சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக ஹாரர் ஜானர் திரைப்படங்களில் சிலவற்றிற்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. உலகளவில் புகழ்பெற்ற ’தி கான்ஜூரிங்’ மற்றும் ’ஈவில் டெட்’ போன்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உதாரணமாக சொல்லலாம். இந்திய சினிமாவிலும் மிகச்சில திரைப்படங்களின் அடுத்தடு்த்த பாகங்களுக்கே இத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வரிசையில், தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் திகில் சீக்வல்தான் ’டிமான்டி காலனி’. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படமும் அதன் சீக்வலும் இன்றும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. திகில் ரசிகர்களுக்கு செப்டம்பர் 11 மறக்க முடியாத நாளாக மாற உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ’டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படத்தின்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
ZOY Is Building the Future of Menstrual Care While Driving Awareness Around Cycle Wellness Beyond Periods: ZOY Is Reimagining Menstrual Care Through Thoughtful Innovation and Holistic Wellbeing
Link to campaign film: https://youtube.com/shorts/afcrAddFD6s?si=CwBEc8TbGkrNq4uU As conversations around women’s health continue to evolve, a new category is beginning to emerge Cycle Wellness. While menstrual care has traditionally focused on managing periods, cycle wellness encourages women to better understand the different phases of their cycle, hormonal fluctuations, energy levels, emotional wellbeing and overall health throughout the month. ZOY, the feminine and menstrual healthcare brand founded by Maheshwari Moorthy and co-founded by Samantha Ruth Prabhu, is helping lead this shift by building awareness around cycle wellness and encouraging women to move…
Read Moreகுடும்ப ரசிகர்களுக்காகத்தான் இப்போது படங்கள் தேர்வு செய்கிறேன்” – அர்ஜுன் தாஸ்
ஹீத் லெட்ஜரின் ஜோக்கர் என் ஃபேவரைட் வில்லன்” – அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். ஆக்ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலப் போராட்டங்கள் முதல், ரசிகர்கள் அளித்த அன்பு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பயணம் மற்றும் எதிர்கால திட்டங்கள் வரை பல்வேறு கேள்விகளுக்கு அவர்…
Read Moreஅம்மா கிரியேஷன்ஸ் T. சிவா நடத்திய “வாகைத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்”
தமிழக முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, **100 பேச்சாளர்கள் 100 தலைப்புகளில் ஒரே தலைவரைப் பற்றி சொற்பொழிவாற்றிய “வாகைத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்”** நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை, செய்தி, விளம்பரம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்மோகன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நடிகை ஜெயசித்ரா, இயக்குநர் வெங்கட் பிரபு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
Read Moreசிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!
சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம். 2024ல் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் ‘நந்தன்’. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடும் நிஜத்தை ‘நந்தன்’ படத்தில் கதையாக்கி இருந்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸில் தமிழ்நாட்டில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் தங்களின் வேதனையான நிலையை வாக்குமூலமாக வெளியிட்டிருந்தார்கள். இது படம் வெளியான போது தமிழகம் முழுக்க பரபரப்பைக் கிளப்பியது. ‘நந்தன்’ படத்தின் சமூக நீதிக் கருத்தை இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினரும் திருமாவளவன், அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்று இருந்தார்கள். படம் வெளியான பிறகு தமிழகம் முழுக்க தலித் பஞ்சாயத்து…
Read Moreஅட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
ஜினிமா எண்டர்டெய்ன்மெண்ட் பி லிட் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ், நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா நடிக்கும் படம் அட்டாக்கர் . அறிமுக இயக்குனர் தாமோ நாகபூஷனம் எழுதி இயக்குகிறார் இவர் இயக்குனர் பா.இரஞ்சித், இணை இயக்குனராக பணியாற்றியவர். சமீபத்தில் இந்தபடத்தின் படபூஜை நடைபெற்றது , அதனை தொடர்ந்து இன்று அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே துவங்கியது. ஜினிமா மீடியா எண்டர்டெய்ண்மெண்ட் நிர்வாக இயக்குனர் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் மற்றும் பா.இரஞ்சித் கிளாப் போர்டு அடித்து துவங்கிவைத்தனர். பவிஷ், மற்றும் மைம் கோபி இருவரும் நடிக்கும் முதல் காட்சியை தனது இணை இயக்குனருக்காக ஆக்சன் சொல்லி துவங்கி வைத்தார் பா.இரஞ்சித். வாலிபால் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தபடத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் தென்னிந்திய மானிலங்களில் நடைபெறவிருக்கிறது.
Read Moreஉலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாடிய ‘வைப் வித் அரவிந்த்’!
