இன்சிடியஸ் – அவுட் ஆஃப் தி ஃபர்தர் விமர்சனம்

இன்சிடியஸ் தொடர் பட வரிசையில் வந்திருக்கும் ஆறாவது படமாகும். ஆனால், ஒரு தனிப்படமாகவும் இதைப் பாவிக்கலாம். முந்தைய படங்களைப் பார்த்தே இருக்கவேண்டிய அவசியமில்லை. ஃபர்தர் என்பது இறந்தவர்கள் வசிக்கும் இடமாகும். ஃபர்தருக்கும் பூமிக்கும் பயணிக்கக்கூடிய சக்தியைப் பெற்றவராக கெம்மா இருக்கிறார். அவரால் ஃபர்தரில் இருந்து ஒரு பொருளைப் பூமிக்கும், பூமியில் இருந்து ஒரு பொருளை ஃபர்தருக்கும் கொண்டு செல்ல முடியும். இதை அறிந்து கொள்ளும் ஃபர்தரில் வாழும் சைரஸ் எனும் கொடும் ஆத்மா, கெம்மாவின் உதவியோடு தன் பின்தொடர்பாளர்களுடன் பூமிக்கு நிரந்திரமாக வர நினைக்கிறது. அதனால் சைரஸ், கெம்மாவை ஆட்கொள்கிறது. எப்படி அதிலிருந்து கெம்மாவும், அவரது மகள் மாயாவும் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. துர்கனவுகளால் பாதிக்கப்படும் கெம்மாவிற்கு உதவியாக எலைஸ் எனும் பாத்திரத்தில் லின் ஷயே நடித்துள்ளார். “இதைத்தான் நான் செய்கிறேன்” என ஃபர்தரில் இருந்து…

Read More

Where Love Meets Chaos – ஆகஸ்ட் 28 முதல் Sony LIV-ல் வெளியாகிறது ‘அன்பே டயானா’.

காதல்,சிரிப்பு, குழப்பம் என இருவேறு உலகங்களை ஒன்றிணைத்த ஒரு அழகான கதை தற்போது உங்கள் இல்லங்களை தேடி வருகின்றது. காதல், குடும்பம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை புதுமையான கோணத்தில் கொண்டு வந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற அன்பே டயானா, ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV-ல் பிரத்யேகமாக டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது. கலகலப்பான, சுத்தமான, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய feel-good ரொமாண்டிக் காமெடியாக இப்படம் பாராட்டுகளை பெற்றது. இதில் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை அழகாகக் கலந்து ஒரு அழகான அனுபவத்தை தருகின்றது. சென்னையின் பரபரப்பான பெரம்பூர் பின்னணியில் உருவாகியுள்ள அன்பே டயானா, பழமைவாத குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் சுதந்திரமான சிந்தனையுடன் வாழும் ஆங்கிலோ-இந்திய பெண் ஒருவர் நுழையும் போது ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களைச் சொல்கிறது இந்த படம். மாறுபட்ட இரு உலகங்கள் ஒன்றிணையும்போது,…

Read More

பிரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி- Vadhandhi; The Mystery of Mani

மதுரையிலிருந்து சர்வதேச அரங்கத்திற்கு…! ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணைய தொடர், ப்ரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத்தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான அசல் சஸ்பென்ஸ் திரில்லர் இணைய தொடரான ‘வதந்தி : தி மிஸ்டரி ஆஃப் மணி’- ப்ரைம் வீடியோவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் ஸ்கிரிப்டட் ( Scripted) வகை படைப்புகளில் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரின் சாராம்சத்தை தக்க வைத்துக்கொண்டு, முற்றிலும் புதிய மர்மம் – நடிகர்கள்- மதுரை பின்னணியுடன் தொடங்கிய இந்த இணைய தொடரின் இரண்டாவது பாகம்.. இத்தகைய சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. தமிழ் மொழியில் வெளியாகி தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழிமாற்றம்…

Read More

நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் அப்துல் லீ. இரண்டு பழம்பெரும் ஆளுமைகளான ஸ்டான் லீ மற்றும் ஸ்பைக் லீ ஆகியோரின் பெயர்களால் ஈர்க்கப்பட்டு, தனது பெயரில் ‘லீ’ என்பதை இணைத்துக் கொண்டார். யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்கள் மூலம் நடிப்புத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கியவர் அப்துல் லீ. இங்கு தனது காமெடி டைமிங் மற்றும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றார். திரைத்துறையில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி மற்றும் பாலையா ஆகியோரை தனது இன்ஸ்பிரேஷன் என்கிறார் அப்துல் லீ. நகைச்சுவை கதாபாத்திரங்களுக்குள்ளேயே எதிர்மறையான சாயல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி, அதே நேரத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்த அவர்களின் திறமையை மிகவும் ரசிப்பதாகக் கூறுகிறார். வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவரான அப்துல் லீ, பி.இ. பட்டம் பெற்றவர். இதுவரை சுமார் 35க்கும் மேற்பட்ட…

Read More

தென்னிந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய நடிகை செளகார் ஜானகி தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார்!

