கதை…. நாயகி ஃபர்சானா பலதிங்கல்… இவரது 5 வயது மகன் ஆதிசேஷன் கே.ஆர்.. இருவரும் ஜெயிலில் இருக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் ஒரு பெண் உதவி மூலம் சிறையிலிருந்து விடுதலை ஆகிறார் நாயகி.. எங்கு செல்வது.. எங்கு தங்குவது.. யாரிடம் உதவி கேட்பது என்ற எதுவும் தெரியாமல் அம்மாவும் மகனும் செல்கின்றனர்.. சிறையில் இருந்து வந்தோம் என்று சொன்னால் யாரும் வேலையும் தர மாட்டார்கள்… தங்க இடமும் கொடுக்க மாட்டார்கள் என்பதால் பெயரை மாற்றி பொய்கள் சொல்லி உதவி கேட்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் ஒரு வயதான பாட்டியை பார்த்துக் கொள்ள அம்மாவுக்கு வேலை கிடைக்கிறது.. அங்கிருந்து பாலன் படிக்கவும் பள்ளிக்கு செல்கிறார்.. அடையாள அட்டை எதுவும் இல்லாத சூழ்நிலையில் அதற்கும் சில திருட்டு வேலைகளை செய்ய வேண்டியதாகிறது.. ஒரு கட்டத்தில் அந்த வயதான பாட்டியும் இறந்து போக அந்த…
Read MoreAuthor: reporter
அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது
அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான ‘நாகபந்தம் ‘( Nagabhandham) திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர் இந்தியா முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். விராட் கர்ணா( Virat Karna) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது படத்தின் கதைக்களம் மற்றும் அதன் விவரிக்கும் உலகத்தை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இந்த முன்னோட்டத்தின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள புனிதமான அனந்தபத்மநாப சுவாமி கோயில் இடம் பிடித்திருக்கிறது. அங்கு அனைவராலும் போற்றப்படும் ‘பிரம்ம கமலம்’ என்பது சாதாரண தங்க தாமரை மலர் மட்டுமல்ல என்பதை ஒரு பூசாரி வெளிப்படுத்துகிறார். பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்கள் மற்றும் புதையல் வேட்டையர்களின் எண்ணற்ற தொடர் முயற்சிகள் இருந்த போதிலும்… அந்த தெய்வீக பொருள் ஒருபோதும் திருடப்படவில்லை. கற்பனைக்கு எட்டாத- கற்பனை செய்து பார்த்திட இயலாத- சக்திகளை பெறுவதற்காக…
Read More*அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது*
அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான ‘நாகபந்தம் ‘( Nagabhandham) திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர் இந்தியா முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். விராட் கர்ணா( Virat Karna) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது படத்தின் கதைக்களம் மற்றும் அதன் விவரிக்கும் உலகத்தை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இந்த முன்னோட்டத்தின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள புனிதமான அனந்தபத்மநாப சுவாமி கோயில் இடம் பிடித்திருக்கிறது. அங்கு அனைவராலும் போற்றப்படும் ‘பிரம்ம கமலம்’ என்பது சாதாரண தங்க தாமரை மலர் மட்டுமல்ல என்பதை ஒரு பூசாரி வெளிப்படுத்துகிறார். பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்கள் மற்றும் புதையல் வேட்டையர்களின் எண்ணற்ற தொடர் முயற்சிகள் இருந்த போதிலும்… அந்த தெய்வீக பொருள் ஒருபோதும் திருடப்படவில்லை. கற்பனைக்கு எட்டாத- கற்பனை செய்து பார்த்திட இயலாத- சக்திகளை பெறுவதற்காக…
Read Moreஎல்.வி ஸ்டுடியோஸ் ஆட்மாஸ் மிக்ஸ் தியேட்டர் சென்னையில் தொடங்கப்பட்டது
பிரபல இசையமைப்பாளர் மறைந்த எல். வைத்யநாதனின் மகன்கள் எல்.வி முத்து கணேஷ் (இசையமைப்பாளர்கள்) சென்னையில் புதிய பதிவு மற்றும் ஹைப்ரிட் மிக்சிங் ஸ்டுடியோவைத் தொடங்கியுள்ளனர். துப்பாக்கி முனை, மதில், ஆயன மனே, மாரிகல்லு, ராட்சசா, பூச்சம்மா, காந்தாரி போன்ற புகழ்பெற்ற படைப்புகளுக்கு தற்போதைய இசையமைப்பாளர்களாக எல்.வி முத்து கணேஷ் உள்ளனர். எல்.வி ஸ்டுடியோஸ் சென்னையில் அதிநவீன பதிவு ஸ்டுடியோ வசதியைத் திறக்கிறது, பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு மற்றும் கே.டி. குஞ்சுமோன் தொடங்கி வைத்தனர். ஆடியோ போஸ்ட் புரொடக்ஷனுக்கான முன்னணி இடமான எல்.வி ஸ்டுடியோஸ், தனது கிராண்ட் ஓபனிங்கை பெருமையுடன் அறிவிக்கிறது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் திறப்பு விழாவை நடத்தினார். எடிட்டர் பி. லெனின் மற்றும் ஜீ…
Read Moreஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் பிரேர்ணா அரோரா இணைந்து தயாரிக்கும் அடுத்த பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படத்தில், இளம் முன்னணி நடிகர் கிரண் அப்பாவரம் கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘KA16’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது. ஜீ ஸ்டுடியோஸ், பிரேர்ணா அரோரா மற்றும் கிரண் அப்பாவரம் ஆகியோர் இணையும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் புப்பாலா இயக்குகிறார். மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் சென்றடையும் நோக்கில் உருவாகும் இந்தப் படம் வலுவான தொழில்நுட்பக்குழுவினர் மற்றும் திறமையான நடிகர்களையும் கொண்டுள்ளது. வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஜீ ஸ்டுடியோஸ், இந்திய திரைப்படத் துறையில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. அதேபோல், பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்த அனுபவம் கொண்ட பிரேர்ணா அரோரா, இந்தத்…