சென்னை, ஜூன் 21, 2026: உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ‘வைப் வித் அரவிந்த்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பி்த்தனர். பிராண்ட் அவதார் மற்றும் அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக் இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவுடன் இணைந்து வழங்கிய இந்த நிகழ்வில் இந்தியாவின் செல்வாக்கு பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்தின் இசையை கொண்டாடப்பட்டது. ‘மொட்டமாடி மியூசிக்’ குழுவினர் அனிருத்தின் பிரபலமான பாடல்களை உற்சாகத்துடன் இசைத்து ரசிகர்களை மகிழ்வித்ததோடு அந்த மாலைப்பொழுது தொடங்கியது. டிஜே தீபிகா தனது துள்ளலான இசை மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ‘ராக்ஸ்டார்’ அனிருத் வருகைக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அரங்கம் நிறைந்த ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் அனிருத் மேடைக்கு வந்தார்.…
Read Moreராகிங் ஸ்டார் யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம், உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியீடு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், யாஷ்ஷின் இரட்டை அவதாரங்களான ராயா (Raya) மற்றும் டிக்கெட் (Ticket) ஆகிய கதாபாத்திரங்களை முன்னிறுத்தி, படத்தின் இருண்ட, ஆழமான மற்றும் பல அடுக்குகள் கொண்ட உலகத்தை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை அறிமுகப்படுத்துகிறது. வழக்கமான தந்தை-மகன் உறவை கொண்டாடும் போஸ்டராக இல்லாமல், இந்த போஸ்டர் பதற்றம், அதிகாரம் மற்றும் உணர்ச்சி ரீதியான சிக்கல்களால் நிரம்பிய ஒரு உறவை சுட்டிக்காட்டுகிறது. சாதாரண ரிலீஸ் தேதி அறிவிப்பாக இல்லாமல், முரண்பட்ட உணர்வுகள், மறைந்திருக்கும் ரகசியங்கள் மற்றும் ‘டாக்ஸிக்’ உருவாக்கி வரும்…
Read Moreஆறு தலைமுறைகளின் பெயர்களை பட்டியலிட்டு, ஆகப் பெரும் அரசியல் தலைமைகள், நீதி அரசர்கள், கல்வியாளர்கள், திரைத்துறை ஆளுமைகள், தொழிலதிபர்கள் கலந்து கொள்ளும் இயக்குனர் வ.கௌதமன் மகள் திருமணம்
கனவே கலையாதே, மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமானவர் வ.கௌதமன். மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா இரண்டு படங்களில் நாயகனாகவும் நடித்திருப்பவர். இவர் சின்னத்திரையில் இயக்கிய ஆட்டோ சங்கர், சந்தனக்காடு, காயிதம் ஆகிய தொடர்கள் மாபெரும் கவனம் ஈர்த்த படைப்புகள். வ.கௌதமன்-மல்லிகா தம்பதியர்களின் மகள் கௌ.பரஞ்சோதி பி.காம்.,எம்பிஏ., அவர்களுக்கும் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு தொழிலதிபர் க.கண்ணன்-சம்பாவதி தம்பதியர்களின் மகன் க.குணாநிதி பி.ஆர்க்., அவர்களுக்கும் வருகின்ற 24.06.2026 புதன் மாலை வரவேற்பு நிகழ்வும் மறுநாள் 25 ஆம் தேதி காலை 7.35 முதல் 9 மணிக்குள் புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் திருமணமும் நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்வில் இன்றைய அரசியலின் ஆகப்பெறும் தலைவர்கள், முன்னாள் இந்நாள் நீதி அரசர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள், கல்வியாளர்கள், திரை துறை ஆளுமைகள் மற்றும் தொழிலதிபர்கள்…
Read Moreஅபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது
அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான ‘நாகபந்தம் ‘( Nagabhandham) திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர் இந்தியா முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். விராட் கர்ணா( Virat Karna) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது படத்தின் கதைக்களம் மற்றும் அதன் விவரிக்கும் உலகத்தை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இந்த முன்னோட்டத்தின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள புனிதமான அனந்தபத்மநாப சுவாமி கோயில் இடம் பிடித்திருக்கிறது. அங்கு அனைவராலும் போற்றப்படும் ‘பிரம்ம கமலம்’ என்பது சாதாரண தங்க தாமரை மலர் மட்டுமல்ல என்பதை ஒரு பூசாரி வெளிப்படுத்துகிறார். பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்கள் மற்றும் புதையல் வேட்டையர்களின் எண்ணற்ற தொடர் முயற்சிகள் இருந்த போதிலும்… அந்த தெய்வீக பொருள் ஒருபோதும் திருடப்படவில்லை. கற்பனைக்கு எட்டாத- கற்பனை செய்து பார்த்திட இயலாத- சக்திகளை பெறுவதற்காக…
Read More