சென்னை: லால்வானி குடும்பம் சார்பில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் திங்கள்கிழமை ஹர்ஷ் மற்றும் சந்தனா ஆகியோரின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்படத்துறை, தொழில், சட்டத் துறை என பல்வேறு துறைகளைச சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த வரவேற்பு விழாவை பிரகாஷ் சந்த் லால்வானி, சஞ்சய் லால்வானி, பிரவீன் லால்வானி, சுஷில் லால்வானி மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, இனிய விருந்தோம்பலுடன் உபசரித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டு, மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழ் திரையுலகில் இருந்து, நடிகர்கள் ஜெயம் ரவி, பாபி சிம்ஹா, சதீஷ், ஸ்ரீகாந்த்,…
Read MoreAuthor: reporter
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது! பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார். இந்த மனதை வருடும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம்…
Read Moreகமல் சாருடன் நடிக்க வேண்டும் :யோகி பாபு ஆசை!
நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக். தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D…
Read MoreFrom Pritam and Pedro to The Bear: Your Ultimate JioHotstar Weekend Binge List
Weekend is almost here, which means it’s time to close those work tabs and completely surrender your weekend to the couch. If you’ve been wondering what to watch next, JioHotstar is dropping a massive, multi-language lineup perfect for a multi-day binge session. From Pritam and Pedro to The Bear , here are the six new releases that are tailor-made for back-to-back viewing. Pop your popcorn, dim the lights, and dive straight into the best shows streaming this weekend. *Pritam and Pedro* If you love a chaotic “mismatched partners” comedy, lock…
Read MoreTam’s consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தமிழ்வாணன் அவர்கள் தயாரித்து நடிக்கும் ‘Production no : 2’ திரைப்படம்!!
Tam’s consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தமிழ்வாணன் அவர்கள் தயாரித்து நடிக்கும் ‘Production no : 2’ திரைப்படம், 2017 ஆம் ஆண்டு போங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் தாஜ் அவர்களால் இயக்கப்படுகிறது. மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைக்கும் இப்படமானது, இம்மக்களுக்கு நடந்த அநீதியை உண்மை தன்மை மாறாமல் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படமானது இவர்களின் வாழ்வில் பொதுவுடைமை கொள்கையின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை இந்த மக்களின் குரலாக உணர்வுபூர்வமாக காட்டப்பட்டுள்ளது கதையின் அமைப்புபடி 2010 காலகட்டத்தை சுட்டிக்காட்டும் வகையில் கதை இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இவர்கள் மாதிரியான பின்தங்கிய நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்கையில் படிப்பு மற்றும் விளையாட்டின் மூலம் ஊடுறுவும் இடஒதுக்கீடு அரசியலுக்கும் இது பொருந்தும். தமிழ்நாட்டு அரசியலுக்கு…
Read More2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது. திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை, இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த அவரது உறுதி, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுவதோடு, ஒரு தலைமுறையையே ஊக்குவித்த அவரது பாரம்பரியத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது. சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்குமார் ராவ் நடித்துள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த நாள் மேலும் சிறப்பானதாக மாறியுள்ளது. இதனுடன், இப்படம் 2027 மே 14-ஆம் தேதி, நீண்ட விடுமுறை வார…
Read More‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் மேலும் ஒரு அதிரடி போஸ்டர் !
நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது! Zee Studios மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் மனித உடல்நலத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சமூக அக்கறை கொண்ட நீதிமன்ற பின்னணித் திரைப்படம், உண்மை சம்பவங்களின் தாக்கத்தை வலுவான திரைக்கதையுடன் எடுத்துரைக்கிறது. வெளியான புதிய போஸ்டரில், காஜல் அகர்வாலும் ஷ்ரேயாஸ் தல்படேவின் பதற்றமான சூழ்நிலையில் கோபமடைந்த பொதுமக்கள் கூட்டத்தால் சூழப்பட்டிருப்பது காணப்படுகிறது. காய்கறி சந்தையின்…
Read Moreமுதல்வர் விஜய் ஆண் தாயாக நம்மை காக்கிறார் – ‘வஞ்சி’ இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் தினா பேச்சு
வி.ஆர் கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சி.ஆர்.ராஜேஷ் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வஞ்சி’. இதில், நாயகியாக நைரா நிகார் நடித்திருக்கிறார். மாஸ்டர் ராஜநாயகம் மிக முக்கியமான அதிரடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வில்லனாக டேன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜிபில்ராஜன் பிதேவ், தினேஷ், பண்னை பாலு, காரை நட்ராஜ், பிரியங்கா அழகன், ஷிவானி, மாடசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சஜித் சங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயகிருஷ்ணன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கலைகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கணேஷ் பாபு, ஸ்டன்லி, நந்தினி பாடல்கள் எழுதியுள்ளனர். தம்பி சிவா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். பி.ஆர்.ஓ-வாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘வஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி, மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது.…
Read Moreடாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !
Monster Mind Creations, KVN Productions, மற்றும் Zee Music கம்பெனி இணைந்து, டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளன. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறது. டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் (‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தபாஹி’ பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆடியோ வெளியானவுடன் உடனடியாக ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறிய இந்தப் பாடல், திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியான Zee Music கம்பெனி உடன் இணைந்து கண்கவர்…
Read Moreஜியோஹாட்ஸ்டாரில் புதிய சாதனை படைத்த ‘பிரிதம் & பெட்ரோ’ திரைக்கதை அடிப்படையிலான தொடருக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய தொடக்க வெற்றி; ஆறு மொழிகளில் டிரெண்டாகி சாதனை
ஹிந்தியைத் தவிர்த்து *தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, மராத்தி மற்றும் கன்னடம்* உள்ளிட்ட ஆறு மொழிகளில் டிரெண்டாகி, நாடு முழுவதும் தனது வரவேற்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தனது அசல் மொழியைத் தாண்டி பல்வேறு பிராந்திய பார்வையாளர்களுடனும் ஆழமான தொடர்பை ஏற்படுத்தியிருப்பதை இந்தத் தொடர் நிரூபித்துள்ளது. ‘பிரிதம் & பெட்ரோ’வுக்கு கிடைத்துள்ள வரவேற்பு, வழக்கமான வார்ப்புருக் கதைகளில் இருந்து விலகி, வித்தியாசமான கதைகளுக்கு ஆதரவு வழங்கும் ஜியோஹாட்ஸ்டாரின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. ‘சிரையா’வின் உணர்வுபூர்வமான உலகத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததோ, ‘துக்ரா கே மேரா ப்யார்’ போன்ற எளிமையான, இதயத்தைத் தொடும் காதல் கதையை நாடு முழுவதும் ஒலிக்கச் செய்ததோ, அல்லது ‘பிரிதம் & பெட்ரோ’வில் ஹிரானியின் தனித்துவமான நகைச்சுவை மற்றும் நம்பிக்கை நிறைந்த பார்வையில் சைபர் குற்றங்களை எடுத்துக்காட்டியதோ – உண்மைத்தன்மை, ஆழமான உணர்வுகள்…
Read More
