அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி அத்தியாயம், ’த்ரிஷ்யம்2’ திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடர்கிறது. ஆனால், புதிய கதைக்களம் மற்றும் முற்றிலும் புதிய திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. உண்மை புதைந்தே கிடக்கிறது. சல்காவோங்கர் குடும்பம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. விஜய் சல்காவோங்கர் எப்போதும் ஒருபடி முன்னிலையில் இருந்துள்ளார். ஆனால், இந்த முறை அவரை நோக்கி அரசு மீண்டும் மிகுந்த பலத்துடன் வருகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் ’த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் அடுத்த பாகங்கள் இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் மற்றும் கொண்டாடப்படும் குடும்பத் த்ரில்லராக உள்ளது. விஜய் சல்காவோங்கரின் உலகம் பார்வையாளர்களை கவர்ந்ததுடன், பல விவாதங்களையும் உருவாக்கியது. ஒவ்வொரு கட்டத்திலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக இருந்தனர். இந்நிலையில், இறுதி அத்தியாயத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ’த்ரிஷ்யம்…
Read More
