தமிழக முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, **100 பேச்சாளர்கள் 100 தலைப்புகளில் ஒரே தலைவரைப் பற்றி சொற்பொழிவாற்றிய “வாகைத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்”** நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை, செய்தி, விளம்பரம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்மோகன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நடிகை ஜெயசித்ரா, இயக்குநர் வெங்கட் பிரபு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
Read MoreAuthor: reporter
சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!
சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம். 2024ல் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் ‘நந்தன்’. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடும் நிஜத்தை ‘நந்தன்’ படத்தில் கதையாக்கி இருந்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸில் தமிழ்நாட்டில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் தங்களின் வேதனையான நிலையை வாக்குமூலமாக வெளியிட்டிருந்தார்கள். இது படம் வெளியான போது தமிழகம் முழுக்க பரபரப்பைக் கிளப்பியது. ‘நந்தன்’ படத்தின் சமூக நீதிக் கருத்தை இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினரும் திருமாவளவன், அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்று இருந்தார்கள். படம் வெளியான பிறகு தமிழகம் முழுக்க தலித் பஞ்சாயத்து…
Read Moreஅட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
ஜினிமா எண்டர்டெய்ன்மெண்ட் பி லிட் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ், நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா நடிக்கும் படம் அட்டாக்கர் . அறிமுக இயக்குனர் தாமோ நாகபூஷனம் எழுதி இயக்குகிறார் இவர் இயக்குனர் பா.இரஞ்சித், இணை இயக்குனராக பணியாற்றியவர். சமீபத்தில் இந்தபடத்தின் படபூஜை நடைபெற்றது , அதனை தொடர்ந்து இன்று அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே துவங்கியது. ஜினிமா மீடியா எண்டர்டெய்ண்மெண்ட் நிர்வாக இயக்குனர் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் மற்றும் பா.இரஞ்சித் கிளாப் போர்டு அடித்து துவங்கிவைத்தனர். பவிஷ், மற்றும் மைம் கோபி இருவரும் நடிக்கும் முதல் காட்சியை தனது இணை இயக்குனருக்காக ஆக்சன் சொல்லி துவங்கி வைத்தார் பா.இரஞ்சித். வாலிபால் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தபடத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் தென்னிந்திய மானிலங்களில் நடைபெறவிருக்கிறது.
Read Moreஆனந்தன் காடு’ பத்திரிகையாளர் சந்திப்பு: ஆர்யா – ஜியேன் கிருஷ்ணகுமார் கூட்டணியின் பிரம்மாண்ட முயற்சி
வரவிருக்கும் தமிழ்–மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். நிகழ்வின் போது படத்தின் கதை, பின்னணி மற்றும் உருவாக்க அனுபவங்கள் குறித்து படக்குழுவினர் விரிவாக பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி தொடர்பான கேள்விகளுக்கு இயக்குநர் விளக்கம் அளித்தார். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் சில உண்மை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், திரைப்படத்தின் முழு அனுபவத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும் நிகழ்வில் பேசுகையில் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், “இது வெறும் ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; உணர்வுகள், மனிதர்களின் வாழ்க்கை மற்றும் பல அடுக்குகள் கொண்ட கதைக்களத்தை உள்ளடக்கிய திரைப்படம். சில வரலாற்றுப் பின்னணிகளை…
Read Moreஉலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாடிய ‘வைப் வித் அரவிந்த்’!
சென்னை, ஜூன் 21, 2026: உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ‘வைப் வித் அரவிந்த்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பி்த்தனர். பிராண்ட் அவதார் மற்றும் அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக் இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவுடன் இணைந்து வழங்கிய இந்த நிகழ்வில் இந்தியாவின் செல்வாக்கு பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்தின் இசையை கொண்டாடப்பட்டது. ‘மொட்டமாடி மியூசிக்’ குழுவினர் அனிருத்தின் பிரபலமான பாடல்களை உற்சாகத்துடன் இசைத்து ரசிகர்களை மகிழ்வித்ததோடு அந்த மாலைப்பொழுது தொடங்கியது. டிஜே தீபிகா தனது துள்ளலான இசை மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ‘ராக்ஸ்டார்’ அனிருத் வருகைக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அரங்கம் நிறைந்த ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் அனிருத் மேடைக்கு வந்தார்.…
Read Moreமக்கள் தலைவா விமர்சனம்.. அரசியல் நையாண்டி கலாட்டா
