MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வில் பேசியவர்கள் தயாரிப்பாளர் மகேஷ்: எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். ஆகாஷ் மற்றும்…
Read MoreAuthor: reporter
இசையமைப்பாளர் போபோ சசியின் ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ (Before I Fade Away) இசை ஆல்பம் வெளியீடு
Music Video▶️ https://youtu.be/gtiwb1PGOhQ?si=7B7uZBGxBH8sIRLK இசையமைப்பாளர் போபோ சசி, இயக்குநர் யூகி பிரவீன், பாடகி அக்ஷிதா சுரேஷ், இனாரா புரொடக்ஷன்ஸ் கூட்டணியில் உருவான ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ (Before I Fade Away) சுயாதீன இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இசையமைப்பாளர் முரளி இசை ஆல்பத்தை வெளியிட, இசையமைப்பாளர் சி. சத்யா மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இணைந்து பெற்றுக் கொண்டனர். திரையிசை பாடல்களுக்கு நிகரான வரவேற்பை தற்போது சுயாதீன இசைக்கலைஞர்கள் உருவாக்கும் இசை ஆல்பங்களுக்கும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் திரைப்பட இசையமைப்பாளரும், பிரபல இசைக்கலைஞருமான போபோ சசியின் இசையில் ‘Before I Fade Away’ இசை ஆல்பம் தயாராகி இருக்கிறது. இந்த இசை ஆல்பத்தை யூகி பிரவீண் இயக்க, அரவிந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இனாரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்…
Read More‘போலீஸ் போலீஸ்’ வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் ‘போலீஸ் போலீஸ்’ வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்ற இதன் முதல் புரோமோவில் மிர்ச்சி செந்தில் (ராஜா) மற்றும் ஜெயசீலன் தங்கவேல் (முரளி) இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது இடம் பெற்றிருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் ஷபானா ஷாஜகான் நேர்மையான வழக்கறிஞர் லலிதாம்பிகா கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். கலகலப்பான இந்த புரோமோவில் லலிதாம்பிகா முரளியை திருடன் என நினைத்து விடுகிறார். முரளி பணி செய்யும் காவல் நிலையத்திற்கே அவரை அழைத்து செல்கிறார் லலிதாம்பிகா. அவர் வருத்தப்பட வேண்டும் என்பதற்கே போலியான காயத்தை தனக்கு உருவாக்கி லலிதாவை டீஸ் செய்கிறார் முரளி. இவரோடு செந்திலும் சேர்ந்து கொள்ள இந்தத் தொடர் ஆக்ஷன்,…
Read Moreடாக்டர் பிரசித்தா NR மற்றும் திரு. பாலாஜி திருமணம்
சென்னை, ஆகஸ்ட் 29, 2025: ‘முதல் மரியாதை’ புகழ் நடிகர் தீபன் (எ) ராமச்சந்திரன் அவர்களின் மகளும், மறைந்த டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் பேத்தியுமான டாக்டர் பிரசித்தா NR அவர்களின் திருமணம், இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில், பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடைபெற்றது. கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கும் டாக்டர் பிரசித்தா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அங்கு அவர் 2014–2015-ஆம் ஆண்டில் ‘சிறந்த மாணவி’ விருதைப் பெற்றார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே கௌரவம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த அவர், தற்போது டெக்சாஸில் முதுகலை மருத்துவக்…
Read Moreரசிகை ராஜேஸ்வரியின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி !!
பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது கருணை மற்றும் அன்பால் நிரூபித்துள்ளார். சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்த அவரின் தீவிர ரசிகை ராஜேஸ்வரிக்காக சிரஞ்சீவி செய்த இதயப்பூர்வமான செயல், பலரையும் உருகச் செய்துள்ளது. தனது வாழ்நாள் கனவான சிரஞ்சீவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், ராஜேஸ்வரி சைக்கிளில் ஏறி தொலைதூரப் பயணம் செய்து ஹைதராபாத்தை அடைந்தார். அத்தனை கஷ்டங்களையும், உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் தனது அன்பும், உறுதியும் அவரை அந்தப் பயணத்தில் முன்னோக்கி நகர்த்தியது. இந்த செய்தி சிரஞ்சீவியின் காதுகளில் விழுந்தபோது, அவர் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை, முழுமனதுடன் தன் ரசிகையின் அன்பை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டார். சிரஞ்சீவி…
Read Moreபிரம்மாண்டத்தின் உச்சம், தேஜா சஜ்ஜாவின் “மிராய்” பட டிரெய்லர் வெளியானது !
ஹனுமேன் படம் போன்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெறும் அதிர்ஷ்டம் எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் “புதிய தலைமுறை சூப்பர் ஹீரோ” தேஜா சஜ்ஜா, விதியை வென்றவர் போலத் தெரிகிறார். ஹனுமேன் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிறகு, அவர் மீண்டும் “மிராய்” எனும் விறுவிறுப்பான பிரம்மாண்ட காவியத்துடன் திரையில் ஆதிக்கம் செலுத்தத் தயாராக இருக்கிறார். ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்று, இப்போது இயக்குநராகியிருக்கும் கார்த்திக் கட்டமனேனி, மென்மை, மாயஜாலம் மற்றும் அதிரடி நிரம்பிய ஒரு உலகத்தை உருவாக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரியின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கீர்த்தி பிரசாத் ஆகியோர் இந்த பெரும் கனவு திரைப்படத்தை, திரையில் உயிர்பித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸே ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாயகனின் வலிமையை மட்டுமல்ல, அவன் எதிர்நின்று போராட வேண்டிய ஆற்றல்மிக்க வில்லனையும் அறிமுகப்படுத்தியது. முன்னதாக வெளியான “வைப்”…
Read Moreசென்னையில் நடைபெறும் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளையை அறிமுகப்படுத்துகிறது!
