புதுமையான கதை சொல்லல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் இந்திய திரைப்படத் துறையில், தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன். இவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தனார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லரில் கண்கவர் காட்சிகள், மனதை மயக்கும் இசை, தெளிவான ஒலி வடிவமைப்பு மற்றும் முன்னணி நடிகர்களின் திறமையான நடிப்பு என பழங்கால பின்னணியில், புதிய ஃபேன்டஸி உலகை இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘ஹோம்’ திரைப்படத்தின் மூலம் பலரது பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் ரோஜின் தாமஸ் இந்த படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.…
Read MoreDay: March 31, 2026
‘லாக் டவுன்’ படத்திற்கு பிறகு நிறைய புதிய படங்களில் நடித்து வருகிறார் விநாயகராஜ்!
‘லாக் டவுன்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படக்குழுவினர்கள் பாராட்டு மட்டுமல்ல ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார் விநாயகராஜ். திருப்பதி, ஆஞ்சநேயா, சிகரம் தொடு, புலி வருது, மாமனிதன், திருவின் குரல், பீட்சா 3′, லைன்மேன் ஆகிய படங்கள் ஒவ்வொன்றிலும், தனது தனித்திறமையை காட்டிய விநாயகராஜ், சமீபத்தில் வெளியான லாக் டவுன் படத்திலும் தனது நடிப்பு திறமையால் தனித்து தெரிந்தார். இதனை தொடர்ந்து, சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘உயிரிலே கலந்தது’ படத்தின் இயக்குனர் கே.ஆர்.ஜெயா இயக்கத்தில் புதிய படமொன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் முழு விபரங்கள் வெளியிடப்பட உள்ளது. நடிகர் விநாயகராஜை, இனி கதையின் நாயகனாக பல படங்களில் பார்க்கலாம்!
Read More
