இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத முத்திரையைப் பதித்துள்ள கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம், தனது 46-வது ஆண்டைப் பெருமையுடன் கொண்டாடி வருகிறது. அந்த மகத்தான திரைப்பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிகு அத்தியாயமாக ‘அமரன்’ திரைப்படம் இடம்பிடித்துள்ளது. கமல்ஹாசன் வழங்கியுள்ள இப்படத்தை கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வலுவான கதைகளையும், திறமையான படைப்பாளிகளையும் மிகப் பெரிய திரை அனுபவமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் உறுதியின் அடையாளமாக ‘அமரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோரின் அர்ப்பணிப்புமிக்க நடிப்பு, கதையின் உணர்வுகளையும், உண்மைத்தன்மையையும் சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது, 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘அமரன்’…
Read MoreCategory: சினிமா செய்திகள்
மூன்று தலைமுறைகள்… ஏழு தசாப்தங்கள்… தேசிய அங்கீகாரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரே ஒரு மகத்தான பாரம்பரியம்!
72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சிறப்புமிக்க பயணத்தில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயத்தை பதிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதையும், இப்படத்தில் தனது ஆழமான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், சிறப்பு பாராட்டு (Special Mention) விருதையும் பெற்றிருப்பது படக்குழுவினருக்கும், சத்யஜோதி பிலிம்ஸுக்கும் பெருமை சேர்த்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸுக்கு இந்த தேசிய அங்கீகாரம் வெறும் விருதாக மட்டுமல்ல; ஏழு தசாப்தங்களாக, மூன்று தலைமுறைகள் தொடர்ந்து அர்த்தமுள்ள கதைகள், கலைநயம் மிக்க படைப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய திரைப்படங்களை உருவாக்கி வந்த பாரம்பரியத்திற்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். இந்த மகத்தான பயணத்தின் தொடக்கம் 1950-களின் இறுதியில் வீனஸ் டி. கோவிந்தராஜன் அவர்களால் தயாரிக்கப்பட்ட…
Read Moreதேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் And இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு
72nd National Film awards 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அளவில் சில முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து முழு நீள திரைப்படங்களுக்கான பிரிவில் (feature film) கலா மாஸ்டர் பங்கேற்றார் Non feature film – குறும்படங்கள்,ஆவணப் படங்கள்,அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அவர்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டு இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற படைப்புகளுக்கான விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் இருந்து பல மொழிகளில் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கான தேசிய விருதை பிரம்மாண்டமான விழாவில் ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவர் வழங்கி வருகிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக திரையுலகில் கொண்டாடப்படுகிறது
Read Moreதேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் And இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு
72nd National Film awards 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அளவில் சில முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து முழு நீள திரைப்படங்களுக்கான பிரிவில் (feature film) கலா மாஸ்டர் பங்கேற்றார் Non feature film – குறும்படங்கள்,ஆவணப் படங்கள்,அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அவர்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டு இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற படைப்புகளுக்கான விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் இருந்து பல மொழிகளில் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கான தேசிய விருதை பிரம்மாண்டமான விழாவில் ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவர் வழங்கி வருகிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக திரையுலகில் கொண்டாடப்படுகிறது
Read Moreமுழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அவிரா “
வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் AI என்ற (Artificial intelligence ) தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, திரைப்படம் துறையிலும் AI தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி உருவாகி வரும் முழு நீள திரைப்படம் ” அவிரா “ சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய பிரபாகரன். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கிறது. முழுக்க முழுக்க Photo Realistic A I தொழில்நுட்பம் மூலம் முழு நீளப்படத்தையும் தயாரித்திருப்பது இந்தியாவிலேயே இது தான் முதன்முறை என்ற பெருமை இயக்குனர் பிரபாகரனையே சேரும்.…
Read Moreகாஜல் அகர்வால் இடம்பெறும் நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் சக்திவாய்ந்த பாடல் !
