தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா – நடிகர் கவின் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் படக்குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள.. கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் – செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நயன்தாரா- விக்னேஷ்…
Read MoreDay: July 20, 2026
‘செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
சென்னை, ஜூலை 2026: ஜியோஹாட்ஸ்டார் தமிழின் ரியாலிட்டி காதல் நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’, முதல் வார வெளியீட்டுக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, பார்வையாளர்களுக்காக புதிய வெளியீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும், அந்த வாரத்திற்கான அனைத்து 7 எபிசோடுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும். இதன் மூலம், காதல், உணர்வுகள், உறவுகள் மற்றும் வில்லா வாழ்க்கையில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களை ரசிகர்கள் தங்களது வசதிக்கேற்ப தொடர்ச்சியாக கண்டு ரசிக்கலாம். மனதைத் தொடும் கதை சொல்லல், இயல்பான உணர்வுகள் என ‘செகண்ட் லவ்’ கான்செப்ட் முதல் வாரத்திலேயே ரசிகர்களை ஈர்த்துள்ளது. மனம் திறந்த உரையாடல்கள், எதிர்பாராத காதல் தொடக்கங்கள், மற்றும் மனதை உருக்கும் தருணங்கள் என காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலைத் தேடும் பயணத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி இந்த நிகழ்ச்சி தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது.…
Read Moreஇசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’
சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தட்டுவண்டி’. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், திலீபன், மேரி பென்சி குளோரியா மற்றும் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இப்படத்தை, 2021-ஆம் ஆண்டு இரண்டு மாநில அரசின் விருதுகளை வென்ற ‘பில்டர் கோல்டு’ திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். தனது முந்தைய படைப்பின் வெற்றியைத் தொடர்ந்து, வித்தியாசமான கதைக்களத்துடன் ‘தட்டுவண்டி’ திரைப்படத்தை ரசிகர்களுக்காக உருவாக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் ‘தட்டுவண்டி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையும், திறமையான கலைஞர்களின் பங்களிப்பும்…
Read Moreநடிகர், இயக்குநர் இராதகிருஷ்ணன் பார்த்திபன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற P.U.சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா – திரைப்பிரபலங்கள் நேரில் பங்கேற்று வாழ்த்து !!
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில், வாசுதேவன் நாதாலயா நிறுவனர் மற்றும் இயக்குநர் குரு துளசி அவர்களின் மாணவியான P.U.சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது. J. பிரபாகர் – உதயசந்திரிகா தம்பதியரின் மகளான P.U.சுப்ரஜா, கடந்த 15 ஆண்டுகளாக குரு துளசியிடம் பரதநாட்டியம் பயின்று, தனது நீண்டகால கலைப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக அரங்கேற்ற நிகழ்வை சிறப்பாக நிறைவு செய்தார். இந்நிகழ்விற்கு தேசிய விருது மற்றும் கலைமாமணி விருது பெற்ற நடிகர், இயக்குநர் இராதகிருஷ்ணன் பார்த்திபன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், பரதநாட்டிய உலகின் முன்னணி கலைஞரும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான சாந்தா தனஞ்செயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுப்ரஜாவிற்கு ஆசி வழங்கினார். இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், தயாரிப்பாளர்கள் ஆபவாணன், காஜா…
Read Moreபிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான ‘OKUU’-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது தொழில்முனைவோராக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், இறுதி 11 மாதங்களில் மட்டும் 551 முறை தயாரிப்பு கலவையில் மாற்றங்களைச் செய்து, தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தயாரிப்பை உருவாக்கியுள்ளார். பொதுவாக பிரபலங்கள் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளுக்கு விளம்பரத் தூதர்களாக செயல்படும் நிலையில், சாக்ஷி அகர்வால் தனது பெயரை ஒரு தயாரிப்புடன் இணைப்பதை விட, தரமான ஊட்டச்சத்து தயாரிப்பைத் தானே உருவாக்க முடிவு…
Read Moreஜியோஸ்டார் இந்த பண்டிகைக் காலத்தை மேலும் பிரம்மாண்டமாக்குகிறது; இந்தியா முழுவதும் ஆறு பிக்பாஸ் பதிப்புகளை ஒன்றிணைக்கிறது மற்றும் ‘India’s Bigg Reality’ காபி டேபிள் புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது
ஜியோஸ்டார், *ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காளம்* ஆகிய மொழிகளில் *பிக்பாஸ்* நிகழ்ச்சியின் ஆறு புதிய பதிப்புகளை செப்டம்பர் 2026 முதல் அறிமுகப்படுத்த உள்ளது. இது இந்தியாவின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் மிகப் பெரிய கொண்டாட்டமாக அமையும். *சல்மான் கான், விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, கிச்சா சுதீப், மோகன்லால் மற்றும் சௌரவ் கங்குலி* ஆகியோரின் நட்சத்திர வரிசையுடன், இந்த சீசன் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய நிகழ்வாக அமையும். இந்த முக்கிய தருணத்தை நினைவுகூரும் வகையில், ஜியோஸ்டார் *‘India’s Bigg Reality’* என்ற, முதல் முறையாக வெளியிடப்படும் காபி டேபிள் புத்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புத்தகம், *பிக்பாஸ்* நிகழ்ச்சியின் கலாச்சார தாக்கம், பார்வையாளர்களின் ஈடுபாடு மற்றும் வணிக வெற்றிப் பயணத்தை பதிவு செய்கிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும்…
Read Moreஅருள்வான் – விமர்சனம் 4.5/5…
கதை… காடர் மொழி பேசும் தம்பதி ஆரவ் – ரம்யா பாண்டியன்.. இவர்களது ஒரே மகள் குறிஞ்சி (கிருத்திகா).. இவர்களுக்கு படிக்கத் தெரியாது என்பதால் இவர்கள் வசிக்கும் பகுதியை வன அதிகாரி ஜான் விஜய் ஒரு பொய்யை சொல்லி நிலங்களை பெற்று விடுகிறார்.. இதனால் படிப்பின் அவசியத்தை உணரும் சிறுமி குறிஞ்சி கலெக்டரை சந்தித்தால் தான் இங்கு பள்ளிக்கூடம் வரும்.. மக்களுக்கு படிப்பறிவு கிடைக்கும் என்பதால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்.. ஆனால் குறிஞ்சியின் முயற்சியை புரிந்து கொள்ளாத பெற்றோர் அவள் வயதுக்கு வந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர்.. பெற்றோரின் தந்திரத்தைப் புரிந்து கொண்ட குறிஞ்சி யாருக்கும் தெரியாமல் இரவில் மாவட்ட கலெக்டரை (அருள்நிதி) சந்திக்க நகரத்திற்கு செல்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.? அவளால் கலெக்டர் சந்திக்க முடிந்ததா.? குறிஞ்சியால் தன் இன…
Read More
