ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கி அங்கேயும் படங்களை தயாரித்து வருகிறார். ‘பன் பட்டர் ஜாம்’ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தான் தயாரிக்க இருக்கும் படங்கள் குறித்த தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து…

Read More

நடிகர் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!

பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது. முடிவில்லாத கடல், அமைதி, தொலைவு, சொல்லப்படாத காதல் எனப் பல விஷயங்கள் இதில் இருக்கிறது. இவற்றை எல்லாம் பேசும் கடலோர காதல் கதை ’18 மைல்ஸ்’ என்கிறது குழு. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான இந்த உணர்வு உங்கள் மனங்களை ஊடுருவி ஆன்மாவைத் தொடும். சித்து குமார் இசையமைப்பில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார். கே எழில் அரசுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக விரியும். நாஷின் படத்தொகுப்பும் எம். தேவேந்திரனின் கலை வடிவமைப்பும் நம் உணர்வுகளை தாலாட்டும். இவற்றை எல்லாம் தாண்டி நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னாவுக்கு இடையிலான காதல் காலம் தாண்டியது. அவர்களின் பார்வையும் மெளனமும் கவிதையாக பார்க்கலாம். இசையின்…

Read More

JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு;

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களை விட மூன்று நாட்கள் முன்பாகவே, கோடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இயக்குநர் எஸ்.கே.ஜீவா கூறியதாவது, “கோடைக்கானலில் ஏற்பட்ட சவாலான காலநிலையையும் மீறி, திட்டத்திற்கு முன்னதாகவே முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். இது எங்கள் குழுவின் ஒருங்கிணைந்த உழைப்பாலும், தயாரிப்பு அணியின் தளராத ஒத்துழைப்பாலும் சாத்தியமாகியது. தயாரிப்பாளரும், கதாநாயகனுமான JSK சதீஷ்குமார் அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்திருந்தார், ஒரு காட்சியில் எந்தவித உதவியுமின்றி இயல்பாகக் கண்ணீர் விட்டபோது, அங்கே இருந்த முழுக் குழுவினரிடமிருந்தும் கைத்தட்டல்களைப் பெற்றார். இப்படியான தருணங்களே, திரைப்படக் கலையை உயர்த்தும் உண்மையான சான்றுகள். நடிகர், நடிகைகள் அனைவரின் பாராட்டத்தக்க நடிப்பிற்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன். அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் மேலும்…

Read More

JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களை விட மூன்று நாட்கள் முன்பாகவே, கோடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இயக்குநர் எஸ்.கே.ஜீவா கூறியதாவது, “கோடைக்கானலில் ஏற்பட்ட சவாலான காலநிலையையும் மீறி, திட்டத்திற்கு முன்னதாகவே முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். இது எங்கள் குழுவின் ஒருங்கிணைந்த உழைப்பாலும், தயாரிப்பு அணியின் தளராத ஒத்துழைப்பாலும் சாத்தியமாகியது. தயாரிப்பாளரும், கதாநாயகனுமான JSK சதீஷ்குமார் அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்திருந்தார், ஒரு காட்சியில் எந்தவித உதவியுமின்றி இயல்பாகக் கண்ணீர் விட்டபோது, அங்கே இருந்த முழுக் குழுவினரிடமிருந்தும் கைத்தட்டல்களைப் பெற்றார். இப்படியான தருணங்களே, திரைப்படக் கலையை உயர்த்தும் உண்மையான சான்றுகள். நடிகர், நடிகைகள் அனைவரின் பாராட்டத்தக்க நடிப்பிற்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன். அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் மேலும்…

Read More

நடிகர் ‘பருத்திவீரன்’ சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபிரவேச வாய்ப்பாக அமைந்த ‘பருத்திவீரன்’ படத்திற்குப் பிறகு  அந்தப் பாத்திரத்தின் வெற்றியால் பெயரே ‘பருத்திவீரன்’ சரவணன் என்றானது. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார்; நடித்தும் வருகிறார். எதிர்மறை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வரும் அவர்,  தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு பயணித்து வருகிறார். அண்மையில் வெளியான ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர் சரவணன் வாழ்க்கையில் அமைந்த ஒரு மைல் கல் எனலாம். அந்த அளவுக்குத் தனது பண்பட்ட நடிப்பை  அதில் வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் சரவணன் ஒரு விநாயகர் கோவிலை சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கட்டி இருக்கிறார் . தனது தோட்டத்தில் எழுந்து அருள்பாலிக்கும் விநாயகராக அதை வணங்கி வந்தவர், தற்போது அதற்காக ஓர் ஆலயம்…

Read More