விளையாட்டு மற்றும் சினிமாவின் தனித்துவ கொண்டாட்டமான RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் செப்டெம்பர் 3 மற்றும் 4 அன்று சென்னை, தி.நகரில் உள்ள AGS சினிமாஸில் அறிமுகமாகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பிளாக்பஸ்டர் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை இரண்டு நாட்களுக்கு பெரிய திரையில் பார்த்து கொண்டாடலாம். காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகள் முதல் சமீபத்திய வெற்றிகள் வரை ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையனுபவத்தை கொடுக்க இருக்கிறது. விளையாட்டு நமக்கு எப்படி ஊக்கமளிக்கிறது, உந்துதல் கொடுக்கிறது மற்றும் மைதானத்திற்கும் அப்பாற்பட்டு நம் வாழ்வில் எப்படி முக்கியமான அங்கம் வகிக்கிறது ஆகியவற்றை ஒவ்வொரு திரையிடலும் நமக்கு உணர்த்தும். விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், திரைப்படத்துறையினர் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி விளையாட்டின்…
Read More‘குற்றம் புதிது’ படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர வருகிறார் நடிகர் தருண் விஜய்!
ஸ்டைல், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுள்ளவர்களை தமிழ் சினிமா எப்போதும் வரவேற்கும்! அந்த வகையில், நாளை வெளியாக இருக்கும் ‘குற்றம் புதிது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் தருண் விஜய். லெஜெண்ட் நடிகர்கள் புரூஸ் லீ, ஜாக்கி சான் மற்றும் டோனி ஜா போன்ற முகத்தோற்றம் தருண் விஜய்க்கு இருப்பதாக படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடினர். SRM கல்லூரி மாணவர்கள் மத்தியில் தருண் புகழ்பெற்றவராக இருப்பதால் நாளை (ஆகஸ்ட் 29, 2025) வெளியாக இருக்கும் அவரின் ‘குற்றம் புதிது’ பட போஸ்டரை மாணவர்கள் ஷேர் செய்து வருகின்றனர். திருவள்ளூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரின் மகனான தருண் விஜய் சென்னை போன்ற இந்த பெரும் நகரத்தில் மற்றவர்களைப் போலவே சாதாரண மேன்ஷனில் தங்கி தனது கனவை நிறைவேற்றியுள்ளார். ‘குற்றம் புதிது’…
Read Moreவீர வணக்கம் – திரை விமர்சனம்
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி யாளருமான பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கை வரலாற்றை நெஞ்சம் நெக்குருக தந்திருக்கிறார்கள். தமிழக கிராமம் ஒன்றின் பெரிய மனிதர் பரத், கம்யூனிசவாதியாக இருக்கிறார். ஊர் மக்களுக்கு சாதி மத பேதம் பார்க்காமல் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்பதோடு, அம்மக்களை பிரச்சனைகளை எதிர்த்து போராட வைப்பதற்காக அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார். அப்போது 97 வயதுள்ள பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறார். அவர் மூலம் கேரளாவில் கம்யூனிச புரட்சி உருவாகி, எப்படி விஸ்வரூபம் எடுத்தது என்பதை கவனம் ஈர்க்கும் விதத்தில் தந்திருப்பது சிறப்பு. 1940- ல் தொடங்கும் கதை 1946…
Read Moreநறுவீ – திரை விமர்சனம்
கல்வியின் அவசியம் குறித்த படம். இங்கே நறுமணமே கல்வி தான். மலைப்பிரதேசத்தில் மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் ஆசிரியர் அந்த அறியாமை மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு என்னவாகிறார் என்பது படத்தின் ஒருவரிக் கதை. அதை ஹாரர் த்ரில்லர் படமாகத் வந்திருக்கிறார்கள் . குன்னூர் மலையிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்கு வின்சு ரேச்சல், Vj பப்பு, பாடினி குமார் முதலியோர் வருகிறார்கள். இவர்களுக்கு உதவ கேத்தரின் வருகிறார். இந்த குழு குன்னூர் மலையை தொட்டதும் அவர்களுக்கு நிறைய அமானுஷ்ய அனுபவங்கள் கிட்டுகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதற்குப் பதிலாக ஒரு சோக கதையையும், ஒருவரது சேவை மனப்பான்மையும், அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் கல்வியின்மையும் தொட்டுப் பயணிக்கிறது திரைக்கதை. பன் பட்டர் ஜாம் படத்தில் நகைச்சுவையில் கலக்கியிருந்த VJ பப்பு, இதிலும் படத்தை கல கலப்பாக வைக்க உதவுகிறார். மருத்துவம்…
Read More