‘சிறை’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களில் தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ள அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது வெளியாகவுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்படும் குழப்பங்கள் என கதையின் முக்கிய அங்கமாக இருக்கும் முதிர்ச்சியான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து நடிகை அனிஷ்மா அனில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான தன்மைதான் என்னை மிகவும் கவர்ந்தது. என்னுடைய கதாபாத்திரம் தனக்குள் நிறைய எண்ணங்களையும் உணர்வுகளையும் சுமந்து கொண்டிருந்தாலும் அவற்றை எல்லாம் வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு பெண் அல்ல. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதில் அழகு இருப்பதாக நான்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
MGM Healthcare Malar Removes Massive 890-Gram Brain Tumour, One of the Largest Ever Reported
The tumour was removed through a meticulous craniotomy, an open brain surgical procedure in which a section of the skull is temporarily removed to provide access to the brain. Before surgery, doctors performed specialised preoperative embolisation, an advanced, minimally invasive neurointerventional technique, to significantly reduce the tumour’s blood supply. Chennai, August 18, 2026: In a remarkable feat of modern neurosurgery and interventional neurology, a multidisciplinary team at MGM Healthcare Malar, Adyar, successfully removed a massive 890-gram brain tumour, one of the largest ever reported in clinical practice worldwide. The doctors…
Read Moreதமிழ் ஒரிஜினல் தொடரின் மொத்த பார்வை நேரத்தில் கிட்டத்தட்ட பாதி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது!
சென்னை, ஆகஸ்ட் 18, 2026: ஜியோஹாட்ஸ்டாரின் நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிக்ஷன் ஒரிஜினல் தொடராக ‘ரிசார்ட்’ உள்ளது. ஒளிபரப்பான நாள் முதல், எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வெளியாகும் எபிசோடுகள் மூலம் ‘ரிசார்ட்’ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பார்வையாளர்களிடமும் ‘ரிசார்ட்’ வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும்படியான கதைக்களங்கள், தங்களது சொந்த மொழி மற்றும் சந்தையைத் தாண்டியும் ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை ’ரிசார்ட்’ மீண்டும் நிரூபித்துள்ளது. ‘ரிசார்ட்’ தொடரின் மொத்த வாட்ச் டைமில் 53% தமிழக பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது. மீதமுள்ள…
Read Moreஎம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் அரிதான சாதனை ; மூளையில் 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய கட்டி வெற்றிகரமாக அகற்றம்!
மூளைக்குச் செல்லும் வழியை உருவாக்குவதற்காக மண்டை ஓட்டின் ஒரு பகுதியை தற்காலிகமாக அகற்றும் ஒரு நுட்பமான மண்டையோட்டுத் திறப்பு அறுவைசிகிச்சை (கிரானியோடமி) மூலம் இந்த மிகப்பெரிய கட்டி அகற்றப்பட்டது. • அறுவைசிகிச்சைக்கு முன்பு, கட்டியின் இரத்த ஓட்டத்தை கணிசமாகக் குறைப்பதற்காக குறைந்தபட்ச ஊடுருவலுடன் கட்டியை சுருங்கச்செய்வதற்கு இரத்தக்குழாய்களை அடைப்பதற்கான (எம்போலை சேஷன்) செய்யபட்டது. சிகிச்சை சென்னை, ஆகஸ்ட் 18, 2026: நவீன நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் நரம்பியல் தலையீட்டு மருத்துவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, அடையாறில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் பல்துறை நிபுணர்கள் குழு, மருத்துவ வரலாற்றில் உலக அளவில் இதுவரை பதிவான மிகப்பெரிய கட்டிகளில் ஒன்றான, 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய மூளைக் கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளது. சிக்கலான மண்டையோட்டுத்திறப்பு அறுவைசிகிச்சையின் மூலம் இந்தக் கட்டியை அகற்றுவதற்கு முன்னதாக, கட்டியை சுருங்கச்செய்வதற்கு…
Read More“எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்த தனது பயணம், நடிகர்கள் தேர்வின் முக்கியத்துவம் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் தனது முதல் படத்தை இயக்கிய அனுபவம் குறித்து வளர்ந்து வரும் புதிய தலைமுறை இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்துகொள்கிறார். தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை இயக்குநர்களின் வருகை தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. சிவகுமார் முருகேசன், அபிஷன் ஜீவிந்த், பாரி இளவழகன் உள்ளிட்ட புதிய தலைமுறை படைப்பாளிகள் தங்களுக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள ராஜா கருப்பசாமி, ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். வித்தியாசமான திருமணத்தை மையமாகக் கொண்டு, அதைச் சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை கதைக்களமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘மொத ராத்திரி’ உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன்…
Read More“திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”…‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!
சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. சில கதாபாத்திரங்கள் ஒரு நடிகரிடம் எதை எதிர்பார்க்கின்றன என்பதனால் மட்டுமல்லாமல், அவை தங்களுடன் கொண்டுவரும் உலகத்தினாலும் சிறப்பானதாக மாறுகின்றன. பிரியா பவானி சங்கரைப் பொறுத்தவரை, ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் அத்தகைய மறக்க முடியாத பயணமாக அமைந்துள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ளார். டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில்…
Read More“ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!
அரசுப் பள்ளி மாணவர்களை ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தைப் பார்க்க அழைத்துச் செல்லுமாறு தமிழ்நாடு அரசிடம் பரிந்துரைக்க உள்ளதாக சபாநாயகர் தகவல்! புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் அசாதாரண வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘ஜி.டி.என்.’ தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் பாராட்டைப் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள NFDC-யில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற சிறப்புத் திரையிடலைத் தொடர்ந்து, சபாநாயகர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்தத் திரையிடலில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி, அமைச்சர் கில்லி சரத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். திரைப்படத்தைப் பார்த்து நெகிழ்ந்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தைப் பார்த்து, ஜி.டி. நாயுடுவின் சாதனைகள் மற்றும் அவரது வாழ்க்கைப்…
Read Moreஆகஸ்ட் 15 முதல் Sony LIV செயலி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து தங்களது பாடல் திறமையை வெளிப்படுத்தலாம்
தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய பங்கு இருக்கும். கோயில் பாடல்கள், நாட்டுப்புற இசை, சினிமா பாடல்கள் முதல் சுயாதீன இசை வரை, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உலகம் கேட்க வேண்டிய ஒரு குரல் இருக்கின்றது அந்தக் குரல்களுக்கு தற்போது பெரிய மேடை கிடைத்து உள்ளது. உலகின் பிரபலமான பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘Tamil Idol’ நிகழ்ச்சியை முதல் முறையாக தமிழில் Sony Vizha அறிமுகப்படுத்துகிறது. Sony vizha மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து செயல்படவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி தற்போது ‘Tamil Idol’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இது இசை மற்றும் திறமையை மையமாகக் கொண்ட ஒரு புதிய பயணமாக இருக்கும். சிறந்த குரல் வளம், மேடை நிகழ்த்தும் திறன், தனித்துவமான திறமை ஆகியவற்றை கொண்டவர்களை…
Read Moreபிரபாஸின் ஃபௌஜி – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு
கிரியேட்டிவ் திரைப்பட இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தை நவீன் யெர்னேனி, Y. ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். டைட்டில் போஸ்டர், ப்ரீ-லுக், ஃபர்ஸ்ட் லுக் என இதுவரை வெளியான ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஃபௌஜி படக்குழு சுதந்திர தினத்தை முன்னிட்டு, வலுவான உணர்வையும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியா இன்று கொண்டாடி வரும் சுதந்திரத்தின் பின்னால் இருக்கும் தியாகத்தை மையப்படுத்தும் வகையில் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாளை படக்குழு பயன்படுத்தியுள்ளது. பொதுவாக சுதந்திர தினம் கொண்டாட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கும் நிலையில், இந்த போஸ்டர் அதற்கு முற்றிலும் மாறாக, போரினால் சிதைந்த ஒரு சூழலுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.…
Read Moreசாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன. வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில்…
Read More