இந்தியத் திரையுலகின் காலத்தால் அழிக்க முடியாத மகத்தான அத்தியாயம் இன்று முடிவுக்கு வந்தது! ஒரு நடிகை என்பதைக் கடந்து, கண்ணியம், அறிவுத்திறன் மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய மாபெரும் கலைஞராக பல தலைமுறை ரசிகர்களுக்கும் நடிகை செளகார் ஜானகி திகழ்ந்தார். அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார். திரையுலகின் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாகத் தொடங்கி, பின்னர் தனது முதிர்ச்சியான நடிப்பால் மறக்க முடியாத குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று, உண்மையான கலைத்திறன் என்பது வயது, தோற்றம் அல்லது எந்தவொரு வரையறைக்கும் உட்பட்டது அல்ல என்பதை சௌகார் ஜானகி நிரூபித்தார். அவரது குரல், முகபாவனைகள் மற்றும் திரை ஆளுமை ஆகியவை ஒரு காட்சியையே தன்வசப்படுத்தும் அளவுக்கு வலிமையானவை. தென்னிந்தியத் திரையுலகின் அடித்தளத்தை உருவாக்கிய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்களில் ஒருவர் அவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள…

Read More

A Powerhouse  Trio : Tamil Idol முதல் சீசனை மதிப்பிடும் இசை வல்லுநர்களை சந்தியுங்கள்! மேடை தயாராகிவிட்டது, தமிழ்நாட்டின் அடுத்த சிறந்த பாடகரைத் தேடும் Tamil Idol நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

பிரபலமான Indian Idol நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பாடகர் கார்த்திக், பாடகர் பென்னி தயாள், நடிகையும் பாடகியுமான Andrea Jeremiah ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூவரும் தங்களது இசை அனுபவத்தின் மூலம் புதிய பாடகர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு வழிகாட்ட இருக்கின்றனர்.. கார்த்திக்(karthik) கூறுகையில், “தமிழ்நாட்டில் பல திறமையான பாடகர்கள் இருக்கின்றனர். Tamil Idol மூலம் இதுவரை வெளிவராத பல சிறந்த குரல்களை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகின்றேன். புதிய பாடகர்களின் திறமையை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதில் நான் மிகவும் ஆவலாக இருக்கின்றேன். A.R. ரஹ்மான் சார் தலைமையில் இந்தப் பயணத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.” பென்னி தயாள்(Benny Dayal) கூறுகையில் “நான் ஏற்கனவே பலமுறை Hindi Idol நிகழ்ச்சியில் பணியாற்றியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிய திறமைகளைப் பார்க்கும்போது ஆச்சரியம்…

Read More

திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் 90ஸ் கிட்ஸ் எதிர்கொள்ளும் சிக்கல்களை சுவாரசியமாக சொல்லும் திரைப்படம்

முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM) எனும் திரைப்படத்தை எழுதி இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிபிரியா நாயகியாக நடிக்க, ஷீபா கிறிஸ்டி, அருள் டி. ஷங்கர் மற்றும் எலிசபெத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரபு ஏகாம்பரம், “90ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இப்படம் சுவாரசியமாக சொல்லும். நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை திரையில் பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம்,” என்றார். ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க, அபிஷேக் ஒளிப்பதிவை கையாளுகிறார். படத்தொகுப்பு: சூரிய முருகன்; பாடல்கள்: வி.ஜெ.பி. ரகுபதி; இயக்குநர்…

Read More

வரவேற்பைக் குவிக்கும் ‘ஹாய்’ பட டிரெய்லர்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. காதல், ரொமான்ஸ், ஃபன், டிராமா மற்றும் காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு முழுமையான ரோம்-காம் டிராமாவாக இப்படம் உருவாகியிருப்பதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை முன்வைக்கிறது. குறிப்பாக, திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின், களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை கரம் பிடித்து, அவரைக் காதலிக்க வைக்கப் போராடும் காட்சிகள் டிரெய்லரில் கவனம் ஈர்க்கின்றன. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுடன் நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் என டிரெய்லர் முழுக்க சுவாரஸ்யமான அம்சங்கள் நிறைந்துள்ளன. மேலும், மறைந்த…

Read More

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்பஸ்டர் ஜனநாயகன், தளத்தின் மிகவும் சுவாரஸ்யமான பன்மொழித் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுக்கிறது. தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஜனநாயகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு வர தளம் தயாராகியுள்ளது. H. வினோத் இயக்கத்தில், மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த அரசியல் ஆக்‌ஷன் திரைப்படம் ஆகஸ்ட் 21 அன்று தமிழ் ZEE5-ல் பிரீமியர் ஆகிறது. மேலும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவின் நான்கு மொழிப் பார்வையாளர்களையும் இந்த பிரம்மாண்டமான திரை நிகழ்வு சென்றடைகிறது. ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படம் என்பதைத் தாண்டி, ஜனநாயகன் திரைப்படம் மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான இடத்தைப்…

Read More

நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்,ஆனால் அந்த கட்சியில் தற்போது இருக்கிறேனா.. இல்லையா.. என்பது கூட எனக்கு தெரியாது – நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி.

நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்,ஆனால் அந்த கட்சியில் தற்போது இருக்கிறேனா.. இல்லையா.. என்பது கூட எனக்கு தெரியாது,அதைவிட எனக்கு தமிழர் நலன் சார்ந்த பிரச்சனையே முக்கியம்- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் சுவாமி தரிசனம் செய்ய வந்த வந்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசுகையில்: கோட் பட தயாரிப்பாளர்,ஜனநாயகன்பட தயாரிப்பாளர்களுக்கு அரசில் பெரிய பொறுப்புகள் கொடுத்துள்ளனர், நான் தமிழக வெற்றி கழகத்தில் ஏதோ சேர்ந்தேன்,இதுவரையில் அமைதியாக தான் இருந்து கொண்டு உள்ளேன்,அந்தக் கட்சியில் இருக்கேனா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது. நான் எனது வேலையை பார்த்துக் கொண்டுள்ளேன். எனக்கு அதையெல்லாம் விட தற்போது கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது,காவல் நிலையங்களில் நடக்கும் கொலைகள் அடித்துக் கொல்லப்பட்ட…

Read More