ஊரடங்கு காலத்தில் உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் உதவியை வழங்கிவரும் “அம்மா மூவி அசோசியேஷன்”

இயற்கையாக உருவான பேரிடர் கொரானா வைரஸ் இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் முடங்கிபோனது இதன் காரணமாக அனைத்து தொழில்களும் தொடர்ந்து நடத்த இயலாமல்முடக்கப்பட்டதுதிரைப்படத்துறையும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்றானது

தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள்-திரையரங்கு உரிமையாளர்களுக்கு இணைப்பு பாலமாக இருந்து கோடிக்கணக்கான வியாபாரங்கள் முடிவதற்கு காரணமாக உள்ள மீடியேட்டர்கள் உறுப்பினர்களாக உள்ள ‘அம்மா மூவி அசோசியேசன்’ தங்கள் உறுப்பினர்களை பாதுகாக்கும் பொருட்டு ஏப்ரல் 2020 முதல் கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் வாழ்வாதாரத்துக்கான அடிப்படை உதவிகளை ஐந்தாவது மாதமாக செய்து வருகிறது

மக்களை ஆளும் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்புகள், அதனை அமுல்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துவருகிறது. மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லாததுடன் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணங்கள் முழுமையாக அனைத்து மக்களுக்கும் இன்றுவரை சென்றடையவில்லை. இந்த சூழ்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஏப்ரல் முதல் ஒவ்வொரு மாதமும் தனது உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும், மளிகை சாமான் மற்றும் பண உதவியை மாதந்தோறும் வழங்கிவருகிறது அம்மா மூவி அசோசியேஷன்.150 நாட்கள் கடந்த நிலையில் சினிமா படப்பிடிப்புகள், திரையரங்குகள் தொடங்கப்படவில்லை இதனால் இத்துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நெருக்கடிக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில்தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை சாமான்களை வழங்கி வருவது திரைத்துறையினர் மத்தியில் விவாதப்பொருளாகி வருகிறது.இது சம்பந்தமாக அம்மா மூவி அசோசியேஷன் செயலாளர் சரவணனிடம் பேசியபோது, “தமிழ் சினிமாவில் வருடந்தோறும் 200 திரைப்படங்கள் வரை தயாரிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன. சுமார் 2000 கோடி மதிப்புள்ள இந்த படங்களின் தமிழக வியாபாரம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, வட இந்தியா, வெளிநாட்டு விநியோக உரிமை, ஆடியோ உரிமை, ரீமேக் உரிமை என வியாபாரம் செய்வதற்கு சரியான நபர்களை அடையாளம் காண தயாரிப்பாளர்களுக்கு பாலமாக இருப்பவர்கள் ஃபிலிம் மீடியேட்டர்கள்.

இவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது தமிழ் சினிமாவிற்கு முக்கியமானது. எங்களது இந்த முயற்சிக்குத் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்கள் , திரையரங்க உரிமையாளர்கள்என பலதரப்பினரும் தாராளமாக உதவி செய்து வருகின்றனர். அதனை ஒருங்கிணைக்கும் பணிகளை மட்டுமே நாங்கள் செய்து வருகிறோம்” என்றார்.

Related posts

Leave a Comment