Read Moreஎங்கள் தங்கம் – விமர்சனம்
கதை… தெலுங்கில் உருவான ’மா இன்டி பங்காரம்’… இப்படத்தை தமிழில் ‘எங்கள் தங்கம்’ எனப் பெயரிட்டு வெளியிட்டுள்ளனர்.. நந்தினி என்பவர் இயக்க சமந்தா தயாரித்துள்ளார்.. ஒரு அனாதை ஆசிரமத்தில் தன் தோழியுடன் வளர்ந்த சமந்தா வளர்ந்து பெரியவர் ஆன பிறகு காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.. ஒரு கட்டத்தில் கணவரின் தங்கை திருமணத்திற்காக அவரின் சொந்த கிராமத்திற்கு செல்கிறார். (சமந்தா கேரக்டர் பெயர் ஸ்வர்ணா.) அப்போது வில்லன் குல்சன் கும்பல் ஒன்று சமந்தாவை தேடி நீ ஜான்சி தானே என்று கேட்டு அவரைக் கொல்ல திட்டமிடுகின்றனர்.. தான் ஜான்சியா சொர்ணா என்பது ஒரு பக்கம் இருக்க தன் கணவருக்கும் குடும்பத்திற்கு இது தெரியக்கூடாது என்பதற்காக சமந்தா போராடுகிறார்.. அப்படி என்றால் இவர் நிஜத்தில் யார்.? இவர் ஜான்சி என்றால் ஸ்வர்ணா என்ற பெயரில் கணவர் குடும்பத்தில் வர…
Read Moreடி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!
மாச்சோ ஸ்டார் டி. கோபிசந்த் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் ‘பாரதவர்ஷா’. இந்தப் படத்தை இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்க, ஸ்ரீனிவாசா சித்தூரி தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். மேலும், பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். கோபிசந்தின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக இது உருவாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் படக்குழு வெளியிட்ட டைட்டில் கிளிம்ப்ஸ்க்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இன்று படத்தின் முதல் பாடலான ‘வீர ஜெயதீரா’ வெளியிடப்பட்டுள்ளது. அனுதீப் தேவ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை தீபக் ப்ளூ மற்றும் லட்சுமி மேகனா பாடியுள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற பாடலாசிரியர் சந்திரபோஸ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலின் காட்சிகள் அழகுடனும்…
Read Moreலவ் ஓ லவ்’ படக்குழுவின் “ப்ரோக் பாய்” (Broke Boy) முதல் பாடல் வெளியீடு; 1 மில்லியன் பார்வைகளைக் கடந்த டீசரைத் தொடர்ந்து பாடல் அபார வரவேற்பு; *ஜூன் 26-ல் டிரெய்லர் வெளியாகிறது
வரவிருக்கும் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படமான “லவ் ஓ லவ்” மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது படத்தின் முதல் பாடலான “ப்ரோக் பாய்” (Broke Boy) பாடலை வெளியிட்டுள்ளனர். ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் (Zinema Media and Entertainment Ltd.) மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இணைந்து தயாரித்துள்ள “லவ் ஓ லவ்” படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். பவிஷ் நாராயண் மற்றும் நாக துர்கா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, அஷ்வத், சௌந்தர்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், காதல், நகைச்சுவை, இளமை…
Read Moreகோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!
*கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!* புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து தயாரித்திருக்கும் “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது! மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. “ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் என்னவாக இருக்குமென்ற?” சிந்தனையை மையக் கருவாக உருவாகியுள்ள இந்த பாடல், கோபத்தையும்,வஞ்சத்தையும் நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உன்னத கருத்தை பொட்டில் அடித்தாற் போல் பேசுகிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் ஒவ்வொரு காட்சியிலும், வரிகளிலும் வலிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புஷ்பநாதன் ஆறுமுகம்…
Read Moreதமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது!!
BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான “அட்டாக்கர்” படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் படபூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படமாக உருவாகும் *“அட்டாக்கர்”* படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தனித்துவமான களத்தில் இப்படத்தை இயக்குகிறார். வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமாக “அட்டாக்கர்” அமைகிறது. விளையாட்டின் உற்சாகத்துடன் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக…
Read More