ZEE Studios வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) தற்போது வெளியாகியுள்ளது. நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தளராத மன உறுதியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடல், படத்தின் உணர்ச்சி மையமாக அமைந்துள்ளது. பாடகி ரிச்சா ஷர்மா மனதை வருடும் வகையில் பாடியுள்ள இந்த பாடலுக்கு மங்கேஷ் தகாடே இசையமைத்துள்ளார். வரிகளை ஷகீல் அசாமி எழுதியுள்ளார். காஜல் அகர்வால் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘து சல்’, மிகப்பெரிய சவால்களையும், உணர்வுபூர்வமான போராட்டங்களையும் எதிர்கொண்டாலும் ஒருபோதும் சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியான பயணத்தை பிரதிபலிக்கிறது. சக்திவாய்ந்த காட்சிகளும், ஆழமான வரிகளும் இணைந்து, ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் மீண்டும் எழுந்து நிற்கும் துணிச்சலை கொண்டாடுகிறது. எவ்வளவு கடினமான பாதையாக இருந்தாலும், தொடர்ந்து முன்னேறுவதே உண்மையான…
Read More‘ஹபீபி’ வெற்றிக்குப் பிறகு இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமான இளம் நடிகர் ஈசா – தனது திரைப்பயணம், வெற்றி மற்றும் எதிர்காலம் குறித்து மனம் திறக்கிறார்
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் முதல் படத்திலேயே சிறந்த கதை, வலுவான கதாபாத்திரம், திறமையான இயக்குநர், ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு என அனைத்தும் ஒருசேர கிடைப்பது மிகவும் அரிது. அந்த அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் கதாநாயகன் ஈசா. மதுரையைச் சேர்ந்த ஈசா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்று வரும் மாணவர். அதேநேரத்தில் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களையும் பரிசுகளையும் வென்ற விளையாட்டு வீரரும் ஆவார். விளையாட்டின் மூலம் பெற்ற ஒழுக்கம், விடாமுயற்சி, கட்டுப்பாடு ஆகியவற்றையே சினிமாவிலும் தனது பலமாக மாற்றிக் கொண்டுள்ளார். திரைப்படத் துறையில் தனது பயணத்தை தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா இயக்கத்தில், நடிகர் அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தில்…
Read Moreஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாக இருக்கும், இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் IMDb-ன் ரியல் டைம் தரவரிசையில் 11.1% மதிப்பெண் பெற்றுள்ளது!
நடிகர் ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம். ‘ராக்கெட்ரி’ படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து உருவாகும் இந்த திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் ஆர். மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், முரளிதரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைய்ன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோயம்புத்தூரில்…
Read Moreஇந்திய புராண உலகத்தை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆறு மொழிகளில் புதுமையாக அறிமுகப்படுத்தும் அசல் அனிமேஷன் தொடர்
தேசியம் | ஜூலை 15, 2026: குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on ZEE5, தனது குழந்தைகளுக்கான உள்ளடக்கத் தொகுப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய புராண அனிமேஷன் தொடரான Shivlok Ke Kundakka Mandakka (SKM)-வை அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் எழுதிய அதிகம் விற்பனையான குழந்தைகள் நூலான The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், அனைவராலும் விரும்பப்படும் புராண உலகத்தை அனிமேஷன் வடிவில் திரையில் உயிர்ப்பிக்கிறது. ஜூலை 17 முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்தக் கதையின் மையமாக, குறும்புத்தனமான அசுர இரட்டையர்களான குண்டக்கா மற்றும் மண்டக்கா இடம்பெறுகின்றனர். அவர்களின் விளையாட்டுத்தனமான குறும்புகள், தைரியம், நட்பு மற்றும் சுயஅறிதல் நிறைந்த…
Read Moreஎன் மியூசிக் ஜெர்னில ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககூட பகிர்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
ஃபர்ஸ்ட் டைமா, ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் சார் கூட சேர்ந்து ஒரு பாட்டு பாடுற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு வரப்போற ‘DC’ படத்துக்காக ஒரு பாட்டு ரெக்கார்டிங் ரீசண்டா சென்னையில நடந்துச்சு. ஒரு மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ். கோடிக்கணக்கான மக்களைத் தன்னோட மியூசிக்கால இன்ஸ்பையர் பண்ணிய அனிருத் ஐயா கூட வொர்க் பண்ணது எனக்குக் கிடைச்ச பெருமை, என்னோட ஒரு பெரிய ட்ரீம் கம் ட்ரூ மொமண்ட். ஒவ்வொரு கொலாபரேஷனும் நமக்கு புதுசா எதையாவது கத்துக்கொடுக்கும். அந்த வகையில இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஸ்டுடியோல அனிருத் சாரோட எனர்ஜி, பேஷன், அப்புறம் அவரோட கிரியேட்டிவிட்டி எல்லாமே செம்ம இன்ஸ்பைரிங்கா இருந்தது. இந்த டிராக்க ரெக்கார்ட் பண்ணது எப்பவும் என் மனசுக்கு நெருக்கமான ஒரு மெமரியா இருக்கும். என் மேல நம்பிக்கை வச்சு இந்த சூப்பரான வாய்ப்பைக்…
Read More
