கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன்.. இவர் தமிழில் ஓரிரு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் கன்னட திரை உலகில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளவர்.. இவர் தற்போது, உண்மை சம்பவமான லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் படத்தை இயக்கியுள்ளார்.. இந்த வழக்கு 1950 களில் தமிழ் சினிமா மற்றும் அரசியல் உலகை பரபரப்பாகிய கொலை வழக்காகும்.. இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.. எம்.வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.. இப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில்…
Read More