கதை… ரவி மரியா… ஊரைக் காக்க உருவான சங்கம் அது நாங்க இல்ல என்பது போல… ஊர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் ரவி மரியா அரசியல்வாதியிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்த பிரச்சினையை பற்றி பேச மாட்டார்.. இப்படியாக பணம் பார்த்து வசதியான வாழ்க்கை வாழ நினைக்கிறார்.. ஒரு கட்டத்தில் டாஸ்மாக்கில் பத்து ரூபாய் பாட்டிலுக்கு வாங்கியதால் ஒரு ஆட்டோக்காரர் பிரச்சினை செய்கிறார்.. இந்தப் தொடர்பான வீடியோ ரவிக்கு கிடைக்க அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தமிழ்நாடு முழுக்க பிரபலம் அடைகிறார்.. இவரின் சாமர்த்தியத்தை பார்க்கும் கார்ப்பரேட் முதலாளி ராதாரவி நீ அரசியலுக்கு வா உனக்கு பின்புலமாக நான் இருக்கிறேன்.. என்று சொல்லி பெட்டி பெட்டியாக பணம் கொடுக்கிறார்.. அரசியல் ஆசை கண்ட ரவி மரியா உள்ளே வெளியே என்ற கட்சியை தொடங்கி அதன் மூலம் தேர்தலில் போட்டியிடுகிறார்.…
Read Moreகான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் மதன் பேசியதாவது.., “வணக்கம் நண்பர்களே. ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பில்ட்அப் எல்லாமே இந்தப் படத்திற்குத் தகுதியானதுதான். ஏனென்றால் இது அப்படியொரு நல்ல திரைப்படம். இந்தப் படத்தின் கதையிலும், அதில் சொல்லப்படும் கருத்துகளிலும் நிறைய புத்திசாலித்தனமான விஷயங்கள் இருக்கின்றன. டிரைலரையே நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எவ்வளவு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆனால் படம் அதைவிட இன்னும் சிறப்பாகவும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும்.…
Read Moreராகிங் ஸ்டார் யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம், உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியீடு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், யாஷ்ஷின் இரட்டை அவதாரங்களான ராயா (Raya) மற்றும் டிக்கெட் (Ticket) ஆகிய கதாபாத்திரங்களை முன்னிறுத்தி, படத்தின் இருண்ட, ஆழமான மற்றும் பல அடுக்குகள் கொண்ட உலகத்தை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை அறிமுகப்படுத்துகிறது. வழக்கமான தந்தை-மகன் உறவை கொண்டாடும் போஸ்டராக இல்லாமல், இந்த போஸ்டர் பதற்றம், அதிகாரம் மற்றும் உணர்ச்சி ரீதியான சிக்கல்களால் நிரம்பிய ஒரு உறவை சுட்டிக்காட்டுகிறது. சாதாரண ரிலீஸ் தேதி அறிவிப்பாக இல்லாமல், முரண்பட்ட உணர்வுகள், மறைந்திருக்கும் ரகசியங்கள் மற்றும் ‘டாக்ஸிக்’ உருவாக்கி வரும்…
Read Moreஆறு தலைமுறைகளின் பெயர்களை பட்டியலிட்டு, ஆகப் பெரும் அரசியல் தலைமைகள், நீதி அரசர்கள், கல்வியாளர்கள், திரைத்துறை ஆளுமைகள், தொழிலதிபர்கள் கலந்து கொள்ளும் இயக்குனர் வ.கௌதமன் மகள் திருமணம்
கனவே கலையாதே, மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமானவர் வ.கௌதமன். மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா இரண்டு படங்களில் நாயகனாகவும் நடித்திருப்பவர். இவர் சின்னத்திரையில் இயக்கிய ஆட்டோ சங்கர், சந்தனக்காடு, காயிதம் ஆகிய தொடர்கள் மாபெரும் கவனம் ஈர்த்த படைப்புகள். வ.கௌதமன்-மல்லிகா தம்பதியர்களின் மகள் கௌ.பரஞ்சோதி பி.காம்.,எம்பிஏ., அவர்களுக்கும் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு தொழிலதிபர் க.கண்ணன்-சம்பாவதி தம்பதியர்களின் மகன் க.குணாநிதி பி.ஆர்க்., அவர்களுக்கும் வருகின்ற 24.06.2026 புதன் மாலை வரவேற்பு நிகழ்வும் மறுநாள் 25 ஆம் தேதி காலை 7.35 முதல் 9 மணிக்குள் புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் திருமணமும் நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்வில் இன்றைய அரசியலின் ஆகப்பெறும் தலைவர்கள், முன்னாள் இந்நாள் நீதி அரசர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள், கல்வியாளர்கள், திரை துறை ஆளுமைகள் மற்றும் தொழிலதிபர்கள்…
Read Moreநூறு சாமி விமர்சனம்.. – அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்[4.5/5]
கதை… 2019 ஆம் ஆண்டில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சசி.. நாயகி ஸ்வாசிகா.. கணவரை இளம் வயதிலேயே இழந்த இவருக்கு இரு மகன்கள்.. மூத்தவன் அஜய் திஷான்.. இரண்டாவது மகன் சக்தி.. மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு ஆசிரியர் அருள்தாஸ் மூலமாக தன் மகனிடம் விருப்பத்தை கேட்கிறார் அம்மா ஸ்வாசிகா.. இளவயது மகன்கள் மறுக்கிறார்கள்… ஒரு கட்டத்தில் அவர்களுக்கு திருமண வயது எட்டிய போது அம்மாவின் மறுமணம் பற்றி யோசிக்கின்றனர்.. ஆனால் இப்போது அம்மா மறுக்கிறார்.. நீங்கள் மறுமணம் செய்ய வில்லை என்றால் நாங்களும் செய்து கொள்ள மாட்டோம் என்றும் மகன்கள் மறுக்கின்றனர்.. அதன் பிறகு நடந்தது என்ன.? அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா மகன்கள்.? எப்படி நடந்தது என்பதெல்லாம் சுவாரசியமான உணர்வுபூர்வமான திரைக்கதை.. நடிகர்கள்……
Read More